Reading Time: < 1 minute

கனடாவின் நியூ பிரவுன்ஸ்விக் மாகாணத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

நியூ பிரவுன்ஸ்விக் மில்கோவ் பகுதியில் இந்த வாகன விபத்து இடம் பெற்றுள்ளது.

மில்க்கோவ்வின் அதிவேக நெடுஞ்சாலையில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஒற்றை வாகனமொன்று இவ்வாறு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த வாகனத்தின் டயர் ஒன்று வாகனத்திலிருந்து கழன்ற காரணத்தினால் குறித்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.

19 வயதான ஆண் ஒருவரும் 23 வயதான இரண்டு பெண்களும் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

சம்பவ இடத்திலேயே இந்த மூவரும் உயிரிழந்து விட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வாகன விபத்தின் போது குறித்த நபர்கள் வாகனத்திலிருந்து தூக்கி எறியப்பட்டு உயிரிழந்தனர் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த வாகனத்தின் சாரதி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு உயிர் ஆபத்து கிடையாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.