கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தைச் சேர்ந்த மார்க் ஜோடோயின் என்பவர், முறையான உரிமமின்றி ‘மூஸ்’ வகை மானை வேட்டையாடிய குற்றத்திற்காக 5,000 டொலர் அபராதமும், ஒரு ஆண்டு வேட்டையாடத் தடையும் விதிக்கப்பட்டுத் தண்டிக்கப்பட்டுள்ளார்.
அக்டோபர் 25, 2024 அன்று மாடாவா பகுதிக்கு அருகில் உள்ள முகாம் ஒன்றில் பாதுகாப்புக் அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, சட்டவிரோதமாகச் சுடப்பட்டுத் தொங்கவிடப்பட்டிருந்த ஆண் மூஸ் மானின் உடலைக் கண்டறிந்தனர்.
விசாரணையில் ஜோடோயினைக் கண்டறிந்த அதிகாரிகள், அவரிடம் அந்த மானின் தலை இருப்பதைக் கண்டுபிடித்தனர்.
ஆரம்பத்தில் மான் கிடைத்தது குறித்து முரணான தகவல்களைக் கூறிய அவர், பின்னர் அதைத் தானே வேட்டையாடியதாக ஒப்புக்கொண்டார்.
வேட்டையாடுவதற்கான உரிமையைக் கோர ஒரு அமைப்பின் உறுப்பினர் அட்டையை அவர் காண்பித்தார்.
ஆனால், ஒன்டாரியோ சட்டப்படி வேட்டையாடுவதற்கான மரபுவழி உரிமையை நிரூபிக்க அந்த அட்டை போதுமானது அல்ல என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
முறையான வேட்டை உரிமம் மற்றும் டேக் இல்லாததால், உரிமமின்றி பெரிய விலங்கை வேட்டையாடிய குற்றத்தை ஜோடோயின் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
இதைத் தொடர்ந்து ஏப்ரல் 23, 2026 அன்று நார்த் பே நீதிமன்றத்தில் அவருக்கு அபராதமும் வேட்டைத் தடையும் விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.