Reading Time: < 1 minuteகனடாவின் ஒன்றாரியோ மாகாண பாடசாலைகளில் அலைபேசி பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வாரம் முதல் குறித்த தடை அறிமுகம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறெனினும், இந்த தடை எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் என்பது குறித்து தெளிவாக அறிவிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. வகுப்பறையில் கற்கும் போது மாணவர்கள் கவனம் சிதறுவதை தடுக்கும் நோக்கில் இவ்வாறு அலைபேசி பயன்பாட்டுக்கு தடை விதிப்பதாக மாகாண அரசாங்கம் அறிவித்துள்ளது. வகுப்பறைகளில் அலைபேசி பயன்படுத்துவது தடைRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் விவசாய மற்றும் உணவு உற்பத்தி துறைக்கு சைபர் தாக்குதல் தொடர்பில் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த துறைகள் மீது போதிய அளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாத காரணத்தினால் இலகுவில் இலக்கு வைக்கப்படலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. விவசாய செய்கை, முதல் உணவு உற்பத்தி, விநியோகம், மளிகை பொருள் மற்றும் உணவுப் பொருள் விற்பனை செய்தல் உள்ளிட்ட பல்வேறு படிமுறைகளில் இவ்வாறு சைபர் தாக்குதல் நடத்தப்பட கூடும் என தெரிவிக்கப்படுகிறது. கடந்தRead More →

Reading Time: < 1 minuteவீட்டின் மேல் மாடியில் வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கு எதிராக நட்டஈடு கோரிய வழக்கு தொடர்ந்த பெண், அபராதம் செலுத்த நேரிட்டுள்ளது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் பெண் ஒருவர் வீட்டின் மேல் மாடியில் தங்கி இருந்த அயலவர்கள் மீது வழக்கு தாக்கல் செய்திருந்தார். லிண்டா பூ என்ற பெண் இவ்வாறு வழக்கு தாக்கல் செய்திருந்தார். வீட்டின் மேல் மாடியில் வசித்து வரும் லொரென்ஸோ புரூனோ என்பவருக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது.Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ரொறன்ரோ நகரில் இடம் பெற்ற மற்றுமொரு துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். பிளாக் கிரிக் மற்றும் பிரீத் பகுதியில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. கனடாவின் துப்பாக்கிச் சூடு தொடர்பில் அறிந்து கொண்ட பொலிஸார் சம்பவ இட இடத்திற்கு விரைந்து காயமடைந்த நபரை காப்பாற்ற முயற்சித்துள்ளனர். எனினும் இந்த முயற்சியை வெற்றி அளிக்கவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவ இடத்திலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளார். சந்தேகRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் பார்க்டேல் பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். குயின்ஸ் வீதி மற்றும் லேண்ட்ஸ் டவுன் வீதி என்பவற்றுக்கு அருகாமையில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாக்குதல் சம்பவம் ஒன்று குடியிருப்பு தொகுதி ஒன்றில் இடம்பெற்றதாக பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைப்பாட்டை தொடர்ந்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். இதன்போது இரண்டு பேர் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி, காயமடைந்த நிலையில் இருந்ததனை பொலிஸார் அவதானித்துள்ளனர்.Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் சம்சுங் ரக இலத்திரனியல் அடுப்புக்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த அடுப்பு வகையை பயன்படுத்தும் மக்கள் தீ விபத்துக்கு உள்ளாவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கனடாவில் சில அடுப்பு தீ பற்றி கொண்டதில் காயமடைந்துள்ளனர். சுகாதார நிறுவனம் குறித்த அடுப்பு வகைகளை சந்தையில் இருந்து மீள பெற்றுக் கொள்ளுமாறு நிறுவனத்திற்கு அறிவித்துள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரையில் விற்பனை செய்யப்பட்டRead More →

Reading Time: < 1 minuteஒன்றாரியோ மாகாணம் மிட்லாந்து பகுதியில் இடம்பெற்ற தீ விபத்து சம்பவம் ஒன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 39 வயதான நபர் ஒருவரே இவ்வாறு தீ விபத்து சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணி அளவில் வீடு ஒன்றில் தீ பிடித்துள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மாகாண பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இந்த தீ விபத்து ஏற்பட்ட வீட்டின் ஒரு பகுதியில் நபர் ஒருவர் வீழ்ந்து கிடந்ததாகவும் அவரைRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் ரொறன்ரோவில் பாலியல் குற்றச்செயலில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குடியிருப்பு தொகுதி ஒன்றில் வசித்து வந்த குறித்த நபர் அருகாமையில் சென்ற பெண்கள் மற்றும் பதின்ம வயதுடைய சிறுமியர் போன்றவருக்கு பாலியல் ரீதியான தகாத சைகைகளை செய்து காண்பித்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ரொறன்ரோ போலீசார் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ப்ளோர் மற்றும் பத்ரஸ்ட் வீதிகளுக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.Read More →