Reading Time: < 1 minute

கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு வகையான மதுபானங்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பால் பொருட்கள் ஆகியவற்றுக்கு அமெரிக்கா செவ்வாய்க்கிழமை (08) தடை விதித்தது. உலகவரைபடங்களை ஆராய்

Tamil Business Directory

இரு நாடுகளிடையே ஏற்கனவே கசப்பான நிலையில் இருந்த வர்த்தக மோதலைத் தீவிரப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.

செவ்வாய்க்கிழமை நள்ளிரவுக்குப் பின்னர் அமெரிக்கப் பொருட்கள் மீதான கனடாவின் பதிலடி நடவடிக்கையாக விதிக்கப்பட்ட மேலதிக வரிகள் நடைமுறைக்கு வந்ததைத் தொடர்ந்து, வெள்ளை மாளிகையின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட இந்த இறக்குமதித் தடைகள் செப்டம்பர் 29 அன்று அமுலுக்கு வருகின்றன.

பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கடந்த மாதம் சுமார் 20 பில்லியன் டொலர் மதிப்பிலான கனடியப் பொருட்கள் மீது அமெரிக்கா 50% சுங்க வரியை விதித்திருந்தது.

அதைத் தொடர்ந்தே கனடாவும் இந்த வரிகளை விதித்தது.

இந்த முறிவு நீண்டகால நட்பு நாடுகளுக்கு இடையிலான பிளவை அதிகப்படுத்தியுள்ளது.

தோல்வியடைந்த பேச்சுவார்த்தைகளுக்கு இரு தரப்பும் ஒருவரையொருவர் குறை கூறியுள்ளன.

மேலும், கனடாவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியுடனான உறவைக் குறைத்துக்கொள்ளுமாறு கனேடியப் பிரதமர் மார்க் கார்னி வலியுறுத்தவும், அமெரிக்கா-மெக்சிகோ-கனடா ஒப்பந்தத்தின் சாத்தியத்தன்மை குறித்த சந்தேகங்களை எழுப்பவும் இது வழிவகுத்துள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.