Reading Time: < 1 minute கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் பாலம் ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் காணாமல் போயிருந்தார். ட்ரக் வண்டியொன்று பாலத்தை உடைத்துக் கொண்டு நீரில் மூழ்கியதாக தெரிவிக்கப்படுகிறது. ஸ்கியாமோஸ் பகுதியில் அமைந்துள்ள RW Bruhn என்ற பாலத்தில் குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது. ட்ரக் வண்டி பாலத்திலிருந்து சுமார் 60 அடி ஆழத்தில் கீழே விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த வாகனத்தில் சாரதி மட்டும் பயணத்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. குறித்த விபத்தில் சிக்கியRead More →

Reading Time: < 1 minute போதை மருந்து மரணங்கள் ஒன்றாரியோ மாகாணத்தில் அதிக அளவு பதிவாகும் சாத்தியம்! கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் அதிக அளவு மரணங்கள் பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. போதை மருந்து பயன்படுத்தும் பாதுகாப்பு நிலையங்கள் மூடப்படுவதன் மூலம் இவ்வாறு மரணங்கள் பதிவாகும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். போதை மருந்து பயன்படுத்துவோருக்கு உதவும் வகையில் கண்காணிக்கப்பட்ட பாதுகாப்பு நிலையங்களில் போதை மருந்து பயன்படுத்த வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளRead More →

Reading Time: < 1 minute ரயில் பணியாளர்களின் போராட்டம் தொடர்வதால் பயணிகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். ரயில் பணியாளர்கள் முன்னெடுத்து வரும் நாடு தழுவிய போராட்டத்தினால் ஆயிரக்கணக்கான கணிய பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பெருநகரப் பகுதிகளுக்கான ரயில் சேவைகள் ஸ்தம்பித்தமடைந்துள்ளன. இதனால் பயணிகள் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. GO ட்ரான்சிட் சேவை இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. தமது கோரிக்கைகளுக்கு இதுவரையில் உரிய பதில் கிடைக்கவில்லை என தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள்Read More →

Reading Time: < 1 minute ஒன்றாரியோவின் வடக்குப் பகுதியில் காட்டுத் தீ சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 24 மணித்தியால காலத்தில் இவ்வாறு அதிகளவில் காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சாபெல்யூ, ஹியரெஸ்ட், சட்பரி, ரிம்மின்ஸ், கோச்ரென்ஸ், நோர்த்பே உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் காட்டுத் தீ பரவுகையை அவதானிக்க முடிவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் சுமார் பன்னிரெண்டு புதிய காட்டுத் தீ பரவுகை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. சில இடங்களில் பெருமளவான பகுதிகளில் காட்டுத் தீRead More →

Reading Time: < 1 minute கனடாவின் ஸ்காப்றோ பகுதியில் தாத்தா பாட்டியுடன் இருந்த குழந்தை ஒன்றை கடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 29 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்து சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு பொலிஸார் விரைந்துள்ளனர். சிறுவர்களுக்கான வண்டியில் அழைத்துச் செல்லப்பட்ட குழந்தையை முதியவர்கள் இடமிருந்து குறித்த நபர் பறித்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குழந்தையை கடத்திச் சென்றவரை துரத்திச் சென்ற வயோதிபர்களை சந்தேக நபர் தாக்கியிருந்தார். இதனால்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் இரண்டு பெண்கள் மர்மமான முறையில் மரணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கனடாவின் எட்டாபிகொக் பகுதியில் வீடொன்றில் இரண்டு பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 33 வயதான ஒருவரை பொலிஸார் தேடி வந்தனர். எவ்வாறெனினும், ஜோசப் அய்லா என்ற 33 வயதான நபரையே பொலிஸார் தேடி வருகின்றனர். குறித்த நபர் வெள்ளையினத்தைச் சேர்ந்த 5 அடி 11 அங்குல உயரைத்தைக் கொண்டவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம்Read More →