Reading Time: < 1 minute

கனடாவின் ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் தீவிரவாத குற்ற செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் அடிப்படையில் தந்தையும் மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கனடிய பொலிஸார் குறித்த இருவரையும் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பில் கனடிய பொலிஸார் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

இந்த கைது நடவடிக்கை தொடர்பில் மேலதிக விபரங்கள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

என்ன விதமான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த நபர்கள் கைது செய்யப்பட்டனர் என்பது குறித்து தகவல்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

தொடர்பிலான தகவல்களை வெளியிடும் நோக்கில் விசேட ஊடக சந்திப்பு ஒன்று நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.