Reading Time: < 1 minuteகனடாவின் டொரன்டோவில் அதிரடியாக 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சந்தேக நபர்களுக்கு எதிராக 158 குற்றவியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. நீண்ட காலமாக விசாரணை நடத்தப்பட்டு இந்த குற்றவாளி கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த குற்றவாளி கும்பல் கனடிய தபால் திணைக்களத்தை பயன்படுத்தி போதைப் பொருட்களை ஏனைய மாகாணங்களுக்கு விநியோகம் செய்துள்ளமை தெரிய வந்துள்ளது. இந்த குற்றவாளி கும்பல்கள் தொடர்பில் சுமார் 11 மாதங்களாக கண்காணிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.Read More →

Reading Time: < 1 minuteரொறன்ரோவில் இளம் தலைமுறையினர் அழுத்தங்களை எதிர் நோக்குவதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னைய தலைமுறையினரை விடவும் தற்போதைய இளைய தலைமுறையினர் பெரும் மன உளைச்சலை எதிர்நோக்குவதாகவும் நிதி ரீதியாக பிரச்சனைகளை எதிர் நோக்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம் இந்த விடயம் தெரிய வந்துள்ளது. இது தொடர்பில் அண்மையில் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. Toronto Foundation charityஎன்ற அறக்கட்டளை அமைப்பு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. குறிப்பாக வயது, இருபதுகளை கொண்ட இளம்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் பிரம்டனில் இலங்கை தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபியை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டமைக்கு இலங்கை கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கான கனடா தூதுவரை அழைத்து தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். நினைவுத்தூபியை கட்டுவதை தடுத்துநிறுத்தவேண்டும்கனடாவின் வாக்குவங்கி அரசியலுக்காக தொடர்ந்து பரப்பப்படும் இந்த பொய்யான கதையை இலங்கை அரசாங்கம் திட்டவட்டமாக நிராகரிப்பதாக அலி சப்ரி தெரிவித்துள்ளார். பிராம்டன் நகரசபையின் தவறான ஆலோசனையின் அடிப்படையிலான செயற்பாடு இலங்கையில் உள்ளRead More →

Reading Time: < 1 minuteகனேடிய அரசாங்கத்தினால் அண்மையில் புதுப்பிக்கப்பட்ட தடைசெய்யப்பட்ட அமைப்புக்கள் அடங்கிய பட்டியலில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் மீளவும் உள்ளடக்கப்பட்டிருக்கின்றது. கனேடிய அரசாங்கம் கடந்த 2006 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் பட்டியலில் உள்ளடக்கியது. அப்பட்டியல் 5 வருடங்களுக்கு ஒருமுறை மீளாய்வுக்கு உட்படுத்தப்படும். அதற்கமைய இவ்வருடம் ஜுன் மாதம் 7 ஆம் திகதி அப்பட்டியல் மீளப்புதுப்பிக்கப்பட்டிருக்கின்றது. அவ்வாறு புதுப்பிக்கப்பட்ட பட்டியலிலும் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பெயர் உள்ளடக்கப்பட்டிருக்கின்றது. இலங்கை வரவேற்புஇந்நிலையில்Read More →

Reading Time: < 1 minuteதமிழ் நாட்டின் நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையாது இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், காங்கேசன்துறைக்கும் தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்திற்கும் 40 ஆண்டுகளுக்கு பின்னர் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை கடந்த வருடம் ஒக்டோபர் மாம் 14 ஆம் திகதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்தக் கப்பல் சேவையானது நாளாந்தம் இடம்பெறும் என கூறப்பட்ட நிலையில் சீரற்ற வானிலை மற்றும் போதியளவான பயணிகள் இன்மையால்Read More →

Reading Time: < 1 minuteரஷ்யப் போருக்குச் சென்ற ஓய்வுபெற்ற இலங்கை இராணுவத்தினர் 05 பேர் உக்ரைன் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் உக்ரைன் அரசாங்கம் உத்தியோகபூர்வ அறிவித்தலை துருக்கியிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு வழங்கியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ரஷ்ய எல்லை வழியாக உக்ரைனுக்குள் நுழைந்த போது உக்ரைன் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதேவேளை உக்ரைன் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட 5 இலங்கையர்களை விடுவிக்க தேவையான தலையீடுகள் மேற்கொள்ளப்படும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் சில பகுதிகளில் மரக்கறி, பழங்களை கொள்வனவு செய்வதில் மக்கள் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடாவின் மொன்றியால் மேற்கு தீவுகள் பகுதியில் இவ்வாறு மக்கள் சிரமங்களை எதிர்நோக்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர் உணவு பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு மரக்கறி மற்றும் பழ வகைகளை கொள்வனவு செய்வது, சவால் மிக்கதாக காணப்படுகின்றது. இந்தப் பகுதி மக்கள் உணவு பாதுகாப்பின்மைRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் தீவிரவாத சந்தேக நபர்களுக்கு எவ்வாறு கனடிய குடியுரிமை வழங்கப்பட்டது என்பது குறித்து விசாரணை செய்வதற்கு நாடாளுமன்ற குழு ஒன்று நிறுவப்பட்டுள்ளது. கடந்த மாதம் ரெறான்ரோவில் தீவிரவாத தாக்குதல் நடத்த ஆயத்தமாகி இருந்த இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்திருந்தனர். அகமத் முஸ்தபா எல்டிடி என்ற 62 வயதான நபரும் முஸ்தபா எல்டிடி என்ற அவரது 26 வயதான மகனும் இவ்வாறு ரிச்மண்ட் ஹில் பகுதியில் வைத்து கைதுRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் டொரன்டோ பீல் பிராந்தியத்தில் இரு வேறு இடங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். விமான நிலைய வீதியில் ஓர் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த இடத்தில் இரண்டு பேர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறு எனினும் ஒருவருக்கு சிறு காயங்கள் மட்டுமே ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறு காயம் ஏற்பட்ட நபர் சிகிச்சைகளை பெற்றுக் கொள்ள விரும்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது. மேலும் பிரம்டனில் மற்றும் ஒருRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் பெய்ரே பகுதியில் நாய் ஒன்றை காப்பாற்றுவதற்கு முயற்சித்த நபர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார். டேவிட் மெக்டொனால்ட் என்ற நபர் தனது நாயுடன் நடந்து சென்றுள்ளார். இதன் போது மூன்று இளையர்கள் மோதிக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த மூவரும் அங்கிருந்த நாற்காலிகளை உடைத்துக் கொண்டிருந்தனர் என தெரிவிக்கின்றார். இதன் போது மெக்டொனால்ட், நாற்காலிகளை உடைக்க வேண்டாம் என இளைஞர்களிடம் கோரியுள்ளார். இந்த சம்பவத்தின் போது குறித்த நபருக்கும் நாற்காலிகளை உடைத்தவர்களுக்கும் இடையில்Read More →