Reading Time: < 1 minute

கனடாவின் கியூபிக் மாகாணத்தின் எல்லை பகுதியில் பெண் ஒருவர் காட்டில் குழந்தையை பிரசவித்துள்ளார்.

கனடாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் அமெரிக்காவிற்கு பிரவேசிக்க முயன்ற பெண்ணே இவ்வாறு குழந்தையை பிரசவித்துள்ளார்.

இளம் குடும்பம் ஒன்று சட்டவிரோதமான முறையில் கனடாவில் இருந்து அமெரிக்காவிற்கு பிரவேசிக்க முயற்சித்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

குறித்த பெண் பிரசவ வலியினால் அவதியுறுவது தொடர்பில் போலீஸ் அவசர அழைப்பிற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

காட்டில் பிறந்த குழந்தையும் தாயும் நலமாக இருக்கின்றனர் என போலீசார் தெரிவிக்கின்றனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நோயாளர் காவு வண்டி ஊடாக தயையும் சேயையும் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது பற்றிய தகவல்களை வெளியிட முடியாது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கனடாவின் சட்டத்தின் பிரகாரம் நாட்டில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் குடியுரிமை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.