ரொறன்ரோவில் பெண் பயணியிடம் தவறாக நடந்த டாக்சி சாரதி கைது!
Reading Time: < 1 minute கனடாவின் ரொறன்ரோ பகுதியில் பெண் பயணி ஒருவரிடம் தகாத முறையில் நடந்து கொண்ட டாக்சி சாரதி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பெண் பயணி ஒருவரை பாலியல் ரீதியாக குறித்த நபர் துன்புறுத்தி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ரொறன்ரோவின் பிரிட்ஜ் மவுண்ட் மற்றும் டான்போர்த் வீதிகளுக்கு அருகாமையில் கடந்த 28 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 47 வயதான சபீர் ஹுசைன் சீமா என்ற நபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.Read More →