Reading Time: < 1 minute

கனடாவில் போலி ஆவணங்கள் சமர்ப்பித்த இலங்கைத் தமிழர் ஒருவர் கனடா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒன்றாரியோவில் விட்சர்ச்-ஸ்டௌஃப்வில்லே பகுதியை சேர்ந்த 31 வயதான கபிலரசு கருணாநிதி என்ற இலங்கைத் தமிழரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பிக்கரிங் பகுதியில் போலி இலங்கை கடவுச்சீட்டு மூலம் வங்கிக் கணக்கு ஒன்றை ஆரம்பிக்க முயன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இலங்கை கடவுச்சீட்டைப் பயன்படுத்தி வங்கி கணக்கு ஒன்றை ஆரம்பிக்க முயற்சித்ததாகவும், அது மோசடியானது என கண்டுபிடிக்கப்பட்டதாகவும் டர்ஹாம் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்த பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வருகைத் தந்துள்ளனர்.

இதன்போது போலியான இலங்கை கடவுச்சீட்டு, முற்றிலும் போலியான ஆவணம், வருமானம் பெறுவதற்கான மோசடி ஆவணங்கள் போன்றவற்றை அவர் வைத்திருந்தார் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இலங்கையர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கப்படுகின்றது.