Reading Time: < 1 minuteபிரிட்டிஷ் கொலம்பியாவில் கட்டுமான விபத்தொன்றில் புலம்பெயர்ந்த பெண் பலி! கனடாவில், கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த புலம்பெயர்ந்த பெண்ணொருவர் பணித்தலம் சார்ந்த விபத்தொன்றில் பரிதாபமாக பலியானார். கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில், வான்கூவரில் கட்டுமானப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார் யுரிடியா (Yuridia Flores, 41) என்னும் பெண். யுரிடியா, மெக்சிகோவிலிருந்து புலம்பெயர்ந்தவர் ஆவார். அவருக்கு ஒரு மகளும், 16 வயதில் ஒரு மகனும் இருக்கிறார்கள். அவரது காதலர் பெயர் Daniel Garcia Hernandez. கடந்தRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் குடும்ப மருத்துவர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கத் தவறினால், அவர்களுக்கான சிகிச்சை செலவுகளை ஏற்க நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் அநேகமான மாகாணங்களில் குடும்ப மருத்துவர்களுக்கு பற்றாக்குறை நிலவி வருகின்றது. கனடியப் பிரஜைகள் குடும்ப மருத்துவரின் சேவையை பெற்றுக் கொள்ள நீண்ட காலம் காத்திருப்பதனை விடவும் மாற்று வழிகளை பின்பற்றுவது உசிதமானது என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக நோய் தொடர்பில் அறிந்து கொள்வதற்கு காத்திருக்கத் தேவையில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனினும்Read More →

Reading Time: < 1 minuteஇலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக எலிசபெத் கெத்ரின் ஹோர்ஸ்ட் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக பணியாற்றிய ஜூலி சங்கின் பதவிக்காலம் விரைவில் நிறைவடையவுள்ள நிலையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி சிரேஷ்ட அமெரிக்க ராஜதந்திரியான எலிசபெத் கெத்ரின் ஹோஸ்ட், பாகிஸ்தானுக்கு பொறுப்பான தலைமை பிரதி செயலாளராக பதவி வகித்து வருகின்ற நிலையிலேயே இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் அமெரிக்க செனட் சபையின் அனுமதிக்கிணங்க இலங்கைRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் இணையத்தில் இடம்பெறும் தீங்குகளை தடை செய்யும் சட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இணையத்தில் இடம்பெறக்கூடிய குற்றச் செயல்களை தடுக்கும் நோக்கில் இந்த புதிய சட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இணையத் தீங்குச் தடைச் சட்டம் தொடர்பிலான சட்ட மூலத்தை அறிமுகம் செய்வதற்கு நீண்ட காலம் தகவல் திரட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இணையத்தை பயன்படுத்துவதனால் ஏற்படக்கூடிய தீங்குகளை தடுக்கும் நோக்கில் புதிய சட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி போலிRead More →

Reading Time: < 1 minuteஇந்திய குடும்பமொன்று பரிதாபமாக உயிரிழக்க காரணமாகியிருந்த நபர் என்ற சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க அதிகாரிகள் குறித்த நபரை கைது செய்துள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக கனடிய – அமெரிக்க எல்லைப் பகுதியில் இந்திய குடும்பம் ஒன்று பரிதமாக பலியாகியிருந்தது. ஹர்ஸ்குமார் ராமன்லால் பாட்டில் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 39 வயதான ஜக்தீஸ் பாட்டில், அவரது மனைவி, மற்றும் இரண்டு பிள்ளைகள் இந்தRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கடும் குளிரில் காத்திருந்த பெண் ஏதிலிக் கோரிக்கையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஏதிலி முகாமொன்றில் தங்கியிருப்பதற்காக காத்திருந்த நிலையில் குறித்த பெண் இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கென்யாவைச் சேர்ந்த 46 வயதான நான்கு பிள்ளைகளின் தாயான டெல்பினா நிகி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மிஸ்ஸிசாகாவில் ஏதிலி முகாமொன்றில் அடைக்கலம் பெற்றுக் கொள்வதற்காக குளிரில் வெளியே காத்திருந்த நிலையில் இவ்வாறு பெண் உயிரிழந்துள்ளார். ஏதிலிக் கோரிக்கையாளர்கள் நீண்ட நேரம் குளிர்ந்தRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் தட்டம்மை தடுப்பூசி குறித்து அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. கனடாவின் பிரதம மருத்துவ அதிகாரி டொக்டர் திரேசா டேம் இந்த விடயத்தை அறிவித்துள்ளார். நாட்டை வெளியேறுவோர் தட்டம்மை தடுப்பூசிகள் இரண்டு ஏற்றிக் கொண்டதனை உறுதி செய்ய வேண்டுமென கோரப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் தட்டம்மை நோயாளர் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்லும் போக்கினை பதிவு செய்துள்ளது. வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வோர் ஊடாக நாட்டிற்குள் தட்டம்மை நோய் பரவுகை ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.Read More →

Reading Time: < 1 minuteநாட்டில் தங்கியிருக்கும் ரஷ்ய மற்றும் உக்ரைன் சுற்றுலாப் பயணிகள் 14 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அமைச்சரவையின் அனுமதியின்றி வெளியிடப்பட்டுள்ள அறிவித்தல் தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி ரஷ்ய மற்றும் உக்ரேனிய சுற்றுலாப் பயணிகளுக்கு முன்னர் வழங்கப்பட்ட வீசா நீடிப்புகளை இரத்து செய்வதற்கு இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக தீர்மானிக்கவில்லை எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிடப்பட்டுள்ளது. ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் பாரியளவில் துப்பாக்கிகளை பொலிஸார் மீட்டுள்ளனர். அமெரிக்கா மற்றும் கனடிய பாதுகாப்பு தரப்பினர் இணைந்து விசாரணைகளை நடத்தியுள்ளனர். குறித்த விசாரணைகளில் 274 சட்டவிரோத ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த ஆயுதங்கள் கனடாவிலும், அமெரிக்காவிலும் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட ஆயுதங்களில் அதிக எண்ணிக்கையிலானவை கைத்துப்பாக்கிகள் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவிலிருந்து ஆயுதங்கள் கடத்தும் நடவடிக்கைளில் ஈடுபட்ருந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் சுமார் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ShareTweetPin0Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தங்களுக்கும் ஏனையவர்களுக்கும் ஆபத்து ஏற்படுத்தக் கூடிய வகையில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படுவதில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வாறான நபர்களினால் சமூகத்திற்கும், அவர்களுக்கும் பாரிய ஆபத்துக்கள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் கியூபெக் மாகாணத்தின் வாடுறுயில் பகுதியில் இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதல் தொடர்பில் கருத்து வெளியிடப்பட்டுள்ளது. மொஹமட் இம்டியாஸ் என்ற நபர் தனது மனைவிக்குRead More →

Reading Time: < 1 minuteகனடா, சஸ்காடூன் பகுதியில் பெண் ஒருவர் பாரியளவில் மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அல்பேர்ட்டா மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மற்றும் ஒக்ரோபர் மாதங்களில் இந்த மோசடிகள் இடம்பெற்றுள்ளன. வயது முதிர்ந்தவர்களிடம் இவ்வாறு அதிகளவில் மோசடிகள் செய்யப்பட்டுள்ளன. இந்தப் பெண் மொத்தமாக 97000 டொலர்களை மோசடி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வயது முதிர்ந்தவர்களை ஏமாற்றி அதிகளவில் மோசடி செய்துள்ளதாக இந்தப் பெண்Read More →

Reading Time: < 1 minuteகனேடிய பல்கலைக்கழகம் ஒன்றில், சாக்லேட் விற்பனை இயந்திரத்தில் ரகசிய கமெரா ஒன்று பொருத்தப்பட்டிருந்த விடயம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டுள்ள விற்பனை இயந்திரம் ஒன்றில், மாணவர்கள் சிலர் சிப்ஸ் வாங்க முயன்றுள்ளனர். அப்போது, அதிலிருந்த சிறிய திரையில் ஒரு செய்தி தோன்றியுள்ளது. அந்த செய்தியைப் படித்த மாணவர்கள் பல்கலை அலுவலர்களுக்கு தகவலளிக்க, மாணவர்கள் மட்டுமின்றி அலுவலர்களும் அதிர்ச்சியடைந்தார்கள். ’இயந்திரத்தில் கோளாறு, இயந்திரத்தால் முகத்தை சரியாகRead More →