Reading Time: < 1 minute கனடாவில் தென்கிழக்கு ஸ்காப்றோ பகுதியில் கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொள்ளைச் சம்பவத்தின் போது பாதிக்கப்பட்டவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு தாக்கப்பட்டவர் காயமடைந்துள்ளதாகவும் தாக்குதல் நடத்திய சந்தேக நபர் தப்பி சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவருக்கு உயிர் ஆபத்து கிடையாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறெனினும் சந்தேக நபர் குறித்த இடத்தை விட்டு தப்பிச் சென்றுவிட்டதாகவும் சந்தேக நபரை பொலிஸார் தேடி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.Read More →

Reading Time: < 1 minute லெபனானில் சிக்கியுள்ள கனடியர்களை அழைத்து வருவதற்கு விமான ஆசன ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. லெபனானில் இருந்து கனடாவிற்கு கனடிய பிரஜைகளை அழைத்து வருவதற்காக சுமார் 800 ஆசனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. கூடுதல் எண்ணிக்கையிலான ஆசனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என லெபனானில் வாழ்ந்து வரும் கனடியர்களின் உறவினர்கள் கோரியுள்ளனர். ஏற்கனவே அரசாங்கம் தமது நாட்டுப் பிரஜைகளுக்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இவ்வாறான ஒரு பின்னணியில் தற்பொழுது இஸ்ரேலிய படையினர் தொடர் தாக்குதல்களை நடத்தRead More →

Reading Time: < 1 minute கனடாவில் ஒன்றாரியோ மாகாணத்தில் உண்மை மற்றும் நல்லிணக்க தேசிய தினத்தை சம்பளம் வழங்கும் விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒன்றாரியோ மாகாணத்தின் ஒரே ஒரு பழங்குடியின பிரதிநிதி இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். இது தொடர்பில் பிரேரணை ஒன்றை சட்டசபையில் முன்வைக்க திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தேசிய ரீதியில் விடுமுறையாக அறிவிக்கப்பட்டாலும் மாகாணத்தில் சம்பளம் வழங்கும் விடுமுறை தினமாக உண்மை மற்றும் நல்லிணக்க தேசிய தினம் அறிவிக்கப்படவில்லை.Read More →

Reading Time: < 1 minute கனடிய மத்திய அரசாங்கத்தின் நடவடிக்கை தொடர்பில் பழங்குடியின மக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். குறிப்பாக வதிவிட பாடசாலைகளில் கற்று உயிர்தப்பிய பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர். பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வதிவிட பாடசாலைகளில் அனுபவித்த சித்திரவதைகள் மற்றும் கொடுமைகளை வெளிக்கொணர்வதற்கு அரசாங்கம் தயக்கம் காட்டுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வதிவிட பாடசாலைகளில் கொல்லப்பட்ட சிறுவர்களின் சடலங்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கை மற்றும் வதிவிட பாடசாலைகளில் கற்ற மாணவர்கள் பற்றிய பதிவுகளை வெளிக்கொணரும்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் இயங்கி வரும் பிரதான புகையிலை உற்பத்தி நிறுவனங்கள் தங்களுக்கு எதிராக தண்டனை விதிக்க வேண்டாம் என நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளன. ஏற்கனவே நீதிமன்றம் பிரதான மூன்று புகையிலை உற்பத்தி நிறுவனங்களுக்கு பெரும் தொகை அபராதங்களை விதித்துள்ளது. பல பில்லியன் டாலர்கள் பெறுமதியான அபராதம் இவ்வாறு விதிக்கப்பட்டுள்ளது. புகைப்பிடிப்பவர்கள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு இந்த நட்டையீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் இந்த சட்ட நடவடிக்கையை இடைRead More →

Reading Time: < 1 minute அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று (01) மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி இன்று முறையே 292 ரூபாவாகவும், 301.05 ரூபாவாகவும் உள்ளது. நேற்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி முறையே 293.50 ரூபாவாகவும், 302.56 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது. மத்திய கிழக்கு உட்படRead More →