Reading Time: < 1 minute

ரெறான்ரோவில் குண்டு பீதி ஏற்படுத்திய விவகாரம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ரொறன்ரோ ஸ்காப்ரோ பல்கலைக்கழகத்தில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வழங்கப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குண்டு வைக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்ட இரண்டு கட்டடங்களில் தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த கட்டடமொன்றிலிருந்து சந்தேகத்திற்கு இடமான பொருள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த மர்மப்பொருளை ரோபோ ஒன்றின் மூலம் சோதனையிடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மர்மப் பொதியில் வெடிபொருட்களுக்கு நிகரான பொருட்கள் காணப்படுவதாக அடையாளம் காணப்பட்ட காரணத்தினால் அந்தப் பொதி தொலைவில் இருந்து வெடிக்கச் செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.