Reading Time: < 1 minute கனடாவில் இருந்து யாழ்ப்பாணத்தில் காணி வாங்கு சென்றவரின் 85 இலட்ச ரூபாய் பணம் காணி தகரால் அபகரிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று தொடர்பில் இலங்கை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட நபர் ஒருவர் கனடாவில் புலம்பெயர்ந்து வசித்து வருகிறார். இந்நிலையில் புலம்பெயர் தமிழர் யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில் காணி ஒன்றினை கொள்வனவு செய்வதற்காக சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் சென்றுள்ளார். ஏமாற்றிய தரகர்யாழில்Read More →

Reading Time: < 1 minute கனடாவின் முன்னணி விமான சேவை நிறுவனமான எயார் கனடா நிறுவனம் தொழிற்சங்க பிணக்கு தொடர்பில் அரசாங்கத்தின் உதவியை நாடியுள்ளது. விமான சேவை நிறுவனத்தின் விமானிகள் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளனர். பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து விமானிகள் எயார் கனடா நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் பணிப் புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனவே இரண்டு தரப்புகளுக்கும் இடையில் அரசாங்கம் மத்தியஸ்தம்Read More →

Reading Time: < 1 minute ஏதிலிகளை மீள்குடியேற்றுவது தொடர்பில் கனடிய மத்திய அரசாங்கம் முன்மொழிந்துள்ள யோசனைக்கு மாகாண அரசாங்கங்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. குறிப்பாக கியூபெக் மற்றும் ஒன்றாரியோ மாகாணங்களில் மட்டும் தற்பொழுது ஏதிலிகள் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையை பன்முகப்படுத்தும் யோசனையை அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. எனினும் இந்த யோசனைக்கு ஏனைய மாகாண அரசாங்கங்கள் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். போதிய அளவு நிதி ஒதுக்கீடுகளை வழங்காது எதிலிகளை மீளக்குடியேற்ற கோருவது பொருத்தமற்றது என நியூ பிரவுண்ஸ்விக்Read More →

Reading Time: < 1 minute கனடா அரசு புகலிடக்கோரிகையாளர்களை அலைக்கழிப்பது என முடிவு செய்துவிட்டது போலிருக்கிறது. ஆம், பல்லாயிரக்கணக்கான புகலிடக்கோரிக்கையாளர்களை, நாட்டின் வெவ்வேறு மாகாணங்களுக்கு அனுப்ப பெடரல் அரசு திட்டமிட்டுவருகிறது. கனடாவில் அதிக புகலிடக்கோரிக்கையாளர்கள் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ள ஒன்ராறியோ மற்றும் கியூபெக் மாகாணங்களின் சுமையைக் குறைப்பதற்காக, பல்லாயிரக்கணக்கான புகலிடக்கோரிக்கையாளர்களை, நாட்டின் வெவ்வேறு மாகாணங்களுக்கு அனுப்ப பெடரல் அரசு திட்டமிட்டுவருகிறது. கனடாவில் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ளவர்களின் எண்ணிக்கை தற்போதைக்கு 235,825 ஆக உள்ளது. இந்த புகலிடக்கோரிக்கைகளில்Read More →

Reading Time: < 1 minute கட்சியின் தலைவர் ஜக்மீட் சிங் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்த புதிய சட்டமூலத்தில் கார்பன் வரி தொடர்பிலான யோசனைகள் உள்ளடக்கப்படுமா இல்லையா என்பது குறித்து நேரடியான தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. காலநிலை மாற்றம் தொடர்பான கொள்கைகளில் லிபரல் மற்றும் கான்சர்வேட்டிவ் கட்சிகள் பின்னடைவை சந்தித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த இரண்டு கட்சிகளினதும் காலநிலை பாதுகாப்பு கொள்கைகள் ஏற்புடையவை அல்ல என அவர் சுட்டிக்காட்டி உள்ளார். காலநிலை மாற்றத்திற்கு எதிராகRead More →

Reading Time: < 1 minute ஒன்றாரியோ மாகாணத்தின் கிங்ஸ்டன் பகுதியில் பட்டப் பகலில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்த நபர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்துள்ளதாக கிங்ஸ்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர். நபர் ஒருவர் ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தி வருவதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இதன்போது மூன்று பேர் தாக்கப்பட்டு இருந்ததாக பொலிஸார்Read More →