Reading Time: < 1 minuteநேற்று காலை Bridle Path பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் படுகாயமடைந்த சுமார் 20 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Timberglade Court பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றுக்கு நேற்று காலை ஆறு மணியளவில் காவல்துறையினர் அழைக்கப்பட்ட போதிலும், வெளியேதான் இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக தாங்கள் நம்புவதாக ரொரன்ரோ காவல்துறையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். தாங்கள் சம்பவ இடத்தைச் சென்றடைந்த போது, அங்கே குறித்த அந்த ஆண்Read More →

Reading Time: < 1 minuteYork University Heights பகுதியில், பெருமளவானோர் நிறைந்திருந்த கேளிக்கை விடுதி ஒன்றில் இன்று அதிகாலை வேளையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஐவர் காயமடைந்துள்ளனர். Finch Avenue West மற்றும் Keele Street பகுதியில் அமைந்து்ளள District 45 எனப்படும் இரவுக் கேளிக்கை விடுதியினுள், இன்று அதிகாலை 2:15 அளவில் இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளது. அங்கு துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெறுவதாக பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்ததாகவும், சம்பவ இடத்திற்கு விரைந்த போதுRead More →

Reading Time: < 1 minuteபழமைவாதக் கட்சியின் கல்கரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தீபக் ஓப்ராய் மிக மோசமான ஈரல் புற்றுநோய்யினால் கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார். நாடாளுமன்றில் பெரிதும் மதிக்கப்படும், விரும்பப்படும் நபராக விளங்கிய அவரின் இந்த இழப்பு குறித்த செய்தி சனிக்கிழமை காலையில் வெளியான நிலையில், எதிர்பாராத இந்தச் செய்தி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கடந்த மாதத்தில் தனது 69ஆவது வயதை எட்டிய அவருக்கு, கடந்த மாதமளவில் தான் புற்றுநோய் உச்ச நிலையில் இருந்தமை கண்டறியப்ப்டடது.Read More →

Reading Time: < 1 minuteவெள்ளிக்கிழமை இரவு உந்துருளி ஒன்று சிற்றூர்தி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த 29 வயதான உந்துருளி ஓட்டுனர் மருத்துவனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். வெள்ளிக்கிழமை இரவு 10:35 அளவில், Islington Avenue மற்றும் Beaumonde Heights Drive பகுதியில் தெற்கு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேளையில் குறித்த இந்த உந்துருளி சிற்றூர்தியுடன் மோதுண்டு்ளளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதன்போது பலத்த காயங்களுக்கு உள்ளான உந்துருளி ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,Read More →

Reading Time: < 1 minuteநேற்று சனிக்கிழமை காலை ஸ்காபரோ Agincourt பகுதியில் வாகனம் ஒன்று கட்டிடம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த 26 வயதான வாகனத்தின் சாரதி, உயிராபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Middlefield வீதி மற்றும் Scottsfield Drive பகுதியி்ல், நேற்று காலை 5:30 அளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. ஒரு வாகனம் மட்டும் தொடர்புபட்டுள்ள இந்த விபத்துக்கு, அளவுக்கு அதிகமான வேகம் காரணமாக இருக்கக்கூடும் என்று காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். சம்பவம்Read More →

Reading Time: < 1 minuteஇன்று காலை வேளையில் நெடுஞ்சாலை 401இல் கார் ஒன்று பேரூந்துடன் மோதுண்டு தீப்பிடித்து எரிந்ததில், பாரதூரமான காயங்களுக்கு உள்ளான காரின் சாரதி உயிராபத்தான நிலையில் மீட்கப்பட்டு உலங்குவானூர்தி மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். நெடுஞ்சாலை 401இன் மேற்கு நோக்கிய வழித்தடத்தில், போர்ட் யூனியன் வீதிப் பகுதியில் இன்று காலை சுமார் எட்டு மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. மிகவும் வேகமாக பயணித்த குறித்த அந்தக் கார் பேரூந்தின் பின்னால் சென்றுRead More →

Reading Time: < 1 minuteலாசல்லே பகுதியில் உள்ள கஞ்சா விற்பனை நிலையத்திற்கு முன்பாக, சட்ட விரோதமாக கஞ்சா வைத்திருந்த இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். எசெக்ஸ் கவுண்டி ஒன்ராறியோ மாகாண பொலிஸ், மாகாண கூட்டுப் படைகள் கஞ்சா அமுலாக்கக் குழு, சமூக வீதி குற்றப் பிரிவு மற்றும் லாசாலே பொலிஸ் படை உறுப்பினர்களின் துணையுடன் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து கஞ்சா மற்றும் கஞ்சாவை உட்செலுத்தக் கூடிய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டRead More →

Reading Time: 3 minutes30 வருட யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அழிந்துபோன இலங்கையின் தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்களான வடக்கையும் கிழக்கையும் கட்டியெழுப்ப புலம்பெயர் தமிழர்கள் செய்யும் முயற்சிகள் எப்படியெல்லாம் வீணாக்கப்படுகின்றன என்பதற்கு இந்தப்பதிவு ஒரு சிறு உதாரணம். ஐந்து வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு விடயம்……… புலம் பெயர்ந்த தமிழ் பணக்காரர்களில் இவரும் ஒருவர். நானும் அவரும் வன்னி மக்களின் நிலைமை பற்றி கலந்துரையாடினோம். வன்னியிலும் யாழ்ப்பாணத்திலும் இருதய நோய் மற்றும் கான்சர் போன்றவற்றால் பலர்Read More →

Reading Time: < 1 minuteலாரன்டியன்ஸில் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த குழந்தை விவகாரம் தொடர்பில், பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். லாரன்டியன்ஸில் ஆற்றில் 6 மாத குழந்தை ஆற்றில் அடித்து செல்லப்பட்டு, மூழ்கி உயிரிழந்த சோக சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், இதுகுறித்த விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) மாலை ஒட்டாவாவிலிருந்து வடக்கே 220 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஃபெர்ம்-நியூவ்,லாரன்டியன்ஸில் ஆற்றில் குறித்த குழந்தை அடித்துச் செல்லப்பட்டள்ளது. பின்னர், பாதுகாப்புRead More →

Reading Time: < 1 minuteபிரம்டன் பகுதியில் காரை உடைத்து மர்ம இளைஞர்கள் நடத்திய கத்தி குத்து தாக்குதலுடன் தொடர்புடையவர்களை கைதுசெய்ய, பொலிஸார் தீவிர தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர். 20 வயதிற்குட்பட்ட கருப்பு நிற தோற்றத்துடன் உள்ள ஒருவரை பொலிஸார் தேடிவருவதாகவும், இவர் குறித்து தகவல் தெரிந்தவர் தம்மை தொடர்புக் கொள்ளுமாறும் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர். காஸில்மோர் மற்றும் கோர்வே டிரைவ் பகுதியில் உள்ள லேன் ப்ரூக் டிரைவில் நேற்று அதிகாலை 2:20 மணியளவில்Read More →