Reading Time: < 1 minute

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு டொராண்டோ காவல் அதிகாரியைச் சுட்டுக்கொன்ற குற்றவாளி கிளிண்டன் கெய்ல், தாக்கல் செய்த பிணை மனு 4-வது முறையாக மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

Tamil Business Directory

போதைப்பொருள் கடத்தல் சந்தேக நபர் ஒருவரைத் துரத்திச் சென்றபோது, 25 வயதான காவல் அதிகாரி டாட் பெய்லிஸ் தலையில் சுடப்பட்டுக் கொல்லப்பட்டார்.

இந்தச் சம்பவத்தின் போது அவருடன் இருந்த மற்றொரு காவல் அதிகாரியான மைக் லியோனும் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்தார்.

இக்குற்றத்திற்காக கிளிண்டன் கெய்ல் மீது முதலாம் நிலை கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் நிரூபிக்கப்பட்டு, 25 ஆண்டுகளுக்கு பிணை பெற முடியாத ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இவர் தற்போது பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள குறைந்த பாதுகாப்பு சிறையில் தனது தண்டனையை அனுபவித்து வருகிறார்.

குற்றவாளியின் பிணை மனு நிராகரிக்கப்பட்ட செய்திக்கு டொராண்டோ காவல்துறை சங்கம் வரவேற்பும் மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.