Reading Time: < 1 minuteரொறன்ரோவில் காச நோயாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 2024ம் ஆண்டில் அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளின் பின்னர் காச நோயாளர் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் 375 பேருக்கு காச நோய்த் தொற்று ஏற்பட்டதாக ரொறன்ரோ பொதுச் சுகாதார அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது. காச நோய் ஆபத்தானது எனவும் அதனை தடுக்க முடியும் எனவும் மருத்துவ அதிகாரிகள் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர். காச நோயினால் அதிகம் பாதிக்கப்படும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில்அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தொடர்பில் விசேட எதிர்வுகூறல் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக எதிர்வரும் பெப்ரவரி மாதம் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பினை மேற்கொள்வதில்லை என அறிவிக்கப்பட்டிருந்த காலம் இந்த மாதத்துடன் நிறைவடைகின்றது. கடந்த நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரையில் இந்த விலை அதிகரிப்பு கட்டுப்பாடு அமுலில் இருந்தது. எனினும், தற்பொழுது அத்தியாவசியப் பொருள் விற்பனை நிறுவனங்கள் பொருட்களின் விலைகளை உயர்த்தும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவைச் சேர்ந்த தம்பதியினர் சிறு தவறு காரணமாக சுமார் நான்காயிரம் டொலர்களை இழக்க நேரிட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மைக் அன்டர்வுட் மற்றும் ஜெசிக்கா ரொபர்ட்சன் ஆகியோர் இவ்வாறு பணத்தை பறிகொடுத்துள்ளனர். தங்களது வீட்டை விற்றுவிட்டு புதிய குடியிருப்பொன்றுக்கு செல்ல இருவரும் திட்டமிட்டிருந்தனர். தங்களது ஒரு குடியிருப்பினை வாடகைக்கு விடுவதற்கு இந்த தம்பதியினர் நடவடிக்கை எடுத்திருந்தனர். இதன் போது ஒரு சிறு தவறினால் அவர்களது வாடகைத் தொகை வேறும் ஒருவரின் கணக்கில் வைப்புச்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் 10 மற்றும் 17வயதான இரண்டு சிறுவர்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். தாக்குதலை மேற்கொண்ட நபரும் பலத்த காயங்களுடன் உயிராபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 46 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. என்ன காரணத்திற்காக இந்த படுகொலைச் சம்பவம் மேற்கொள்ளப்பட்டது என்பது பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. சம்பவம் தொடர்பில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவுக்கு கல்வி கற்க வந்த இந்திய இளம்பெண் ஒருவர் கடற்கரைக்குச் சென்றபோது மாயமானார். அவருக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் அவரது பெற்றோர் இந்தியாவில் தவித்துவருகிறார்கள். இந்தியாவின் பஞ்சாபிலிருந்து கல்வி கற்பதற்காக 2022ஆம் ஆண்டு கனடா வந்தவர் சந்தீப் கௌர் (22). வறுமையிலிருக்கும் தன் குடும்பத்தை நல்ல நிலைமைக்குக் கொண்டு வருவதாக உறுதியளித்துவந்த சந்தீப் கௌர், தான் சொன்னபடியே சுற்றுலாத்துறையில் பட்டயப்படிப்பை முடித்து வேலையிலும் சேர்ந்துள்ளார், நிரந்தரக் குடியிருப்பு அனுமதியும்Read More →

Reading Time: < 1 minuteஅரசாங்கம் மக்களுக்கு அனுப்பி வைத்த காசோலைகள் காசோலைகளை பணமாக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடாவின் ஒன்றாரியோ மாகாண அரசாங்கம் 200 டாலர்கள் பெறுமதியான காசோலைகளை மக்களுக்கு வழங்கியிருந்தது. தபால் மூலமாக இந்த காசோலைகள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. இந்த காசோலைகளை சில வங்கிகளில் பணமாக்க முடியவில்லை என முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஆர்.பி.சி மற்றும் ரீ.டி ஆகிய வங்கி வாடிக்கையாளர்களுக்கு தங்களது காசோலைகளை பணமாக்கிக் கொள்ள முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இந்தRead More →

Reading Time: < 1 minuteஅமெரிக்காவில் ஜனாதிபதி டிரம்ப் தலமையிலான புதிய நிர்வாகத்தால் நாடு கடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ள சட்டவிரோத வெளிநாட்டினரில் 3,065 இலங்கையர்களும் அடங்குவதாக குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத் துறை (ICE) அறிவித்துள்ளது. உலகெங்கிலும் உள்ள பல நாடுகளைச் சேர்ந்த 14 இலட்சத்து 45,549 பேர் கொண்ட பட்டியலை டிரம்ப் இன் புதிய அமெரிக்க நிர்வாகம் இப்போது அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசித்து வரும் பட்டியலில் சேர்த்துள்ளது. அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்படுவதற்கான இறுதிப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள வெளிநாட்டினரின்Read More →

Reading Time: < 1 minuteஅடுத்த தேர்தலில் தான் பிரதமராக தெரிவு செய்யப்பட்டால், தமிழ் மக்களுக்கு எதிரான குற்றங்களை புரிந்த ராஜபக்சர்களையும், ஏனைய குற்றவாளிகளையும் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு அவசியமான தலைமைத்துவத்தை நான் வழங்குவேன் என கனடாவின் பிரதான எதிர்க்கட்சியான கொன்சவேட்டிவ் கட்சியின் தலைவர் பியெர் பொய்லிவ் உறுதியளித்துள்ளார். கனடாவின் டொரன்டோ நகரில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே பியெர் பொய்லிவ் மேற்கொண்டவாறு தெரிவித்துள்ளார். இனப்படுகொலைதமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொலையை நிகழ்த்திய இலங்கை அரசாங்கத்தைRead More →