கனடாவின் ஒன்டாரியோ மாநிலத்தில் உள்ள போர்ட் பெர்ரி பகுதியில், 77 வயதான முதியவரிடம் முகவரி கேட்பது போல நடித்து, அவரிடமிருந்த சுமார் 12,000 டொலர் மதிப்பிலான அரிய தங்க நகைகளை மர்ம நபர்கள் திசைதிருப்பித் திருடிச் சென்றுள்ளனர்.
71 வயதான சூசன் பீட்சன் தனது நண்பர் பாப் (77) என்பவருடன் வீட்டில் இருந்தபோது, சாலையில் வந்த ஒரு காரில் இருந்த இருவர் மருந்துக்கடைக்குச் செல்ல வழி கேட்டுள்ளனர்.
பாப் அவர்களுக்கு வழி கூறியதும், “நன்றி” தெரிவிப்பதாகக் கூறி காரில் இருந்த நபர் போலி நகைகளைப் பரிசளிப்பது போல் நடித்துள்ளார்.
உரையாடலின் போது பாப்பின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியைக் கழற்றிவிட்டுப் போலிச் சங்கிலியை அணிவித்துள்ளனர்.
கார் புறப்பட்டுச் சென்ற சில நிமிடங்களிலேயே அவரது தங்கச் சங்கிலி மற்றும் பிரேஸ்லெட் திருடப்பட்டது தெரியவந்தது. திருடப்பட்ட சங்கிலி 20 ஆண்டுகளுக்கு முன்பு சூசனால் சிறப்பு வடிவமைப்பு செய்யப்பட்டு பாப்பிற்குப் பரிசளிக்கப்பட்ட ஒன்றாகும்.
அச்ச அச்சுக் கூடம் அழிக்கப்பட்டுவிட்டதால், உலகிலேயே அந்த ஒரு நகை மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது. டர்ஹாம் பிராந்திய காவல்துறையின் தகவல்படி, அப்பகுதியில் நடப்பு ஆண்டில் மட்டும் (ஆகஸ்ட் 26 வரை) 114 திசைதிருப்புத் திருட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
முன்பின் தெரியாத நபர்கள் திடீரென அணுகிப் பேச முயன்றால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அவர்கள் கை குலுக்குவதையோ, தொட்டுப் பேசுவதையோ அல்லது நகைகளைப் பரிசளிக்க முயல்வதையோ முற்றிலுமாக மறுக்க வேண்டும்.
சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையை உணர்ந்தால் உடனடியாக அவ்விடத்தை விட்டு விலகித் தற்காத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.