Reading Time: < 1 minuteகனடாவின் பிரபல சொக்லெட் நிறுவனமொன்றில் வேலை நிறுத்தப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. பிரபல நிறுவனமான நெஸ்ட்லே நிறுவனத்தில் இவ்வாறு நூற்றுக் கணக்கான பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாத காரணத்தினால் இவ்வாறு வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இயந்திர பணியாளர்கள், பொதியிடுபவர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட 461 பேர் இவ்வாறு போராட்டத்தில் குதித்துள்ளனர். ஓய்வூதியம், வாழ்க்கைச் செலவு படி போன்றன தொடர்பிலான கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ShareTweetPin0Read More →

Reading Time: < 1 minuteகனடிய தபால் திணைக்களம் பாரியளவு நட்டத்தை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. திணைக்களத்தின் நிதி நிலைமைகள் மிகவும் மோசமான நிலையில் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஓராண்டு காலப்பகுதிக்குள் நிதிப் பற்றாக்குறை நிலைமை ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த 2023ம் ஆண்டில் கனடிய தபால் திணைக்களம் 748 மில்லியன் டொலர் நட்டத்தை எதிர்நோக்கியுள்ளது. முத்திரைகளின் கட்டணங்களை அதிகரிப்பதன் மூலம் ஏற்பட்டுள்ள நட்டத்தை ஈடு செய்ய முடியாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த 2018ம் ஆண்டுRead More →

Reading Time: < 1 minuteமனிதாபிமான கண்ணிவெடி குறைப்பு தொடர்பான சர்வதேச மாநாட்டில் இலங்கையின் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடு பாராட்டைப் பெற்றுள்ளது. மனிதாபிமான கண்ணிவெடிகளை அகற்றுவதற்கான சர்வதேச மாநாடு சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் உள்ள சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெற்றது. இதில் 130 நாடுகளின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டதுடன், மனிதாபிமான கண்ணிவெடி அகற்றலுக்கான ஜெனீவா சர்வதேச மையம் மற்றும் கண்ணிவெடி நடவடிக்கை தொடர்பான ஐக்கிய நாடுகளின் ஒருங்கிணைப்புக் குழு ஆகியன இணைந்து இந்த மாநாட்டை ஏற்பாடுRead More →

Reading Time: < 1 minuteஒன்றாரியோ மாகாணத்தில் இடம்பெற்ற இரண்டு தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் ஆளும் முற்போக்கு கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றியீட்டியுள்ளது. மிஸ்ஸசாகாவிற்கு மேற்கில் அமைந்துள்ள மில்டன் தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் ஸீ ஹமீட் 2400 வாக்குகளைப் பெற்றுக்கொண்டு வெற்றியீட்டியுள்ளார். லிபரல் கட்சியின் வேட்பாளர் காலென் நாடியோவை விடவும் ஒன்பது வீத வாக்குகளை ஹாமீட் பெற்றுக்கொண்டுள்ளார். ஒன்றாரியோ மாகாணத்தின் மற்றுமொரு தொகுதியான லாம்டோன் கென்ட் மிடில்செக்ஸ் தொகுதியிலும் கன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளர் வெற்றியீட்டியுள்ளார். கன்சர்வேடிவ்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ரொறன்ரோவில் ஒவ்வொரு நாற்பது நிமிடங்களுக்கு ஒரு தடவை வாகனமொன்று களவாடப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஆண்டில் பதிவான புள்ளிவிபரத் தகவல்களின் அடிப்படையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் வாகனக் கொள்ளைச் சம்பவங்கள் மேலும் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பொலிஸாரும், நகர நிர்வாகமும் கூட்டாக இணைந்து வாகனக் கொள்ளைச் சம்பவங்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வாகனங்கள் கொள்ளையிடப்பட்டு வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமான முறையில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் ஜோதிடர் ஒருவர் லொத்தர் சீட்டிலுப்பில் பரிசு வென்றுள்ளார். மொன்றியாலைச் சேர்ந்த 69 வயதான ரொபர்ட் கரோயூ என்ற நபரே இவ்வாறு பரிசு வென்றுள்ளார். லொட்டோ கியூபெக் லொத்தர் சீட்டிலுப்பில் அவர் இவ்வாறு பரிசு வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. உள்ளுர் பத்திரிகைகளில் மாதாந்த ஜோதிட எதிர்வுகூறல்களை எழுதி வரும் ரொபர்ட் தனது அதிர்ஸ்டம் பற்றி எதிர்வுகூறியதில்லை. கிரக நிலையினால் தாம் இவ்வாறு பரிசு வென்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 1850 மற்றும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் ஏதிலி அந்தஸ்து நிராகரிக்கப்படும் நபர்கள் துரித கதியில் நாடு கடத்தப்படக்கூடிய முறைமை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்காக கனடடிய குடிவரவு மற்றும் ஏதிலிகள் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் கனடாவில் கற்கும் வெளிநாட்டு மாணவர்களின் ஏதிலி அந்தஸ்து கோரிக்கை 1500 வீதமாக உயர்வடைந்துள்ளது. மாணவர் வீசா காலம் முடிவடைந்ததன் பின்னர் தொடர்ந்தும் கனடாவில் தங்கியிருக்கும் நோக்கில் இவ்வாறு ஏதிலி அந்தஸ்து கோரப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்தRead More →

Reading Time: 5 minutesகனடாவின் ஸ்காபுறோவில் நடைபெற்ற பொதுமக்கள் – ஊடகவியலாளர்கள் சந்திப்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்னாள் உறுப்பினர் நிமால் விநாயகமூர்த்தி கலந்துகொண்டு தனது தன்னிலை விளக்கத்தை தெரிவித்துள்ளார். ஜனநாயக நெறிமுறைகளுக்கு அமைவாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பலப்படுத்தப்பட வேண்டுமென்று நான் தொடர்ச்சியாகக் கூறி வந்திருக்கிறேன். வளர்ச்சி நிலைக்கு ஏற்ப மாற்றங்கள் அவசியம் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறேன். என்னைப் போலவே இன்னும் பலரும் கருத்து கொண்டவர்களாக இருந்தார்கள். ஆனால் எமதுRead More →

Reading Time: < 1 minuteயாழ் நகரின் முக்கிய சுற்றுலாத் தலமாக காணப்படும் கோட்டையை, சுற்றுலாப் பயணிகளின் தேவைக்கு ஏற்றால் போல மாற்றியமைப்பதற்கான புதிய திட்டங்களை வகுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ் அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார். ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற கூட்டத்தின் போதே ஆளுநர் இந்த பணிப்புரையை விடுத்தார். யாழ் மாநகர சபை, நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகியன இணைந்து புதியRead More →

Reading Time: < 1 minuteஇரண்டு பேர் இருநூறு குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ளனர் என்றால் நம்ப முடிகின்றதா? கனடாவில் இவ்வாறான ஓர் சம்பவம் பதிவாகியுள்ளது. கனடாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு ஆண்கள் சுமார் 200 பிள்ளைகளுக்கு தந்தையாகியுள்ளனர். இந்த இருவரும் விந்தணு தானம் செய்ததன் மூலம் இவ்வாறு 200 பிள்ளைகளுக்கு தந்தையாகியுள்ளனர். சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்து விந்தணு தானம் செய்துள்ளனர். கனடாவின் கியூபெக் மாகாணத்தில் இந்த அதிர்ச்சியான சம்பவம் இடம்பெற்றுள்ளது. மாகாணத்தின் பல்வேறு இடங்களைச்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் மிகவும் தேடப்பட்டு வந்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ரொறன்ரோவின் கிழக்குப் பகுதியில் கடந்த கோடை காலத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 35 வயதான மைக்கல் பிபெ என்ற நபரே இவ்வாறு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கனடாவில் மிகவும் தேடப்பட்டு வரும் பட்டியலில் பிபெவின் பெயர் உள்ளடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. பிரின்ஸ் ஒப் எட்வர்ட் தீவுகளின் சார்லட்டவுன் பகுதியில் வைத்துRead More →

Reading Time: < 1 minuteகனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவிற்கு விசர் பிடித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் பியோ பொலியேவ் திட்டிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற அமர்வுகளின் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நாட்டின் பிரதமரை தகாத முறையில் திட்டிய எதிர்க்கட்சித் தலைவரை, சபாநாயகர் கிரெக் பர்குஸ் அவையிலிருந்து வெளியேற்றியிருந்தார். பிரதமருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கொக்கேய், ஹெரோயின் போன்ற போதைப் பொருள் பயன்பாடு தொடர்வில் நடைபெற்ற விவாதத்தில் இந்தRead More →