Reading Time: < 1 minuteஇலங்கைக்கு சென்ற கனடா நாட்டு சிறார்கள் இருவரை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறப்படும் சுற்றுலா வழிக்காட்டி ஒருவரை தேடி இலங்கை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கனடாவை சேர்ந்த 16 வயதான சிறுமியும் ,சிறுவனும் அவர்களது, தந்தையுடன் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளனர். சுற்றுலாவழிகாட்டியின் மோசமான செயல்சுற்றுலாவின் போது, கொஸ்கொடையில் இருந்து காலி கோட்டையை பார்வையிடுவதற்காக வேனில் பயணித்துள்ளனர். இதன்போது இரண்டு சிறுவர்களையும் சுற்றுலா வழிகாட்டி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக பொலிஸார்Read More →

Reading Time: < 1 minuteமொஸ்கோவில் உள்ள இலங்கைத் தூதரகம், முதன்முறையாக ரஷ்ய கூட்டமைப்பில் உள்ள இலங்கை திறன்மிக்க புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நேரடி வேலை வாய்ப்புகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இலங்கையின் முழு அரச நிறுவனமான இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரகத்துடன் (SLFEA) இணைந்து வேலை வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. இலங்கையின் திறமையான தையல்காரர்களுக்கு மேலும் 700 வேலை வாய்ப்புகளை வழங்குவதற்காக Nizhny Novgorod இல் உள்ள பிராந்திய அரசாங்க அதிகாரிகளுடன் முறையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் தூதரகம்Read More →

Reading Time: < 1 minuteஜப்பான் அரசின் நிதியனுசரனையுடன் ஜப்பானிய தூதுவராலயத்தினால் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு இரண்டு நோயாளர் காவு வண்டிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன. மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையில் இன்றைய தினம் இந்நிகழ்வு இடம்பெற்றது. இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகொசி மற்றும் அவரது தூதரக அதிகாரிகள் இணைந்து இதனை வழங்கி வைத்த நிலையில் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையினரால் யாழ் இசைக்கருவி நினைவு சின்னமாக வழங்கப்பட்டு தூதுவர் கௌரவிக்கப்பட்டார். தொடர்சியாக மூளாய் வைத்தியச்லையின் அனைத்து வசதி வாய்ப்புக்கள்Read More →

Reading Time: < 1 minuteநல்லூர் கந்தசுவாமி கோயில் மஹோற்சவ திருவிழாவில் சிறுவர்களை வைத்து சாகச நிகழ்ச்சிகளை நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற சிறுவர் அபிவிருத்தி குழுக் கூட்டத்திலேயே இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteசர்வதேச நாணய நிதியம் முன்னறிவித்துள்ள 03 வீத சுருக்கத்தை விட வலுவான பொருளாதார செயற்பாட்டை இலங்கை அடைய முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். தனியார் துறையின் வட்டி வீதங்கள் மேலும் குறைய வேண்டும் என கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் உண்மையான பொருளாதாரத்தின் மீது நிதிக் கொள்கையின் பரிமாற்றம் இதுவரை சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என மத்திய வங்கியின் ஆளுநர்Read More →

Reading Time: < 1 minuteஇந்தமாதம் முதல் பண்டமாற்று ஒப்பந்தத்தின் கீழ் ஈரானுக்கான தேயிலை ஏற்றுமதியை ஆரம்பிப்பதற்கு இலங்கை எதிர்ப்பார்த்துள்ளது. 2012ம் ஆண்டு ஈரானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெய்க்காக பண்டமாற்று ஒப்பந்ததின் படி, தேயிலை ஏற்றுமதிக்காக 2021ம் ஆண்டு ஒப்புக் கொள்ளப்பட்டிருந்தது. இந்தநிலையில், கடந்த ஆண்டு நாட்டில் ஏற்பட்ட நெருக்கடி நிலைமைகளை காரணமாக அது தாமதமாகியது. இந்த விடயம் தொடர்பில், இலங்கை கனியவள கூட்டுத்தாபனத்துடன் விரைவில் ஒப்பந்தம் செய்தப் பின்னர், தேயிலை ஏற்றுமதிக்கு தேவையானவற்றைRead More →

Reading Time: < 1 minute37 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் ராமேஸ்வரத்திலிருந்து பயணிகள் கப்பல்கள் செல்வதற்கு வசதியாக தலைமன்னார் துறைமுகத்தை மீண்டும் அமைக்க துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது. வடக்கில் இடம்பெற்ற மோதல்களின் போது இந்த துறைமுகம் அழிக்கப்பட்டதுடன், கைவிடப்பட்டது. இதன்படி, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் பணிப்புரையின் கீழ், கப்பலை மீள நிர்மாணிக்கும் பொறுப்பு இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு வழங்கப்பட்டுள்ளது. முதலீட்டின் மதிப்பிடப்பட்ட செலவு ரூ. 1,800 மில்லியன்.Read More →

Reading Time: < 1 minuteகட்டுநாயக்க விமான நிலையத்திற்கும் அபுதாபி விமான நிலையத்திற்கும் இடையில் குறைந்த கட்டண விமான சேவையை ஆரம்பிப்பதற்கு இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகாரசபை சான்றிதழை வழங்கியுள்ளது. எயார் ஏசியா – அபுதாபி ஏர்லைன் நிறுவனத்திற்கு நேற்று விமான நடவடிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார். இதன்படி இந்த விமான நிறுவனம் எதிர்வரும் செப்டம்பர் மாதத்தின் நடுப்பகுதியில் இருந்து தனது விமானச் சேவையை ஆரம்பிக்கவுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. ShareTweetPin0Read More →

Reading Time: < 1 minuteயாழ் நகர்ப் பகுதியில், முச்சக்கர வண்டித் தரிப்பிடத்தில் இருந்து கட்டணமானி பொருத்தாத முச்சக்கர வண்டிகளை அகற்றும் நடவடிக்கையில் போக்குவரத்துப் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். யாழ் நகர் பகுதியில் இன்றைய தினம் காலை முதல் பொலிஸார் குறித்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். யாழ் மாவட்டத்தில் பெரும்பாலான முச்சக்கர வண்டிகளில் கட்டணமானி பொருத்தப்படாமையினால் மக்களிடம் அதிகளவில் கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாகப் போக்குவரத்துப் பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இதனையடுத்து யாழ் மாவட்டத்தில் ஓகஸ்ட் மாதம்Read More →

Reading Time: < 1 minuteவட மாகாணத்தில் இரண்டாவது தென்னை முக்கோண வலையத்தை ஆரம்பிக்கவுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். செப்டம்பர் 02 ஆம் திகதி கொண்டாடப்படும் உலக தென்னை தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் முல்லைத்தீவை மையமாக கொண்டு வடRead More →