கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள ஈஸ்ட் ஜோரா-தவிஸ்டாக் பகுதியில் நிகழ்ந்த கொடூர சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வியாழக்கிழமை அதிகாலை 5:10 மணியளவில், கேசல் மற்றும் நெடுஞ்சாலை 59 சந்திப்பில் இவ்விபத்து நிகழ்ந்தது. ஒரு எஸ்.யு.வி காரும் பிக்கப் டிரக்கும் மோதிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
எஸ்.யு.வி காரை இயக்கிய லண்டன் நகரைச் சேர்ந்த 50 வயது நபர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
பிக்கப் டிரக்கை இயக்கிய கோர்ட்லேண்ட் பகுதியைச் சேர்ந்த 34 வயது நபர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்தைத் தொடர்ந்து, நெடுஞ்சாலை 59-ன் குறிப்பிட்ட பகுதி மூடப்பட்டு, சம்பவ இடத்தில் சிந்திய எரிபொருள் அகற்றப்பட்ட பிறகு நண்பகல் வேளையில் மீண்டும் போக்குவரத்துக்காகத் திறக்கப்பட்டது.
விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து நெடுஞ்சாலை 59-ன் பாதுகாப்பு குறித்த அச்சத்தை மீண்டும் ஏற்படுத்தியுள்ளது.
மே 2023-ல் இதே நெடுஞ்சாலைக்கு அருகில் நடந்த மற்றொரு விபத்தில் பள்ளிப் பேருந்து ஓட்டுநர் ஒருவரும் காவல்துறை அதிகாரியும் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.