Reading Time: < 1 minuteகனடாவில் இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 5 பேர் காயமடைந்துள்ளனர். கனடாவின் ஹாலிஃபிக்ஸ் பிராந்தியத்தில் ஆப்பிரிக்வெலி பார்க் பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரண்டு பேர் ஒருவருக்கு ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்திக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதன் போது அருகாமையில் இருந்தவர்களும் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலை ஆபத்தானது என தெரிவிக்கப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் நகரின் மேயர் மைக் சர்வேஷ் தனது கவலையைRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் மிஸிஸாகாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். பிரிட்டானியா மற்றும் மெக்லாகுடின் வீதிகளுக்கு அருகாமையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வாகனமொன்று மின் கம்பத்தில் மோதுண்டதனால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மின் கம்பத்தில் மோதுண்ட வாகனம் தீப்பற்றிக் கொண்டதாகவும், தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. என்ன காரணத்தினால் இந்த விபத்து இடம்பெற்றது என்பது பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் வாடிக்கையாளர்களை பல ஆண்டுகளாக ஏமாற்றி வந்த தசைப்பிடிப்பு மற்றும் அக்குபஞ்சர் நிபுணர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சான்றிதழ் பெற்ற தசை பிடிப்பாளர் எனவும் அக்குபஞ்சர் நிபுணர் எனவும் குறித்த பெண் போலியாக தமது வாடிக்கையாளர்களை ஏமாற்றியுள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக குறித்த பெண் வாடிக்கையாளர்களிடம் சுமார் 37000 டாலர்களை பெற்றுக் கொண்டுள்ளார். ஹால்டன் பிராந்திய போலீசார் இந்த பெண் தொடர்பிலான விசாரணைகளை கடந்த ஜனவரிRead More →

Reading Time: < 1 minuteரொறன்ரோ பகுதியைச் சேர்ந்த பல் மருத்துவர் ஒருவர் தகாத செயலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நோயாளிகள் இருவரை அநாகரீகமான முறையில் தொட்டதாக குறித்த பல் மருத்துவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 36 வயதான சுனில் குமார் பாட்டெல் என்ற பல் மருத்துவர் மீது இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. டர்ஹம் பிராந்திய போலீசார் இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். மருத்துவரை சந்திக்க சென்ற போது தம்மை பாலியல் ரீதியாகRead More →

Reading Time: < 1 minuteபுலம்பெயர்தல் தொடர்பில் கொண்டுவரப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் புலம்பெயர்வோர் எண்ணிக்கை குறையும் என்று கூறியுள்ளது கனடா அரசு. ஆனால், உண்மையில், புலம்பெயர்வோர் எண்ணிக்கை கனடா அரசு வெளியிட்ட எண்ணிக்கையைவிட அதிகரிக்கும் என மாறுபட்ட கருத்தொன்றை வெளியிட்டுள்ளது கனடா வங்கி. மார்ச் மாதம் 21ஆம் திகதி, கனடாவில் தற்காலிகமாக வாழும் வெளிநாட்டவர்களின் (non-permanent residents or NPRs) எண்ணிக்கையை, மக்கள்தொகையில் 6.2 சதவிகிதத்திலிருந்து, 5 சதவிகிதமாக குறைக்க நடவடிக்கை எடுக்க இருப்பதாக, கனடாவின் புலம்பெயர்தல்,Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் நியூ ஃபவுண்ட்லான்ட் பகுதியில் உரிமை கோரப்படாத சடலங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. மரண சடங்குகளை மேற்கொள்வதற்கு பொருளாதார இயலுமை இல்லாதவர்கள் சடலங்களை கைவிட்டு செல்வதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தின் போதிய அளவு உதவியின்றி சிலரால் தங்களது நேசத்திற்குரியவர்களின் இறுதிச் சடங்குகளை மேற்கொள்ள முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது. மாகாணத்தின் மிகப்பெரிய வைத்தியசாலையில் பிணவறைகளில் உரிமை கூறப்படாத பல சடலங்கள் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மாகாணத்தின் அரசாங்கம் மக்களுக்கு போதிய அளவு வசதிகளைRead More →

Reading Time: < 1 minuteகனடிய மகளிர் கால்பந்தாட்ட பயிற்றுவிப்பாளர் பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். கனடிய தேசிய மகளிர் கால்பந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளர். பெவ் பிரிட்ஸ்மென் என்பவர் இவ்வாறு பணி நீக்கப்பட்டார். நியூசிலாந்து மகளிர் அணி பயிற்சியில் ஈடுபடுவதனை ட்ரோன் கேமரா கொண்டு கண்காணித்தார் என குறித்த பயிற்றுவிப்பாளர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இன்றைய தினம் பரிசில் ஆரம்பமாகும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதற்காக நியூசிலாந்து மற்றும் கனடிய அணிகள் பாரிஸ் சென்றுள்ளன. பரிஸில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் உள்ள கான்கார்டியா பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த இலங்கை மாணவி ஒருவர் புற்றுநோயால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் குருநாகல் தொரட்டியாவ, மல்லவபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய டபிள்யூ.எம். மாஷா விஜேசிங்க என்ற திருமணமான பட்டதாரி மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைகனடாவின் கான்கார்டியா பல்கலைக்கழகத்தில் கணிதப் பிரிவில் தத்துவவியல் முதுகலைப் படிப்பை படித்து வந்த நிலையில் கடுமையான வயிற்று புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வந்துள்ளார்.Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிள் ஒன்று வாகனம் ஒன்றில் மோதியதன் காரணமாக இந்த விபத்து இடம் பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் தொடர்பில் டொரன்டோ போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கிங்ஸ்டன் மற்றும் ஷெப்பர்ட் வீதிகளுக்கு அருகாமையில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.Read More →

Reading Time: < 1 minuteஇலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பை வரவேற்பதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். அதன்படி இலங்கைப் பிரஜைகளுக்கு அவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க அதிகாரம் அளிக்கும் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் ஜனநாயகத்திற்கான நீண்டகால உறுதிப்பாட்டை உறுதிப்படுத்தும் தேர்தல் ஆணையத்தின் செப்டம்பர் 21 ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பை நாங்கள் வரவேற்கிறோம் என்றும் இலங்கை குடிமக்களை தீர்மானிக்க அதிகாரம் அளிக்கும் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலைRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் நியூ பிரவுன்ஸ்வீட் பிராந்தியத்தின் ரொத்சேய் பகுதியில் வீடு ஒன்றிலிருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஆண் ஒருவரினதும் பெண் ஒருவரினதும் சடலங்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த இருவரினதும் மரணத்திற்கான காரணங்கள் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை. சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் காரணமாக பொது மக்களுக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனை நிறைவடையும் வரையில் இந்த சம்பவம் தொடர்பில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் கியூபிக் மாகாண நீதிமன்ற தீர்ப்பு குறித்து பெண் ஒருவர் அதிருப்தி வெளியிட்டுள்ளார். 25 வயதான தமது மகளை வாகனத்தில் மோதி கொன்ற நபருக்கு விதிக்கப்பட்ட தண்டனை குறித்து அவர் இவ்வாறு அதிருப்தி வெளியிட்டுள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு நபர் ஒருவர் தமது மகளை வாகனத்தில் மோதி தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபருக்கு விதிக்கப்பட்ட தண்டனையில் ஆறில் ஒரு பகுதியை மட்டும் குறித்த நபர் சிறையில் கழித்துRead More →