Reading Time: < 1 minuteகனடாவில் பிரபலமான டேட்டிங் செயலி ஒன்றின் மூலம் தொடர்பு ஏற்படுத்திக் கொண்ட சிலர் துப்பாக்கி முனையில் கொள்ளையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பேரை பொலிஸார் தேடி வருகின்றனர். பிரபலமான டேட்டிங் செயலி ஒன்றின் ஊடாக தொடர்பினை ஏறபடுத்திக் கொண்ட சிலர், துணையை நேரில் சந்திக்க சென்றிருந்தபோது இவ்வாறு கொள்ளையிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சந்திப்பதற்காக சென்றிருந்த நபரை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி தாக்குதல் நடத்தி பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் சிசு ஒன்றை படுகொலை செய்ததாக ஆண் ஒருவர் மீதும் பெண் ஒருவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஒன்றாரியோ மாகாணத்தின் பழங்குடியின சமூகத்தினர் வாழும் மனிடோலியன் தீவு பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட சிசு ஒருநாள் சிகிச்சையின் பின்னர், உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக குற்றம் குற்றம் சுமத்தப்பட்டுள்ள 33 வயதான பெண் மற்றும் 34 வயதான ஆண்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் அல்பர்ட்டா மாகாணத்தின் தென் கல்கரி பகுதியில் 24 வயதான இளம் தாய் ஒருவரும் அவரது மூன்று வயது மகளும் காணாமல் போய் உள்ளனர். 24 வயதான டெஸிரி டி அவிலா மற்றும் மூன்று வயதான சாஸ்டி டி அவிலா ஆகிய இருவரும் இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 22 ஆம் திகதி இவர்கள் காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகிறது. தென் கல்கரியின் நான்டோன் நகரில் இந்த இருவரும் காணாமல்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் பகுதியில் சுமார் ஆறு லட்சம் டொலர் பெறுமதியான போதை பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. ஹமில்டனின் பர்லிங்டன் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றை சோதனையிட்டபோது இவ்வாறு போதை பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. ஒரு கிலோ கிராமுக்கு அதிகமான கொக்கெய்ன், ஏழு கிலோ கிராம் எம்.டி.எம்.ஏ போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகள் பதப்படுத்தப்பட்ட 33 கிலோகிராம் எடையினுடைய கஞ்சா போதை பொருள் உள்ளிட்ட பல போதை பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் குறித்த வீட்டிலிருந்துRead More →

Reading Time: < 1 minuteசீனாவில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களின் இறக்குமதிக்கு 100% வரி விதிக்க தீர்மானித்துள்ளதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார். அதன்படி ஒட்டாவா சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எஃகு மற்றும் அலுமினியத்திற்கு 25% கூடுதல் கட்டணத்தை விதிக்கும் என்று ட்ரூடோ தெரிவித்துள்ளார். அதேவேளை உலக சந்தையில் லாபம் பெரும் நோக்கில், சீனா நியாயமற்ற முறையில் நடந்துகொள்வதாகவும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ விசனம் வெளியிட்டார். ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொள்வதற்காக காத்திருக்கும் வெளிநாட்டவர்களுக்கு அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கனடாவில் நிலவிவரும் பதவி வெற்றிடங்களுக்கு உள்ளூர் பணியாளர்களை நியமிக்குமாறு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் குறைந்த சம்பளத்துடனான வேலை வாய்ப்புகளுக்கு, வேறும் நாடுகளில் இருந்து பிரஜைகளை அழைத்து வருவதனை வரையறுக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார். நிரந்தர வதிவிட உரிமையை வழங்குவது தொடர்பிலும் சில கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு லிபரல் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் வருமான முகவர் நிறுவனம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. வரி செலுத்துவோருக்கு கனடியர்களுக்கு கூடுதல் சேவையை வழங்கும் நோக்கில் கூடுதல் நேரம் சேவையை வழங்க தீர்மானித்துள்ளது. கனடிய வருமான முகவர் நிறுவனத்தை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள விரும்புவார்களின் நலன் கருதி இவ்வாறு சேவை நேரத்தை நீடிப்பதாக அறிவித்துள்ளது. வரி செலுத்துபவர்களின் கோரிக்கைக்கு அமைய இந்த சேவை நேர நீடிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. வழமையான பணி நேரத்தை விடவும் கூடுதல்Read More →

Reading Time: < 1 minuteகனடாவிற்கு வருகை தரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரிப்பினை பதிவு செய்துள்ளது. எவ்வாறு எனினும் கோவிட் 19 பெருந்தொற்று காலப்பகுதிக்கு முன்னர் கனடாவிற்கு வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கையின் அளவை விடவும் குறைவான எண்ணிக்கையே இது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கனடிய புள்ளி விபரவியல் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு ஜூன் மாதம் வரையில் கனடாவில் வதியாத 3.6 மில்லியன்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் டொமினிக் குடியரசில் நிர்க்கதியாக்கப்பட்ட சம்பவம் ஒன்று தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ப்ளையர் எயார்லைன்ஸ் என்ற விமான சேவை நிறுவனத்தின் ஊடாக பயணம் செய்த பெண் ஒருவரே இவ்வாறு நிர்க்கதியாக்கப்பட்டுள்ளார். ரொறன்ரோவிற்கு திரும்பவிருந்த குறித்த ப்ளையர் எயார்லைன்ஸ் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் சீரற்ற கால நிலை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனால் தாம் நிர்க்கதியாக நேரிட்டதாக குறித்த பெண் குற்றம்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் வாடகைக்கு குடியிருப்பவர்களுக்கு, முன்னணி வீட்டுமனை நிறுவனங்களில் ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. மேற்கு கனடாவைச் சேர்ந்த முன்னணி வீட்டு மனை நிறுவனம் ஒன்று இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. வாடகை குடியிருப்பாளர்களின் தரவுகள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மெயின் ஸ்ட்ரீட் ஈக்விட்டி கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. நமது நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பிற்குள் மூன்றாம் தரப்பினர் உட்பிரவேசித்து உள்ளதனை கண்டறிந்து கொண்டதாக அந்தRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் இடம் பெற்ற இரண்டு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். ஹமில்டன் பகுதியில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. பார்டென் வீதியின் அமைந்துள்ள பெடல்ஸ் விருந்தகத்தில் துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 20 மற்றும் 28 வயதான இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். காயங்களும் உயிராபத்தானவை கிடையாது என தெரிவிக்கப்படுகிறது. மதுபான கடைக்கு சொந்தமான வாகன திரைப்படத்தில் இந்தRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் இடம் பெற்ற இரண்டு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். ஹமில்டன் பகுதியில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. பார்டென் வீதியின் அமைந்துள்ள பெடல்ஸ் விருந்தகத்தில் துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 20 மற்றும் 28 வயதான இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். காயங்களும் உயிராபத்தானவை கிடையாது என தெரிவிக்கப்படுகிறது. மதுபான கடைக்கு சொந்தமான வாகன திரைப்படத்தில் இந்தRead More →