Reading Time: < 1 minute

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள கெலோனா நகரில், முதியோர்களுக்கான மின்சார ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த 97 வயது முதியவர் ஒருவர் பயணிகள் பேருந்து மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.

Tamil Business Directory

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1:30 மணியளவில், கெலோனாவில் உள்ள ‘பென்வூலின் வீதி’, ‘ராம்போன் வீதி’ சந்தை அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

ஸ்கூட்டரும் பேருந்தும் மோதிக்கொண்டதாகத் தகவல் கிடைத்ததையடுத்து, கெலோனா பொலிஸார் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

பேருந்து மோதியதில் படுகாயமடைந்த 97 வயது முதியவர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

இருப்பினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாகப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

முதியவர் விபத்துக்குள்ளான பென்வூலின் வீதியின் அந்தப் பகுதியில், சாலையையும் அதன் ஓரப்பகுதியையும் பிரிக்கும் வகையில் எந்தவொரு பாதுகாப்புத் தடுப்புச் சுவர்களோ அல்லது உயர்த்தப்பட்ட நடைபாதைகளோ அமைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து குறித்து கெலோனா பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் இதில் குற்றச் செயல்களோ அல்லது போதைப்பொருள்/மதுப் பயன்பாடோ காரணமில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.