Reading Time: < 1 minuteரொறன்ரோவில் கடன் அட்டை இயந்திர திருட்டுச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. சிறு வியாபாரங்களில் ஈடுபடும் நிறுவனங்கள் அதிகளவில் இலக்கு வைக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வங்கி அட்டைகள் மூலம் கொடுக்கல் வாங்கல் செய்வதற்கு உதவும் இயந்திரங்கள் இவ்வாறு களவாடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறு வியாபாரங்களில் ஈடுபடுவோர் இந்த நடவடிக்கைகளினால் பெரிதும் பாதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2023ம் சுமார் 300 சிறு வியாபார நிறுவனங்களின் விற்பனை இயந்திரங்கள் களவாடப்பட்டுள்ளன. இவ்வாறான களவுச் சம்பவங்களினால் சிலRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் ரொறன்ரோவில் வாகனக் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 31 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஒன்றாரியோ மற்றும் மொன்றியாலில் பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். அண்மைய நாட்களில் வாகனத் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. வாகனக் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஒன்றாரியோ மற்றும் மொன்றியல் காவற்துறையினர் கூட்டாக அறிவித்துள்ளனர். இது தொடர்பில் கூட்டு ஊடக சந்திப்பு ஒன்றும் நடத்தப்பட்டது. நாட்டின் பல பகுதிகளில்;Read More →

Reading Time: < 1 minuteஇலங்கையின் குறைந்த கட்டண விமான சேவையான FitsAir எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் கட்டுநாயக்க மற்றும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 16 ஆம் திகதி ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ள இந்த விமான சேவையானது வாரம் இருமுறை இடம்பெறவுள்ளது. FitsAir தற்போது கட்டுநாயக்கவிலிருந்து டுபாய், மாலே மற்றும் சென்னைக்கு நேரடி விமான சேவைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteவான்கூவர் தீவுகளில் இந்த மாத துவக்கத்தில், ஒரே நாளில் 2,000 முறைக்கும் அதிகமாக நிலநடுக்கங்கள் உருவானதாக செய்தி ஒன்று வெளியாகியுள்ள நிலையில், அது பயத்தை ஏற்படுத்தும் செய்தி அல்ல என அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளார்கள். கனடாவின் வான்கூவர் தீவுகளில், இம்மாத துவக்கத்தில் ஒரே நாளில் 2,000க்கும் அதிகமான நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. ஆனால், அது அச்சுறுத்தும் செய்தி அல்ல, அது ஒரு இயற்கை நிகழ்வு என்கிறார்கள் அறிவியலாளர்கள். அந்த நிலநடுக்கங்கள் அனைத்து கடலுக்குக்Read More →

Reading Time: < 1 minuteதாய்லாந்தில் இருந்து 846 பயணி கள் மற்றும் 469 பணியாளர்களுடன் அதி சொகுசு கப்பலொன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. வைக்கிங் ஸ்கின் என்ற சொகுசு கப்பல் ஒன்றே இவ்வாறு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. குறித்த கப்பலில் அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் உள்ள சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பயணிகள் காலி மற்றும் கொழும்பு உள்ளிட்ட இடங்களுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் ஒட்டாவாவில் இரண்டு வயதேயான சிறுவன் விபத்து ஒன்றின் போது தைரியமாக நடந்து கொண்ட விதம் அனைவரினாலும் போற்றிப் பாராட்டப்பட்டுள்ளது. எதிர்பாராத விதமாக சிறுவன் ஒருவன் குளியலறையின் பார்த்டப் சிங்கில் (bathtub drain sink) விரல் சிக்கிக் கொண்டுள்ளது. இரண்டு வயதான கிரேசன் என்ற சிறுவனே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளார். இரண்டு வயது சிறுவனின் மூன்று விரல்கள் சிங்க் துளையில் சிக்கிக் கொண்டதாக தீயணைப்புப் படையினருக்கு பெற்றோர் அறிவித்துள்ளனர். விரைந்துRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் ரொறன்ரோவின் பூங்காக்களில் மது அருந்துவது தொடர்பில் நகராட்சி பணியாளர்கள் யோசனை ஒன்றை முன்வைத்துள்ளனர். பரீட்சார்த்த அடிப்படையில் சில பூங்காக்களில் தற்காலிகமாக மது அருந்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த பரீட்சார்த்த முடிவுகளின் அடிப்படையில் பூங்காக்களில் நிரந்தரமாக மது அருந்துவதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டுமென நகராட்சி பணியாளர்கள் பரிந்துரை செய்துள்ளனர். பூங்காக்களில் மது அருந்துவதற்கு வழங்கப்பட்ட அனுமதி, பூங்காக்களுக்கு செல்வோருக்கு திருப்தி அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ரொறன்ரோவின் 27 பொதுப் பூங்காக்களில் 19Read More →

Reading Time: < 1 minuteபிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தலைமையிலான கனடிய அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான யோசனை தோற்கடிக்கப்பட்டுள்ளது. கொன்சவடிவ் கட்சியின் தலைவர் பியே பொலியேவ் இந்த யோசனையை நாடாளுமன்றில் சமர்ப்பித்திருந்தார். கார்பன் வரி அறவீடு செய்யும் திட்டத்திற்கு எதிர்ப்பை வெளியிடும் நோக்கில் நம்பிக்கையில்லா தீர்மான யோசனை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்கில் இந்த நம்பிக்கையில்லா தீர்மான யோசனை சமர்ப்பிக்கப்பட்ட போதிலும் அதற்கு போதியளவு ஆதரவு கிடைக்கவில்லை. யோசனைக்கு ஆதரவாக கொன்சவடிவ் கட்சியினர்Read More →

Reading Time: < 1 minuteகனடிய ஊடகங்கள் தார்மீகப் பொறுப்புடன் செயற்பட்டு வருவதாக அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கனடாவின் ஒட்டாவா பார்ஹெவன் பகுதியில் இலங்கைக் குடும்பம் ஒன்று படுகொலை செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் ஊடகங்கள் நடந்து கொண்ட விதம் குறித்து பாராட்டியுள்ளார். சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தில் பங்கேற்று நாடாளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நான்கு சிறுவர்கள் உள்ளிட்ட ஆறு இலங்கைர்கள் படுகொலை செய்யப்பட்டனர். பேர்பியோ டிRead More →

Reading Time: < 1 minuteஇலங்கை அரசியல்வாதியான , தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க நேற்றையதினம்(21) கனடாவுக்கு வந்துள்ளார். நாளை மற்றும் நாளைமறுதினம் (23, 24) கனடாவின் ரொறொன்ரோ மற்றும் வான்கூவரில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டங்கள் மற்றும் பல சிநேகபூர்வ சந்திப்புகளில் பங்கேற்கவுள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் கனடாவிற்கு வந்த அநுரக்கு ரொறன்ரோ விமான நிலையத்தில் கனடாவாழ் இலங்கையர்களால் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், தேசிய மக்கள் சக்தியின்Read More →

Reading Time: < 1 minuteபுலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகள் எடுத்துவரும் கனடா அரசு, அதிரடியாக அடுத்த நடவடிக்கையைத் துவங்கியுள்ளது. கனடாவுக்குக் கல்வி கற்க வரும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கைக்குக் கட்டுப்பாடு, அவர்கள் எவ்வளவு நேரம் வேலை செய்யலாம் என்பதற்குக் கட்டுப்பாடு என தொடர்ந்து புலம்பெயர்தல் தொடர்பில் கட்டுப்பாடுகள் விதித்துவரும் கனடா அரசு, அடுத்த கட்டமாக ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கனடா வரலாற்றிலேயே முதல் முறையாக, கனடாவில் தற்காலிகக் குடியிருப்பு அனுமதிக்கும் கட்டுப்பாடுRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் இடம்பெற்ற கோர விபத்துச் சம்பவத்தில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கனடாவின் கியூபெக் மாகாணத்தின் சபாயிஸ் பகுதியில் இந்த வாகன விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பிக்அப் ரக வாகனமொன்றும் வேன் ஒன்றும் மோதிக் கொண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் நான்கு பேர் க்ரீ வாஸ்வான்பீ பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து காரணமாக பாதை மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. விபத்திற்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை. சம்பவம் தொடர்பில்Read More →