Reading Time: < 1 minuteகனடாவில் இரட்டைக் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கல்கரி பகுதியைச் சேர்ந்த நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இரண்டு கொலைகளுடன் தொடர்புடைய ஆபத்தான நபர் என பொலிஸார் முன்னதாக எச்சரிக்கை விடுத்திருந்த நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 38 வயதான பெனடிக் கமின்ஸி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கமின்ஸி தனது வாகனத்திற்கு அருகாமையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்த நபர் கடந்த காலங்களில் குற்றச்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் வங்கிக் கொள்ளையில் ஈடுபட முயற்சித்த நபரின் சைக்கிள் களவாடப்பட்டுள்ளது. கனடாவின் ஹமில்டன் பகுதியில் இந்த வங்கிக் கொள்ளை முயற்சி இடம்பெற்றுள்ளது. மொன்றியல் வங்கியின் கிளையொன்றில் புகுந்த நபர் ஒருவர் வங்கிப் பணியாளரை அச்சுறுத்தி பணம் கொள்ளையிட முயற்சித்துள்ளார். துப்பாக்கி இருப்பதாகக் கூறி குறித்த வங்கிப் பணியாளரை அச்சுறுத்தியுள்ளார். இதன் போது சக வங்கிப் பணியாளர்கள் குறித்த கொள்ளையரை தடுக்க முயற்சித்துள்ளனர். இந்த சம்பவத்தின் போது கொள்ளையரினால் பணம் கொள்ளையிடRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கப்பம் கோரல் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ரொறன்ரோ பகுதியில் இவ்வாறான கப்பம் கோரல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அலைபேசிகளுக்கு வன்முறையான படங்களை அனுப்பி அதன் மூலம் அச்சுறுத்தல் விடுத்து பணம் கோரப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவிலிருந்து தொலைபேசி அழைப்புக்கள் மற்றும் குறுஞ்செய்திகள் ஊடாக கப்பம் கோரப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவின் அணுக்கக் குறியெண் 470 மற்றும் 404 ஆகியனவற்றினை அடிப்படையாகக் கொண்ட எண்களிலிருந்து அழைப்பு எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் வின்ட்ஸோர் (Windsor) பகுதியில் இடம்பெற்ற தீ விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 71 வயதான பெண் ஒருவரே இந்த தீ விபத்தில் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. வின்ட்ஸோர் சான்ட்விட்ஜ் வீதியில் அமைந்துள்ள குடியிருப்பில் இந்த தீ விபத்துச் சம்பவம் பதிவாகியுள்ளது. தீ விபத்தில் சிக்கிய பெண் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் சிகிச்சை பலனின்றி குறித்த பெண் உயிரிழந்து விட்டதாக வின்ட்ஸோர் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த விபத்திற்கான காரணங்கள் எதுவும்Read More →

Reading Time: < 1 minuteஒன்றாரியோ மாகாணத்தில் எதிர்வரும் ஆண்டில் உணவு வங்கிகளின் பயன்பாடு அதிகரிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. பெரும் எண்ணிக்கையிலான கனடியர்கள் உணவு பாதுகாப்பின்மையை எதிர் நோக்குவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் ஒன்றாறியோ மாகாணம் முழுவதும் நிறுவப்பட்டு உள்ள உணவு வங்கிகளில் அதிக அளவான மக்கள் பயன் பெறுவதற்காக முயற்சிப்பார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. ஒன்றாரியோவில் அமைந்துள்ள டெய்லி பிரட் புட் பேங்க் என்ற உணவு வங்கியில் கடந்த ஆண்டில் 3.75 மில்லியன் மக்கள் பயன்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் பெருந்தொகை கொக்கேய்ன் போதை பொருளுடன் நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கிழக்கு ஒன்றாறியோ பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளனர். ஸ்காப்ரோ பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபரிடமிருந்து சுமார் 50000 டொலர்கள் பெறுமதியான கொக்கேய்ன் போதை பொருள் மீட்கப்பட்டுள்ளது. சந்தேக நபரிடமிருந்து சுமார் 500 கிராம் இடையினுடைய கொக்கேய்ன் போதை பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேலும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் மேற்கு கியூபெக் பகுதியில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுமார் 4.1 ரிச்டர் அளவில் இந்த நில நடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடிய நில அதிர்வு நிறுவனம் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தை ஒட்டோவா மற்றும் கேடின்யூ ஆகிய பகுதிகளிலும் உணர முடிந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நில அதிர்வு காரணமாக சேதங்கள் ஏதும் ஏற்பட்டு இருக்காது என அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். 5 ரிச்ட்ர் அளவிற்கு மேற்பட்டRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் இணய வழியிலான சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் இவ்வாறு அதிக அளவு சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கோவிட்-19 பெருந்தொற்றுக்கு பின்னர் நாட்டில் அதிக அளவான இணைய வழி சிறுவர் துஷ்பியோக சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிள்ளைகள் அதிக நேரத்தை இணயத்தில் செலவிடுவதனால் இவ்வாறான பிரச்சனைகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் 2021 ஆம் ஆண்டு முதல்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கார் மற்றும் ரயில் மோதிக் கொண்டதில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். கனடாவின் மொன்றியால் பகுதியில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்றைய தினம் அதிகாலை வேளையில் விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ரயில் மோதுண்ட வாகனத்தின் சாரதி தப்பிச் சென்றதாகவும், பின்னர் வாகனத்திற்கு அருகாமையில் வந்த போது பொலிஸார் அவரை கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. விபத்தில் காரில் பயணம் செய்த இருவர் காயமைடைந்துள்ளனர். எனினும் காயமடைந்த இருவருக்கும் உயிராபத்து கிடையாதுRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு மளிகை பொருட்களின் விலைகள் உயர்வடையும் என தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நாடு தழுவிய ரீதியில் மளிகை பொருட்களின் விலைகள் மூன்று தொடக்கம் ஐந்து வீதம் வரையில் அதிகரிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. கியூபெக் மாகாணத்தில் இந்த விலை அதிகரிப்பானது ஐந்து வீதமாக காணப்படும் என தெரிவிக்கப்படுகிறது. கனடிய உணவு விலை அறிக்கை இந்த விடயத்தை சுட்டிக்காட்டி உள்ளது.Read More →

Reading Time: < 1 minuteகனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை பதவி விலக வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அட்லாண்டிக் பிராந்தியத்தின் லிபரல் கட்சி உறுப்பினர்கள் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர். ஜஸ்டின் ட்ரூடோ கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் விசேட கடிதம் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிரதமர் பதவி விலக வேண்டும் என, நியூ பிரவுன்ஸ்விக் பிராந்திய நாடாளுமன்ற உறுப்பினர் வெயன் லோங் கோரியுள்ளார். எதிர் வரும்Read More →

Reading Time: < 1 minuteஎதிர்வரும் புத்தாண்டை முன்னிட்டு ரொறன்ரோ நகரின் சில முக்கிய வீதிகள் மூடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களை மேற்கொள்ளவும் பாதுகாப்பாக வீடு திரும்பவும் இவ்வாறு சில நடவடிக்கைகள் எடுப்பதாக ரொறன்ரோ நகர நிர்வாகம் அறிவித்துள்ளது. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இரவு 10 மணி முதல் புதன்கிழமை அதிகாலை ஒரு மணி வரையில் ரொறன்ரோவின் சில வீதிகள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டவுன்ரவுன் கோர், குயின்ஸ் குயே வெஸ்ட், பே ஸ்ட்ரீட்,Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ரொறன்ரோ நகரில் பெண்ணொருவர் வீட்டை உடைத்து கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ளார். பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு தொகுதி ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பலவந்தமாக வீட்டுக்குள் பிரவேசித்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தாக்குதலில் காயமடைந்தவருக்கு உயிர் ஆபத்து கிடையாது என தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்துடன் தொடர்புடைய பெண்ணின் புகைப்படத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். குறித்த பெண்ணை கைது செய்வதற்கான தேடுதல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 5 அடி 6 அங்குலம்Read More →

Reading Time: < 1 minuteசீனாவில் மோசடியில் ஈடுபட்ட கனடாவின் வாங்சகூவார் பகுதியைச் சேர்ந்த நபருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வீட்டுமனை திட்ட நிறுவனங்களிடம் மோசடி செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபருக்கு சுமார் 5 லட்சம் அமெரிக்க டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பிய நீதிமன்றம் இந்த தண்டனையை விதித்து உள்ளது. வாங்கூவரைச் சேர்ந்த கிறிஸ்டோர் லீ என்பவருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஸ் கொலம்பிய நீதிமன்ற நீதிபதி நீனா சர்மாவினால் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவின்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒட்டோவா பகுதியில் பாரிய அளவில் போதையில் மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஒட்டோவா 417 ஆம் இலக்க அதிவேக நெடுஞ்சாலையில் இவ்வாறு பாரியளவு போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன. வாகனம் ஒன்றை சோதனையிட்டபோது ஒன்றாரியோ மாகாண போலீசார் போதை பொருட்களை மீட்டுள்ளனர். இந்த சந்தேகநபர்களிடம் இருந்து 28000 டொலர் பணமும் நீக்கப்பட்டுள்ளது. குடிபோதையில் வாகனம் செலுத்தியமை தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய இந்த வாகனம் சோதனை இடப்பட்டுள்ளது. இதன்போது குறித்த வாகனத்தில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் வீடற்றவர்களுக்காக மினி வீடொன்றை ஒருவர் உருவாக்கியுள்ளார். ரொறன்ரோவைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு புதிய வீடு ஒன்றை உருவாக்கியுள்ளனர். ராயன் டொனெஸ் என்ற நபர் இந்த நடமாடும் மினி வீடொன்றை உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குளிர்காலத்தில் பெரும் எண்ணிக்கையிலான வீடற்றவர்கள் கடும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இந்த வீடு சைக்கிள்களுடன் பொருத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. வீடற்றவர்களுக்கு தற்காலிக அடிப்படையில் இந்த வீடு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மினி வீட்டை நிர்மானிப்பதற்காகRead More →

Reading Time: < 1 minuteஏர் கனடா விமானம் கியர் செயலிழப்பால் ஆபத்தான முறையில் ஹாலிஃபாக்ஸ் விமான நிலையத்தில் தரையிறங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பிஏஎல் ஏர்லைன்ஸ் நிறுவனம் இயக்கும் ஏர் கனடா 2259 விமானம் கனடாவின் செயின்ட் ஜான்ஸில் இருந்து ஹாலிஃபாக்ஸுக்கு பயணிகளுடன் இன்று [29-12- வந்துகொண்டிருந்தது. இந்நிலையில், தரையிறங்கும் கியர் (விமான சக்கரம்) செயலிழந்ததால் ஹாலிஃபாக்ஸ் விமான நிலையத்தில் விமான ரெக்கைகள் தரையில் உரசி தீப்பொறிRead More →

Reading Time: < 1 minuteகனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கு எதிராக மீண்டும் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜொனதன் வில்லியம்சன் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனவரி மாதம் இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனவரி மாதம் 7ம் திகதி நாடாளுமன்ற குழுவில் இந்த தீர்மானம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்த வாக்கெடுப்பு எதிர்வரும்Read More →