Reading Time: < 1 minute

கனடாவின் யோர்க் பிராந்தியத்தில் இரண்டு வீடுகளுக்கு தீ மூட்டிய சந்தேக நபர்கள் இருவரை போலீசார தேடி வருகின்றனர்.

இந்த தீமூட்டல் சம்பவம் குறித்த காணொளி பதிவுகள் வெளியாகி உள்ளன.

யோக் பிராந்திய போலீசார் குறித்த இரண்டு சந்தேக நபர்கள் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

யோர்க் பிராந்தியத்தின் டாக்டுராங்கோ வீதி பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த இரண்டே நபர்களும் வாகனம் ஒன்றில் இருந்து எரிபொருட்களை எடுத்து வீடுகள் மீது ஊற்றி தீமூட்டி சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்த காணொளிகள் பதிவாகப் பதிவாகியுள்ளன.

இந்த சம்பவத்தில் எவரும் காயம் அடையவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

கருப்பு ஆடை அணிந்து முக கவசங்களை அணிந்த இருவரே இந்த தாக்குதலையும் மேற்கொண்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தகவல்கள் தெரிந்தால் போலீசாருக்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.