Reading Time: < 1 minuteஅனைத்து கனடா இந்துக்களும் மோடியை ஆதரிக்கவில்லை என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளமை மோடி அரசுக்கு சினத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது. இந்தியா-கனடா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. கனடாவில் வசித்த காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்ததையடுத்து மோதல் போக்கு ஏற்பட்டது. கனடா இந்தியா உறவில் விரிசல்சமீபத்தில் இந்திய தூதரக அதிகாரிகளிடம் விசாரணை நடத்துவோம் என்று கனடாRead More →

Reading Time: < 1 minuteகனடா இந்தியாவுக்கிடையிலான உறவில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைத் தீர்த்துவைக்க அமெரிக்க ஜனாதிபதியாகிய ட்ரம்ப் உதவுவார் என இந்திய வம்சாவளி தலைவர் ஒருவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்திய அமெரிக்க சமுதாயத்தின் முன்னணி தலைவரான சுதிர் பாரிக் என்பவர், 2024ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்றது குறித்து கருத்து தெரிவிக்கும்போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ட்ரம்புக்கு இந்திய அமெரிக்க சமுதாயத்தின் ஆதரவு குறித்து பேசிய சுதிர், கனடா இந்தியாவுக்கிடையிலான தூதரக உறவில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒரிலியா பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி நபர் ஒருவர் சொல்லப்பட்டுள்ளார். ஒன்றாறியோ மாகாணத்தில் ஒரிலியா பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 26 வயதான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் இந்த சம்பவம் தொடர்பில் விசேட விசாரணை பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. குறித்த நபரை கைது செய்ய முயற்சித்த போது அந்த நபர் பொலிஸ் உத்தியோகத்தர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ளார். இதன் போது குறித்தRead More →

Reading Time: < 1 minuteஅமெரிக்காவின் 47ம் ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள டொனால் ட்ரம்பிற்கு கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வாழ்த்து தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்ப் அமோக வெற்றியை பதிவு செய்துள்ளார். கனடிய அரசாங்கத்தின் சார்பில், அமெரிக்க ஜனாதிபதிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக ட்ரூடோ குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜே.டி. வென்ஸ் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்துக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார். அண்டை மற்றும் நட்பு நாடு என்ற வகையிலும், பொதுவானRead More →

Reading Time: < 1 minuteஒன்றாரியோவின் வாசாகா கரையோரப் பகுதியில் இடம்பெற்ற தீ விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். டுன்கோர்ன் அவன்யூ பகுதியில் தீ விபத்து குறித்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். சம்பவ இடத்தில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் உயிரிழந்தவர் பற்றிய விபரங்கள் எதனையும் ஒன்றாரியோ பொலிஸார் வெளியிடவில்லை. இந்த தீவிபத்து சம்பவம் சந்தேகத்திற்கு இடமானதாக தென்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர். ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியை வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றியுள்ள நிலையில் அந்த வெற்றி கனடாவின் பொருளாதாரத்திற்கு பாதக விளைவினை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகிறது. கனடாவின் கார்ல்டன் பல்கலைக்கழக துணைப் பேராசிரியர் இயன் லீ இந்த வெற்றி குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். ட்ரம்பின் வெற்றி தென் எல்லை பகுதியில் கனடாவிற்கு பல்வேறு சவால்களை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக எல்லை தாண்டிய வர்த்தக நடவடிக்கைகளில் பாதக விளைவுகளைRead More →

Reading Time: < 1 minuteகனடிய மத்திய வங்கியின் அதிகாரியொருவர் அடகு கடன் திருத்தம் தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளார். கனடிய மத்திய வங்கியின் சிரேஷ்ட பிரதி ஆணையாளர் கரோலின் ரொஜர்ஸ் இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். அடமான சந்தை தொடர்பில் அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். அடமான சந்தையை மித மிஞ்சிய அளவில் திருத்தம் செய்வதன் மூலம் வீடு கொள்வனவு தொடர்பான பிரச்சனைக்கு தீர்வு காண்பது சாத்தியமில்லை என ரொஜர்ஸ் தெரிவித்துள்ளார். கேள்வி மற்றும் நிரம்பல்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ரொரன்றோவிலுள்ள இந்திய தூதரகம், நடத்த திட்டமிட்டிருந்த தூதரக முகாம்கள் சிலவற்றை ரத்து செய்ய முடிவு செய்துள்ளது. கனடாவின் ரொரன்றோவிலுள்ள இந்திய தூதரகம், தூதரக முகாம்கள் நடத்த திட்டமிட்டிருந்தது. ஆனால், பாதுகாப்பு கருதி, சில நிகழ்ச்சிகளை ரத்து செய்ய தூதரகம் முடிவு செய்துள்ளது. முகாம் நடத்துபவர்களுக்கு குறைந்தபட்ச பாதுகாப்பு கொடுக்க இயலாது என பாதுகாப்பு ஏஜன்சிகள் தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், பிராம்டனில் கோவில் ஒன்றின் முன்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் பாடசாலைகளுக்கு அருகாமையில் போராட்டங்களை நடத்துவதற்கு தடை விதிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பாடசாலைகள் மற்றும் மத வழிபாட்டு தலங்களுக்கு அருகாமையில் போராட்டங்களை நடத்துவதற்கு தடை விதிக்கும் புதிய சட்டங்களை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஒன்றாரியோவின் நகர நிர்வாகங்கள் இது குறித்து கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் பிரம்டனில் இந்து ஆலயம் ஒன்றிற்கு எதிரில் சீக்கியர்கள் போராட்டம் நடத்தி இருந்தனர். எனினும், இவ்வாறு போராட்டம் நடத்துவதற்குRead More →

Reading Time: < 1 minuteஅமெரிக்காவில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றியீட்டியுள்ளார். இதனை தொடர்ந்து கனடாவிற்கு எவ்வாறு புலம் பெயர்வது என பலர் கூகுளில் தேடியுள்ளனர். google தேடுதளத்தில் கனடாவிற்கு புலம்பெயர்வது தொடர்பான தகவல்களை தேடியவர்கள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்திருந்தது என தெரிவிக்கப்படுகிறது. ஜனநாயக கட்சியின் வேட்பாளர் கமலா ஹரிஸ் வெற்றி ஈட்டிய மாநிலங்களான பெர்மான்ட், மெயின், நியூ ஹம்ஸ்யார், ஓர்கான், மினிசோட்டா போன்றவற்றில் இவ்வாறு அதிகRead More →