Reading Time: < 1 minute

கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் இளம்பெண்ணொருவர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், பொலிசார் குற்றவாளியை தீவிரமாகத் தேடிவருகிறார்கள்.

Tamil Business Directory

கனடாவில் ஆல்பர்ட்டா மாகாண தலைநகரான எட்மண்டனில் துப்பாக்கிச்சூடு தொடர்பில் பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

பொலிசார் அந்த வீட்டுக்கு விரைந்த நிலையில், அங்கு படுகாயமடைந்த நிலையில் 16 வயதுப்பெண்ணொருவர் இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.

அவசர உதவிக்குழுவினர் அவரைக் காப்பாற்ற எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளார்கள்.

அந்தப் பெண்ணின் பெயர் ஜாஸ்மின் தேசி என்பதும் அவருக்கு இரண்டு தங்கைகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் யாருக்காவது தகவல் ஏதேனும் தெரியுமானால், அல்லது, தங்கள் வாகனங்களில் உள்ள கமெராக்களில் இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் ஏதேனும் பதிவாகியிருக்குமானால், தங்களைத் தொடர்புகொள்ளுமாறு பொலிசார் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.