Reading Time: < 1 minuteஇலங்கையின் அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு புதிய வெளிநாட்டு நேரடி முதலீடுகளை கொண்டுவருவதற்கு அமெரிக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். அமெரிக்க வர்த்தக சம்மேளனத்தின் வருடாந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்தார். இலங்கையில் உள்ள அமெரிக்க வர்த்தக சம்மேளனத்தின் 32வது வருடாந்த பொதுக்கூட்டம் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் தலைமையில் கொழும்பில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமெரிக்க வர்த்தகRead More →

Reading Time: < 1 minuteபாடசாலைகளில் இடம்பெறும் விசேட நிகழ்வுகளுக்குப் பெற்றோரிடமிருந்து பணம் அறவிடக் கூடாது எனக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அனைத்து மாகாண கல்வி செயலாளர்கள், வலய கல்வி அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட தரப்பினருக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளில் இடம்பெறும் சிறுவர் தினம், ஆசிரியர் தினம் போன்ற விசேட நிகழ்வுகளுக்காகப் பெற்றோரிடமிருந்து பணம் அறவிடுவது தொடர்பில் கல்வி அமைச்சுக்கு முறைப்பாடு கிடைக்கப்பெறுவதால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteகொழும்பு, ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் உள்ள சர் பாரன் ஜயதிலக்க மாவத்தை மற்றும் ஜனாதிபதி மாவத்தை இன்று (27) முதல் பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் உத்தரவுக்கமைய இந்த வீதிகள் திறக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteகல்விக்காக அதிக ஒதுக்கீடுகளை ஒதுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கல்வி அமைச்சு மற்றும் பரீட்சை திணைக்களம் தொடர்பில் மக்கள் மத்தியில் எழுந்துள்ள அவநம்பிக்கையை நீக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்ததாக பிரதமர் மேலும் சுட்டிக்காட்டினார். இதுவரை காலதாமதமாகி வரும் அனைத்து தேர்வு முடிவுகளையும் வெளியிடுமாறு பரீட்சை திணைக்கள அதிகாரிகளுக்கு பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார். இதேவேளை,பாடசாலை நிகழ்வுகளுக்கு அரசியல்வாதிகளை அழைத்து வருவதை உடனடியாகRead More →

Reading Time: 2 minutesஜனாதிபதி தேர்தலின் வெற்றியின் உரிமையை நம் நாட்டின் அனைத்து மக்களுக்கும் அர்ப்பணிக்க விரும்புவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று (25) இரவு நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றிய போது ஜனாதிபதி இதனை தெரிவித்தார். பல தசாப்தங்களாக நாம் எழுப்பிய குரலுக்கு மெது மெதுவாக ஆனால் சீராக செவிசாய்த்து, நாங்கள் முன்வைத்த வேலைத்திட்டத்திற்கு உயிர்மூச்சாக இருந்த இந்நாட்டு மக்கள் அனைவருக்கும் எங்களது கௌரவத்தைத் தெரிவிக்கிறோம். எங்கள் வேலைத்திட்டத்தில்Read More →

Reading Time: < 1 minuteஇலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற அநுரகுமார திசாநாயக்காவுடன் இணைந்து பணியாற்றுவதற்குத் தயாராகவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியம் கடன் உதவியை வழங்கி வருகின்றது. இந்தநிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதோடு, புதிய அரசாங்கத்துடன் பணியாற்றத் தயாராகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் மூன்றாவது மதிப்பாய்வுRead More →

Reading Time: < 1 minuteஇந்த மாதத்தின் முதல் 11 நாட்களில் மாத்திரம் 44,000ற்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்குப் பிரவேசித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த காலப்பகுதியில் 44,977 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்தியாவிலிருந்தே அதிகளவான சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதுடன், பிரித்தானியா, ஜேர்மனி, சீனா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்தும் சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்குப் பிரவேசித்துள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது. ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteதெற்காசியாவில் முதன் முறையாக இலங்கையில் Air- Ship சேவையை ஆரம்பிக்கும் ஒப்பந்தம் சர்வதேச Air Space நிறுவனத்தின் தலைவர் ஷுகரேவ் செர்ஜி நிகோலாவிச்க்கும், கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்திற்கும் இடையில் இன்று ஆளுநர் தலைமையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தின் சுற்றுலா துறையை மேலும் அபிவிருத்தி செய்யும் நோக்கில் இவ்வொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. திருகோணமலையில் உள்ள நிலாவெளி,மட்டக்களப்பில் உள்ள பாசிக்குடா, அம்பாறையில் உள்ள அருகம்பே போன்ற சுற்றுலா தளங்களின் இயற்கை அழகை ரசிக்கும்Read More →

Reading Time: < 1 minuteஇந்த வருடத்தில் நாட்டிற்கு வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 14 லட்சத்தை நெருங்கியுள்ளது அதன்படி ஜனவரி முதலாம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,395,773 என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. மேலும், ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் 200,000 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைRead More →

Reading Time: 2 minutesமாண்புமிகு மன்னர் மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவைக் குறிக்கும் முதல் கனடிய கௌர பதக்கம் கனேடிய அரசால் தமிழர்களான கணேசன் சுகுமார், குலா செல்லத்துரை ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. முடிசூட்டு பதக்கம் என்பது மாட்சிமை பொருந்திய மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழாவைக் குறிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட கனடிய கௌரவமாகும். கனடாவிற்கும் அவர்களின் சொந்த மாகாணத்திற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தவர்களை அங்கீகரிக்கிறது. கனடாவின் கவர்னர் ஜெனரல் மேரி சைமன் அவர்களால்Read More →

Reading Time: < 1 minuteதமிழ் இனப்படுகொலை கல்விவாரச்சட்டத்திற்கு எதிராக இலங்கையை சேர்ந்த குழுக்கள் தாக்கல் செய்த மனுவை கனடாவின் மேல்முறையீட்டு நீதிமன்றம் , நிராகரித்துள்ளதுடன் இனப்படுகொலை கல்விவாரச்சட்டம் கனடாவின் அரசமைப்பிற்குட்பட்டது என தெரிவித்துள்ளது. கனடா நீதிமன்றம் , இனப்படுகொலை கல்விவாரச்சட்டம் கனடாவின் அரசமைப்பிற்கு உட்பட்ட விடயம் என தெரிவித்ததை தொடர்ந்து இலங்கை கனடா செயற்பாட்டு கூட்டமைப்பு என்ற அமைப்பு இதற்கு எதிராக மேல்முறையீடு செய்திருந்த நிலையிலேயே மேல்முறையீட்டு நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. இனப்படுகொலைRead More →

Reading Time: < 1 minuteயாழ்ப்பாண சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றையதினம் மாவட்டச் செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலைய அபிவிருத்திக்கான நீர் வசதிகள், மின்சார வசதிகள், காணி அபிவிருத்தி மற்றும் சுற்றுலா அபிவிருத்தி போன்ற விடயங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டன. இக்கலந்துரையாடலில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்ட செயலாளர், தெல்லிப்பளைRead More →