Reading Time: 2 minutesசிகிச்சைக்கு வந்த நோயாளி ஒருவர் தன்னை அச்சுறுத்தி பாலியல் உறவு கொள்ள வைத்ததாக கனடாவின் ரொறொன்ரோ மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரியும் தீபா சுந்தரலிங்கம் என்பவர் தெரிவித்துள்ளார். புற்றுநோய் சிகிச்சைக்கு வந்த நோயாளியுடன் தகாத உறவில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் கடந்த ஜனவரி மாதம் அவரது மருத்துவர் உரிமம் பறிக்கப்பட்டது. தற்போது தன்மீதான குற்றச்சாட்டை தீபா மறுத்துள்ளார். அத்துடன் தன்னிலை விளக்கத்தையும் அவர் அளித்துள்ளார். “சிகிச்சைக்காக வந்த ஒருவர் என்னைRead More →

Reading Time: < 1 minuteமொன்ட்ரியலில் மூவரைக் கொலை செய்ததாகச் சந்தேகிக்கப்படும் இரண்டு இளைஞர்களைத் தேடும் பணியில் கனேடிய விமானப் படையும் ஈடுபட்டு வருகின்றது. குறித்த 18 மற்றும் 19 வயது மதிக்கத்தக்க சந்தேகநபர்கள் கடந்த ஒரு வாரமாக தலைமறைவாகியுள்ளனர். அடர்ந்த காட்டுப் பகுதியில் அவர்களைத் தேட மோப்பநாய்கள், ஆளில்லா வானூர்திகள், கவச வாகனகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இருவரும் மாறுவேடத்தில் தப்பியோடியதாக சந்தேகம் வௌியிடப்பட்டுள்ளது. சம்பவ இடத்திலிருந்து சுமார் 1,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமத்தில் இருவரும்Read More →

Reading Time: < 1 minuteஒன்ராறியோவில் ஆண் ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளாகி பின்னர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்த விசாரணைகளை பொலிஸார் விரிவுப்படுத்தியுள்ளனர். லோவ்ரன்ஸ் அவனியூ மற்றும் டொன் வெலி பார்க்வே பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து தீக் காயஙகளுக்கு உள்ளான நிலையில், ஆணொருவர் மருத்துவமனைக்கு கொண்டுச்செல்லப்பட்டார். எனினும், அவர் உயிரிழந்து விட்டார். பின்னர் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணையில், உயிரிழந்தவர் காலமான முன்னாள் ஒன்ராறியோ மாநில சுகாதார அமைச்சர்Read More →

Reading Time: < 1 minuteரொரன்ரோ பியர்சன் சர்வதேச விமானநிலையம் ஊடாக மேற்கொள்ளப்ப்ட்ட பாரிய போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கை தொடர்பில் இரகசிய விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுத்துவந்த கனேடிய மத்திய காவல்துறையினர், குறித்த இந்த கடத்தல் தொடர்பில் சண் விங் பயணிகள் விமானப் பணியாளர்கள் இருவர் உள்ளிட்ட 11 பேரைக் கைது செய்துள்ளனர். “புரஜெக்ட் வூட்கிராஃப்ட்” எனப் பெயரிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டுவந்த இநத இரகசிய நடவடிக்கையின் தொடர்ச்சியாக, கடந்த வாரம் ஹமில்ட்டன், ரொரன்ரோ, பிரான்ட்ஃபோர்ட், கிச்சனார் மற்றும்Read More →

Reading Time: < 1 minuteபிரம்டனில் அமைந்துள்ள பழைய உலோக சேகரிப்பு இடம் ஒன்றில் நேற்று இரவு பாரிய தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. நெடுஞ்சாலை 407ற்று வடக்கே Intermodal Driveவில் அமைந்துள்ள குறித்த அந்த இடத்தில் நேற்று இரவு 6.11 அளவில் இந்த தீப்பரவல் ஏற்பட்டதாகவும், தகவல் அறிந்து தாம் சம்பவ இடத்தினைச் சென்றடைந்த வேளையில், அந்த இடம் முழுவதும் கரும்புகையினால் மூடப்பட்டிருந்ததாகவும் அவசர மீட்பு அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். இந்தத் தீப்பரவல் காரணமாக அந்தப் பகுதியில்Read More →

Reading Time: < 1 minuteநேற்று இரவு டூர்ஹம் பிராந்தியத்தில், நெடுஞ்சாலை 407இன் மேற்கு நோக்கிய வழித்தடத்தில் பல்வேறு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் பலியானதுடன், மேலும் நால்வர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நெடுஞ்சாலையில் Lakeridge வீதிப் பகுதியில் நேற்று இரவு எட்டு மணியளவில் இந்த விபத்து நேர்ந்ததாகவும், கிழக்கு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த வாகனம் ஒன்று, நெடுஞ்சாலையின் நடுத் தடுப்பினைக் கடந்து சென்று மேற்கு நோக்கிய தடத்தில் பயணித்துக் கொண்டிருந்த வாகனத்துடன் மோதியதாகவும்Read More →

Reading Time: < 1 minuteகனேடிய பொதுத் தேர்தல் திகதியை மாற்றியமைக்குமாறு மத்திய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், நீதிமன்ற கட்டளைக்கு ஏற்றவாறு கனேடிய தேர்தல் திணைக்களம் தனது முடிவினை விரைவில் அறிவிக்கும் என தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும், மத்திய பொதுத் தேர்தலில் அனைத்துக் கனேடியர்களும் வாக்களிப்பதற்கான வாய்ப்பினைப் பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்தும் பொறுப்பு தமக்கு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் கனேடிய பொதுத் தேர்தல் இடம்பெறுவதாக காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ள போதும், அந்தக்Read More →

Reading Time: < 1 minuteகனேடிய பொதுத் தேர்தல் திகதியை மாற்றியமைப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் கனேடிய பொதுத் தேர்தல் இடம்பெறுவதாக காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ள போதும், அந்தக் காலப்பகுதியில் யூதர்களுடைய விடுமுறை வருவதனால், தேர்தல் திகதியை மாற்றியமைப்பது குறித்து கனேடிய தேர்தல் தலைமை அதிகாரி பரிசீலித்து வருவதாக கூறப்படுகின்றது. கனேடிய மத்திய அரசின் சட்ட திட்டங்களுக்கு ஏற்ப, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாகRead More →

Reading Time: < 1 minuteமுஸ்கோகா பகுதியில் 1990களில் நான்கு முதியவர்கள் காணாமல் போனதாக தேடப்பட்டுவந்த நிலையில், அவர்கள் நால்வரும் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து நேற்று தகவல் வெளியிட்ட ஒன்ராறியோ மாகாண காவல்துறையினர், Joan Lawrence, John Semple, John Crofts, Ralph Grant ஆகிய நால்வரும் காணாமல் போன நிலையில் அவர்களின் சடலங்கள் கூட மீட்கப்படவில்லை என்ற போதிலும், அவர்கள் ஏதோவொரு வகையில் கொல்லப்பட்டிருக்கலாம்Read More →

Reading Time: < 1 minuteகாலமான முன்னாள் ஒன்ராறியோ மாநில சுகாதார அமைச்சர் டேவிட் கப்லான் வீட்டில் இருந்து ஆண் ஒருவர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பில், தற்போது அங்கே திடீர் மரண விசாரணை அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். Lawrence Avenue மற்றும் Don Valley Parkway பகுதியில் அமைந்துள்ள குறித்த அந்த வீட்டில் ஆண் ஒருவர் தீக் காயஙகளுக்கு உள்ளானதாக நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு வேளையில் அவசர உதவிRead More →