Reading Time: < 1 minute கனடாவின் பிரம்டனில் இலங்கை தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபியை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டமைக்கு இலங்கை கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கான கனடா தூதுவரை அழைத்து தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். நினைவுத்தூபியை கட்டுவதை தடுத்துநிறுத்தவேண்டும்கனடாவின் வாக்குவங்கி அரசியலுக்காக தொடர்ந்து பரப்பப்படும் இந்த பொய்யான கதையை இலங்கை அரசாங்கம் திட்டவட்டமாக நிராகரிப்பதாக அலி சப்ரி தெரிவித்துள்ளார். பிராம்டன் நகரசபையின் தவறான ஆலோசனையின் அடிப்படையிலான செயற்பாடு இலங்கையில் உள்ளRead More →

Reading Time: < 1 minute கனேடிய அரசாங்கத்தினால் அண்மையில் புதுப்பிக்கப்பட்ட தடைசெய்யப்பட்ட அமைப்புக்கள் அடங்கிய பட்டியலில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் மீளவும் உள்ளடக்கப்பட்டிருக்கின்றது. கனேடிய அரசாங்கம் கடந்த 2006 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் பட்டியலில் உள்ளடக்கியது. அப்பட்டியல் 5 வருடங்களுக்கு ஒருமுறை மீளாய்வுக்கு உட்படுத்தப்படும். அதற்கமைய இவ்வருடம் ஜுன் மாதம் 7 ஆம் திகதி அப்பட்டியல் மீளப்புதுப்பிக்கப்பட்டிருக்கின்றது. அவ்வாறு புதுப்பிக்கப்பட்ட பட்டியலிலும் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பெயர் உள்ளடக்கப்பட்டிருக்கின்றது. இலங்கை வரவேற்புஇந்நிலையில்Read More →

Reading Time: < 1 minute தமிழ் நாட்டின் நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையாது இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், காங்கேசன்துறைக்கும் தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்திற்கும் 40 ஆண்டுகளுக்கு பின்னர் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை கடந்த வருடம் ஒக்டோபர் மாம் 14 ஆம் திகதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்தக் கப்பல் சேவையானது நாளாந்தம் இடம்பெறும் என கூறப்பட்ட நிலையில் சீரற்ற வானிலை மற்றும் போதியளவான பயணிகள் இன்மையால்Read More →

Reading Time: < 1 minute ரஷ்யப் போருக்குச் சென்ற ஓய்வுபெற்ற இலங்கை இராணுவத்தினர் 05 பேர் உக்ரைன் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் உக்ரைன் அரசாங்கம் உத்தியோகபூர்வ அறிவித்தலை துருக்கியிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு வழங்கியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ரஷ்ய எல்லை வழியாக உக்ரைனுக்குள் நுழைந்த போது உக்ரைன் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதேவேளை உக்ரைன் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட 5 இலங்கையர்களை விடுவிக்க தேவையான தலையீடுகள் மேற்கொள்ளப்படும்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் சில பகுதிகளில் மரக்கறி, பழங்களை கொள்வனவு செய்வதில் மக்கள் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடாவின் மொன்றியால் மேற்கு தீவுகள் பகுதியில் இவ்வாறு மக்கள் சிரமங்களை எதிர்நோக்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர் உணவு பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு மரக்கறி மற்றும் பழ வகைகளை கொள்வனவு செய்வது, சவால் மிக்கதாக காணப்படுகின்றது. இந்தப் பகுதி மக்கள் உணவு பாதுகாப்பின்மைRead More →

Reading Time: < 1 minute கனடாவில் தீவிரவாத சந்தேக நபர்களுக்கு எவ்வாறு கனடிய குடியுரிமை வழங்கப்பட்டது என்பது குறித்து விசாரணை செய்வதற்கு நாடாளுமன்ற குழு ஒன்று நிறுவப்பட்டுள்ளது. கடந்த மாதம் ரெறான்ரோவில் தீவிரவாத தாக்குதல் நடத்த ஆயத்தமாகி இருந்த இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்திருந்தனர். அகமத் முஸ்தபா எல்டிடி என்ற 62 வயதான நபரும் முஸ்தபா எல்டிடி என்ற அவரது 26 வயதான மகனும் இவ்வாறு ரிச்மண்ட் ஹில் பகுதியில் வைத்து கைதுRead More →