Reading Time: < 1 minuteஎயார் கனடா விமான சேவை நிறுவனம் விமானத்தில், கையில் சுமந்து செல்லும் பொதிகள் தொடர்பில் புதிய நடைமுறையை அறிமுகம் செய்ய உள்ளது. இதன்படி எயார் கனடா விமான சேவை நிறுவனம் பயணிகள் கையில் பொதிகளை சுமந்து செல்வதை தடை செய்வதற்கு திட்டமிட்டுள்ளது. குறைந்த கட்டணம் செலுத்தும் வாடிக்கையாளர்கள், ஆசனங்களை ஒதுக்கீடு செய்வதற்கு விசேட கட்டணம் ஒன்றை அறவீடு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. புத்தாண்டில் இந்த புதிய கட்டண நடைமுறை அமல்படுத்தப்படும் எனRead More →

Reading Time: < 1 minuteதற்செயலாக கனடிய எல்லையே கடந்த நபரை எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அமெரிக்காவை சேர்ந்த குறித்த நபர் தற்செயலாக கனடிய எல்லை பகுதிக்குள் பிரவேசித்தார் என தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது குற்றவாளி குழு உறுப்பினர் என தெரிவிக்கப்படுகிறது. 27 வயதான ஹொண்டுராஸ் நாட்டின் பிரஜை ஒருவரை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் குற்றவாளி கும்பல்களில் ஒன்றான மாறா செல்வட்ருச்சா (M13) குற்றவாளி கும்பலை தேர்ந்த நபரே கைதுRead More →

Reading Time: < 1 minuteசுமார் 40 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பெறுமதியான கொக்கேய்ன் போதை பொருளை கடத்தியதாக இரண்டு ஒன்றாரியோ பிரஜைகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இலியானிஸ் மாநிலத்தில் இந்த போதை பொருள் மீட்கப்பட்டிருந்தது. டிராக்டர் ட்ரெய்லர் வண்டி ஒன்றில் இந்த போதை பொருள் கடத்தப்பட்டிருந்தது என தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க போலீசார் குறித்த இரண்டு நபர்களையும் கைது செய்துள்ளனர். குறித்த வாகனத்தில் 540 கிலோ கிராம் எடையுடைய கொக்கேய்ன் போதை பொருள் இருந்ததாகRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் எல்லை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளின் அதிகாரத்தை அதிகரிப்பது குறித்து பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டொமினிக் லிபிலான்க் மற்றும் அவரது அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகின்றனர். புதிய கருவிகள் அதிகாரிகளுக்கு வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எல்லைப் பாதுகாப்பு விவகாரம் காரணமாக அமெரிக்கா கூடுதல் விரகளை விதிக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப் இது தொடர்பிலான எச்சரிக்கையைRead More →

Reading Time: < 1 minuteஒன்றாறியோ மாகாணத்தில் அனைத்து பிரஜைகளுக்கும் குடும்ப நல மருத்துவரின் சேவையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மாகாணத்தின் லிபரல் கட்சித் தலைவி வோனி குரோம்பே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அனைவருக்கும் ஒரு குடும்ப நல மருத்துவரின் சேவையை வழங்குவதற்கான திட்டத்தை முன்மொழிய உள்ளதாக அவர் தெரிவிக்கின்றார். கனடாவில் பொதுவாகவே குடும்ப நல மருத்துவர்களின் சேவையைப் பெற்றுக் கொள்வது மிகவும் சவால் மிக்கதாக காணப்படுகின்றது. அந்த வகையில் ஒன்றாரியோவில்Read More →

Reading Time: < 1 minuteகனேடிய நாட்டில் இனி புகலிடக் கோரிக்கை பெறுவது என்பது எளிதான விடயம் அல்ல என அந்நாட்டு அரசாங்கம் உலகளாவிய எச்சரிக்கை விளம்பரம் ஒன்றை விடுத்துள்ளது. இதன்படி, சுமார் 178,662 டொலர்கள் செலவில் தமிழ், இந்தி, உருது, ஸ்பேனிஷ் உட்பட 11 மொழிகளில் இந்த எச்சரிக்கை விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த நடவடிக்கை கனேடிய மக்களிடையே செல்வாக்கு குறைந்து வரும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அரசின், அரசியல் தந்திரம் என ஒரு சிலRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் ஒன்றாரியோ மாகாணத்தில் பரிசு அட்டை (Gift Card) வைத்திருந்த பெண் ஒருவருக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. 250 டாலர்கள் பெறுமதியான பரிசு அட்டை ஒன்றை குறித்த பெண் வைத்திருந்தார் என தெரிவிக்கப்படுகிறது. இந்த பரிசு அட்டை கொடுக்கல் வாங்கலுக்கு பயன்படுத்தாது வைத்திருந்தார் என தெரிவிக்கப்படுகிறது. இந்த பெண் குறித்த பரிசு அட்டையை பயன்படுத்தி கொள்வனவு செய்ய முயற்சித்த போது இந்த 250 டாலர் பெறுமதியான பரிசு அட்டையில் வெறும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில், கனடாவில் உணவு வங்கிகளை நாடுவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ள நிலையில், ஒரே மாதத்தில் 2 மில்லியன் முறை உணவு வங்கிகளை மக்கள் நாடியுள்ளது தெரியவந்துள்ளது. கனடாவில் உணவு வங்கிகளை நாடுவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. 2024ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் மட்டும், 2 மில்லியன் மக்கள் உணவு வங்கிகளை நாடியுள்ளதாக Food Banks Canada அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை, முந்தைய ஆண்டைவிட ஆறு சதவிகிதமும், 2019ஐ விடRead More →