Reading Time: < 1 minute ரெறான்ரோவில் குண்டு பீதி ஏற்படுத்திய விவகாரம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ரொறன்ரோ ஸ்காப்ரோ பல்கலைக்கழகத்தில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வழங்கப்பட்டிருந்தது. இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குண்டு வைக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்ட இரண்டு கட்டடங்களில் தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த கட்டடமொன்றிலிருந்து சந்தேகத்திற்கு இடமான பொருள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த மர்மப்பொருளை ரோபோ ஒன்றின் மூலம் சோதனையிடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மர்மப் பொதியில் வெடிபொருட்களுக்கு நிகரான பொருட்கள் காணப்படுவதாகRead More →

Reading Time: < 1 minute பிரித்தானியாவிற்கான பயணங்கள் தொடர்பில் கனடா அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. பிரித்தானியாவில் இடம்பெற்று வரும் போராட்டங்கள் மற்றும் வன்முறைகள் தொடர்பில் இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. பிரித்தானியாவில் அமைதியான போராட்டங்கள் கூட வன்முறைகளாக வெடிக்கக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கலகங்கள், வன்முறைகள், கொள்கைகள் போன்றன இடம்பெறக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டங்கள் காரணமாக பொதுப் போக்கவரத்திற்கும் பாதிப்பு ஏற்படலாம் எனRead More →

Reading Time: < 1 minute ரொறன்ரோவின் கிழக்குப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில் பெருந்தொகை ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைத்துப்பாக்கிகள், போலி துப்பாக்கிகள் மற்றும் துப்பாக்கி தோட்டாக்கள் என்பன இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 20 வயதான சந்தீப் சிங், 51 வயதான அமிர்க் சிங், 50 வயதான ஹார்பிரிட் கவுர் மற்றும் 29 வயதான ராஜ்வன்ட் கவுர் ஆகியோர் இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனRead More →

Reading Time: < 1 minute இஸ்ரேலுக்கான கனடிய தூதரகத்தின் ராஜதந்திர பணியாளர்களது பிள்ளைகளை மீள அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இராஜதந்திரிகள் மற்றும் அவர்களது பிள்ளைகளை மீள அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பிராந்திய வலயத்தில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜதந்திரிகளின் பிள்ளைகள் மற்றும் அவர்களது பாதுகாவலர்களை பாதுகாப்பான மூன்றாம் நாடு ஒன்றில் தற்காலிகமாக தங்க வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. கனடிய வெளிவிவகார அமைச்சு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. எவ்வாறெனினும்,Read More →

Reading Time: < 1 minute ஒலிம்பிக்கில் கலந்துகொண்ட கனேடிய விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு வயிற்று உபாதை ஏற்பட்டுள்ளதால், போட்டிகளில் கலந்துகொள்வதில் அவர்களுக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ஓட்டப்பந்தயம் மற்றும் சைக்கிள் பந்தயங்களில் கலந்துகொண்ட பல வீரர் வீரங்கனைகளுக்கு வயிற்று உபாதைகள் ஏற்பட்டுள்ளன. இது தொடர்பாக கனேடிய விளையாட்டு வீரர்கள் அமைப்பு சமூக ஊடகம் ஒன்றில் வெளியிட்டுள்ள செய்தியில், sprint என்னும் குறைதூர ஓட்டப்பந்தய வீராங்கனையான Zoe Sherar, 400 மீற்றர் பந்தயத்தில் கலந்துகொள்ளும் முன் வைரஸ்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் காட்டுத்தீ சம்பவத்திற்கு காரணமாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வான்கூவார் தீவுகளின் போர்ட் எல்பர்னி என்னும் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த காட்டுத்தீ சம்பவத்துடன் தொடர்புடைய 27 வயதான பெண் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ சம்பவத்திற்கு இந்தப் பெண்ணின் செயற்பாடே காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பெண்ணுக்கு எதிராக பொலிஸார் பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளனர். காட்டுத் தீ சம்பவங்களுடன் தொடர்புடையவர்களுக்கு பத்தாயிரம்Read More →