Reading Time: < 1 minute
Tamil Business Directory
ஒன்டாரியோ மாகாணத்தில், பிரின்ஸ் எட்வர்ட் கவுண்டியில் இடம்பெற்ற சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாக ஒன்டாரியோ மாகாண காவல்துறை (OPP) தெரிவித்துள்ளது.
இந்த விபத்து திங்கட்கிழமை காலை (அக்டோபர் 13) சுமார் 8.15 மணியளவில், வெல்லிங்டன் அருகே உள்ள ஒரு நெடுஞ்சாலையில் இடம்பெற்றது.
காவல்துறை தகவலின்படி, கிழக்கு நோக்கி சென்றிருந்த ஒரு பிக்கப் லாரி சாலையை விட்டு விலகி மரங்களில் மோதியது. வாகனத்தில் ஒருவரே இருந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் வாகனத்திலிருந்து வெளியேறியிருந்தாலும், அருகிலுள்ள இடத்தில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர் க்வின்டே வெஸ்ட் (Quinte West) பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
காவல்துறை தற்போது விபத்து குறித்து மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகிறது.




