Reading Time: < 1 minute கனடாவில் இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 5 பேர் காயமடைந்துள்ளனர். கனடாவின் ஹாலிஃபிக்ஸ் பிராந்தியத்தில் ஆப்பிரிக்வெலி பார்க் பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரண்டு பேர் ஒருவருக்கு ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்திக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதன் போது அருகாமையில் இருந்தவர்களும் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலை ஆபத்தானது என தெரிவிக்கப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் நகரின் மேயர் மைக் சர்வேஷ் தனது கவலையைRead More →

Reading Time: < 1 minute கனடாவின் மிஸிஸாகாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். பிரிட்டானியா மற்றும் மெக்லாகுடின் வீதிகளுக்கு அருகாமையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வாகனமொன்று மின் கம்பத்தில் மோதுண்டதனால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மின் கம்பத்தில் மோதுண்ட வாகனம் தீப்பற்றிக் கொண்டதாகவும், தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. என்ன காரணத்தினால் இந்த விபத்து இடம்பெற்றது என்பது பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.Read More →

Reading Time: < 1 minute கனடாவில் வாடிக்கையாளர்களை பல ஆண்டுகளாக ஏமாற்றி வந்த தசைப்பிடிப்பு மற்றும் அக்குபஞ்சர் நிபுணர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சான்றிதழ் பெற்ற தசை பிடிப்பாளர் எனவும் அக்குபஞ்சர் நிபுணர் எனவும் குறித்த பெண் போலியாக தமது வாடிக்கையாளர்களை ஏமாற்றியுள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக குறித்த பெண் வாடிக்கையாளர்களிடம் சுமார் 37000 டாலர்களை பெற்றுக் கொண்டுள்ளார். ஹால்டன் பிராந்திய போலீசார் இந்த பெண் தொடர்பிலான விசாரணைகளை கடந்த ஜனவரிRead More →

Reading Time: < 1 minute ரொறன்ரோ பகுதியைச் சேர்ந்த பல் மருத்துவர் ஒருவர் தகாத செயலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நோயாளிகள் இருவரை அநாகரீகமான முறையில் தொட்டதாக குறித்த பல் மருத்துவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 36 வயதான சுனில் குமார் பாட்டெல் என்ற பல் மருத்துவர் மீது இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. டர்ஹம் பிராந்திய போலீசார் இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். மருத்துவரை சந்திக்க சென்ற போது தம்மை பாலியல் ரீதியாகRead More →

Reading Time: < 1 minute புலம்பெயர்தல் தொடர்பில் கொண்டுவரப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் புலம்பெயர்வோர் எண்ணிக்கை குறையும் என்று கூறியுள்ளது கனடா அரசு. ஆனால், உண்மையில், புலம்பெயர்வோர் எண்ணிக்கை கனடா அரசு வெளியிட்ட எண்ணிக்கையைவிட அதிகரிக்கும் என மாறுபட்ட கருத்தொன்றை வெளியிட்டுள்ளது கனடா வங்கி. மார்ச் மாதம் 21ஆம் திகதி, கனடாவில் தற்காலிகமாக வாழும் வெளிநாட்டவர்களின் (non-permanent residents or NPRs) எண்ணிக்கையை, மக்கள்தொகையில் 6.2 சதவிகிதத்திலிருந்து, 5 சதவிகிதமாக குறைக்க நடவடிக்கை எடுக்க இருப்பதாக, கனடாவின் புலம்பெயர்தல்,Read More →

Reading Time: < 1 minute கனடாவின் நியூ ஃபவுண்ட்லான்ட் பகுதியில் உரிமை கோரப்படாத சடலங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. மரண சடங்குகளை மேற்கொள்வதற்கு பொருளாதார இயலுமை இல்லாதவர்கள் சடலங்களை கைவிட்டு செல்வதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தின் போதிய அளவு உதவியின்றி சிலரால் தங்களது நேசத்திற்குரியவர்களின் இறுதிச் சடங்குகளை மேற்கொள்ள முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது. மாகாணத்தின் மிகப்பெரிய வைத்தியசாலையில் பிணவறைகளில் உரிமை கூறப்படாத பல சடலங்கள் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மாகாணத்தின் அரசாங்கம் மக்களுக்கு போதிய அளவு வசதிகளைRead More →