Reading Time: < 1 minuteகனடாவில் பல்வேறு பகுதிகளில் இடம் பெற்று வரும் வாகன கொள்ளை சம்பவங்களை தடுத்து நிறுத்தும் நோக்கில் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. கனடிய மத்திய போக்குவரத்து அமைச்சர் இது தொடர்பான திட்டத்தை முன்மொழிந்துள்ளார். மத்திய அரசாங்கம் மாகாண மற்றும் பிராந்திய அரசாங்கங்களுடன் இணைந்து செயல்படுவதன் மூலம் வாகன கொள்ளைகளை தடுக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார். போக்குவரத்து அமைச்சர் அனிதா ஆனந்த் இந்த விடயத்தை ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். பொதுவாகRead More →

Reading Time: < 1 minuteபொது நூலகங்களை வாரத்தின் ஏழு நாட்களிலும் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நகர முதல்வர் ஒலிவியா சொளவ் இது தொடர்பான திட்டத்தை முன்வைத்துள்ளார். எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அளவில் நகரின் 100 பொது நூலகங்கள் இவ்வாறு ஏழு நாட்களும் திறந்திருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். டொரன்டோவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். தற்பொழுது ஞாயிறு தினங்களில் பொது நூலகங்கள் மூடப்பட்டுள்ளன. எனினும் எதிர்காலத்தில் ஞாயிற்றுக்கிழமையும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் நோவா ஸ்கோசியா மாகாணத்தில் இடைத் தேர்தல் நடத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முதல்வர் டீம் ஹுஸ்டன் இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளார். சட்டமன்றத்தை கலைத்து பொது தேர்தல் நடத்துமாறு டீம் ஹுஸ்டன் ஆளுநர் நாயகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதம் 26 ஆம் தேதி நோவாஸ்கோசியாவில் பொது தேர்தல் நடத்தப்பட உள்ளது. பொதுத் தேர்தலை இலக்கு வைத்து பிரதான கட்சிகள் அரசியல் பிரசாரங்களை ஆயத்தப்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. மாகாணRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் குளிரூட்டப்பட்ட வொபல் உணவு பண்டம் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த உணவு பண்டத்தில் லிஸ்திரியா தாக்கம் ஏற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் குறித்த உணவு பண்டத்தை சந்தையில் இருந்து மீள பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. குளிரூட்டப்பட்ட வொபல்ஸ் வகைகள் ஏற்கனவே இவ்வாறு சந்தையில் இருந்து மீள பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான ஒரு பின்னணியில் 365 வோல்புட்ஸ் என்ற பண்டக்குறியை கொண்ட வொபல்ஸ் வகைகளையும் சந்தையிலிருந்துRead More →

Reading Time: < 1 minuteகொழும்பு – கோட்டை முதல் காங்கசன்துறை வரையிலான ரயில் சேவைகள் இன்று (28) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டவுள்ளது. அதன்படி, மஹவ மற்றும் அனுராதபுரம் வரையான ரயில் பாதை புனரமைக்கப்பட்டதன் பின்னர் கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன் துறை வரையான ரயில் சேவை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே பிரதி பொது முகாமையாளர் என். ஜே. இந்திபொலகே தெரிவித்துள்ளார். வடக்கு ரயில் சேவையை மீள ஆரம்பிப்பதன் மூலம் யாழ்தேவி ரயில் கொழும்புRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் ஒருமுறை காலிஸ்தான் பிரிவினைவாதி ஒருவரின் வாளிலிருந்து இரண்டு இஞ்ச் இடைவெளியில் உயிர் தப்பியது குறித்து இந்திய உயர் ஸ்தானிகர் தெரிவித்துள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் கனடாவிலிருந்து இந்தியாவுக்கு திரும்ப அழைத்துக்கொள்ளப்பட்ட இந்திய உயர் ஸ்தானிகரான சஞ்சய் வர்மா, தானும் தன் மனைவியும் காலிஸ்தான் பிரிவினைவாதிகளிடமிருந்து உயிர் தப்பிய ஒரு சம்பவம் குறித்து பேசியுள்ளார். கனடாவின் ஆல்பர்ட்டாவில் ஒருமுறை, தானும் தனது மனைவியும் இந்தியர்கள் நடத்திய கலைநிகழ்ச்சி ஒன்றில்Read More →

Reading Time: < 1 minuteகனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 4 நாட்களுக்குள் பதவி விலக வேண்டுமென எம்.பி.க்கள் கெடு விதித்துள்ளதாக கூறப்படுகின்றது. கனடாவில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சியின் செல்வாக்கு மக்களிடையே சரிந்து வருகிறது. இது கடந்த ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் எதிரொலித்தது. இடைத்தேர்தல் நடந்த 2 முக்கிய தொகுதிகளிலும் லிபரல் கட்சி தோல்வியை சந்தித்தது. மீண்டும் தேர்தலில் போட்டியிடக்கூடாதுஇந்த தோல்விக்கு பிரதமர் ட்ரூடோ தான் காரணம்Read More →

Reading Time: < 1 minute2024 ஒக்டோபர் 1 முதல் 20 ஆம் திகதி வரையிலான காலக் கட்டத்தில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மொத்தம் 85,836 ஆக உள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தகவல்களுக்கு அமைய, 2024 ஜனவரி முதல் ஒக்டோபர் 20 வரையான காலக் கட்டத்தில் நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் மொத்த எண்ணிக்கை 1,570,644 ஆகும். இதனிடையே, இஸ்ரேல் சுற்றுலாப் பயணிகளுக்கு அச்சுறுத்தல் காரணமாகRead More →

Reading Time: < 1 minuteபொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பணிப்பாளர் கிருஷ்ண ஸ்ரீனிவாசன் இதனைக் தெரிவித்தார் மேலும் இலங்கையின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் (EFF) கீழ் எதிர்வரும் மூன்றாவது மீளாய்வை விரைவாகக் கண்காணிப்பதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார் இதேவேளை புதிய அரசாங்கம் நியமிக்கப்பட்டு குறுகிய காலம்Read More →

Reading Time: < 1 minuteகியூபாவில் வாழ்ந்து வரும் கனடியர்கள் எவரும் உதவிகளை கோரவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. கனடிய வெளிவிவகார அமைச்சினால் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது கியூபாவில் பல்வேறு நெருக்கடி நிலைமைகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக நாட்டில் சீறற்ற காலநிலை காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதுடன் மின்சாரமும் தடைபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கியூபாவில் சுமார் 1600 கனடியர்கள் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. தூதரகம் ஊடாக கனடியர்கள் இதுவரையில் எவ்வித உதவியையும் கோரவில்லை என தெரிவிக்கப்படுகிறது. கியூபாவிற்கு பயணங்களைRead More →

Reading Time: < 1 minuteஎதிர்வரும் குளிர்காலத்தில் ஈ-ஸ்கூடிகள் மற்றும் ஈ-பைக்குகள் என்பனவற்றுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. கனடாவில் குளிர்கால மாதங்களில் லித்தியம் பேட்டரிகளை பயன்படுத்தி பயணம் செய்யும் ஈ-ஸ்கூடிகள் மற்றும் ஈ-பைக்குகளை தடை செய்யுமாறு கோரப்பட்டுள்ளது. கனடிய போக்குவரத்து சேவை பணியாளர்கள் இந்த பரிந்துரையை விடுத்துள்ளனர். இந்த ஈஸ்கூட்டர்கள் மற்றும் ஈ-பைக்குகள் என்பனவற்றில் தீப்பற்றி எரியக்கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் நோக்கில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் சஸ்கட்ச்வான் பகுதியில் சிறுவர்களுக்கு வாக்காளர் அட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தவறுதலாக சுமார் 500 பதின்ம வயது உடையவர்களுக்கு வாக்காளர் அட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 18 வயதிற்கும் குறைந்தவர்களுக்கு இவ்வாறு வாக்காளர் அட்டைகள் தவறுதலாக அனுப்பி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அலுவலகம் இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களுக்கு எங்கு? எப்போது? வாக்களிக்க வேண்டும் என்பது குறித்த தகவல்கள் உள்ளடக்கிய அட்டைகள் வழங்கப்படும். 18 வயதிற்கும்Read More →