Reading Time: < 1 minuteவருடக்கணக்காக கனடா மற்றும் பிரித்தானியாவுக்கிடையில் வர்த்தக பேச்சுவார்த்தைகள் நடந்துவந்த நிலையில், பிரித்தானிய தரப்பில் பேச்சுவார்த்தை நடத்திவந்தவர்கள், கனடாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் இருந்து, நேற்று, அதாவது, வியாழனன்று விலகினார்கள். இருதரப்புக்கும் இடையே, கனேடிய சீஸ் (cheese) சந்தையில், பிரித்தானிய சீஸ் உற்பத்தியாளர்கள் எவ்வளவு தீர்வையில்லாத (Tariff free) அணுகலைப் பெறவேண்டும் என்பது ஒரு முக்கிய விடயமாக உள்ளது. பிரெக்சிட்டிற்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட இடைக்கால ஒப்பந்தம் ஒன்று, மூன்றுRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் முன்னாள் நீதி அமைச்சர் டேவிட் லமாட்டி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். லிபரல் அரசாங்கத்தில் லமாட்டி நீதி அமைச்சராக கடமையாற்றியிருந்தார். எமார்ட் வெர்டுன் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக லமாட்டி தெரிவித்துள்ளார். அரசியலிலிருந்து விடைபெற்றுக்கொண்டு தனியார் சட்ட நிறுவனமொன்றில் இணைந்து கொள்வதாக தெரிவித்துள்ளார். கடந்த 2015ம் ஆண்டில் முதன் முறையாக லமாட்டி நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியிருந்தார். அதன் பின்னர் 2019ம் ஆண்டு தேர்தலில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் எதிர்வரும் காலங்களில் மறதி நோயாளர் எண்ணிக்கை வெகுவாக உயர்வடையும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடாவில், 2050 ஆம் ஆண்டளவில் மறதி நோயாளர் எண்ணிக்கை 187 வீதமாக உயர்வடையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆய்வாளர்களினால் அண்மையில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகள் மூலம் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. மறதி நோயாளர் எண்ணிக்கைநாட்டில் சிரேஸ்ட பிரஜைகளின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கின்றது. இந்தப் பின்னணியில், இன்னும் 26 ஆண்டுகளில் மறதி நோயாளர் எண்ணிக்கை 1.7 மில்லியனாகRead More →

Reading Time: < 1 minuteசிதறிக்கிடக்கும் தலைமைத்துவத்தை சிறீதரன் ஒன்றிணைக்க வேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்க உறுப்பினர் நிமால் விநாயகமூர்த்தி வலியுறுத்தியுள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள சிவஞானம் சிறீதரனுக்கு அவர் அனுப்பிய வாழ்த்துச் செய்தியிலேயே இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், நிலத்திலும் புலம்பெயர் தேசத்திலும் கட்சிகள் மற்றும் அமைப்புக்களை ஒன்றிணைக்கும் காலப் பணியை அவர் ஆற்ற வேண்டும் என்றும் செயலூக்கமான நடவடிக்கை வாயிலாவே ஈழத் தமிழ் மக்களின்Read More →

Reading Time: < 1 minuteநாட்டில் வட்டி வீதத்தில் மாற்றமில்லை என கனடிய மத்திய வங்கி அறிவித்துள்ளது. வங்கி வட்டி வீதம் தொடர்ந்தும் ஐந்து வீதமாக பேணப்படும் என மத்திய வங்கியின் ஆளுனர் ரிப் மெக்கலம் தெரிவித்துள்ளார். விலை ஸ்திரத்தன்மையை பேணும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். பொருளாதார வளர்ச்சி வேகம் உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் வட்டி வீதம் மாற்றமின்றி பேணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும், பணவீக்கம் தொடர்ந்தும் அதிகரித்தால் வட்டி வீதங்கள்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில், தற்கொலை எண்ணத்துடன் போராடிக்கொண்டிருந்த பெண் ஒருவருடைய சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்டு அவரிடம் அத்துமீறிய பொலிசார் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 2021ஆம் ஆண்டு, ஆகத்து மாதம் 14ஆம் திகதி, பிரிட்டிஷ் கொலம்பியாவில் மது அருந்தி சுயநினைவின்றிக் கிடந்த இளம்பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கான்ஸ்டபிள் Connor McDonald என்னும் பொலிசார் ஒருவர் அவருடன் நேரம் செலவிட்டுள்ளார். அந்தப் பெண்ணுக்கும் அவர் மீது ஈர்ப்பு ஏற்படவே, இருவரும் ஜாலியாக பேசிக்கொண்டிருந்திருக்கிறார்கள். அந்தப்Read More →

Reading Time: < 1 minuteநச்சுப் போதை மருந்து காரணமாக பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கூடுதல் எண்ணிக்கையிலான மரணங்கள் பதிவாகியுள்ளன. கடந்த 2023ம் ஆண்டில் மாகாணத்தில் சுமார் இரண்டாயிரத்து ஐநூறு பேர் நச்சு போதை மருந்து வகைகள் பயன்பாட்டினால் உயிரிழந்துள்ளனர். நாளொன்றுக்கு சராசரியாக ஏழு பேர் என்ற அடிப்படையில் மரணங்கள் பதிவாகியுள்ளன. பிரிட்டிஷ் கொலம்பியாவின் பிரதம மரண விசாரணையாளர் லிசா லாபொயின்ட் இது பற்றிய தகவல்களை ஊடகங்களிடம் வெளிப்படுத்தியுள்ளார். நச்சுப் போதை மருந்து பயன்பாட்டினால் ஏற்படக்கூடியRead More →

Reading Time: < 1 minuteகனடிய அரசாங்கம், உக்ரைனுக்கு 35 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவ உதவிகளை வழங்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் அரசாங்கம், இராணுவ உபகரணங்களை வழங்கவும், பயிற்சிகளை வழங்கவும் உதவி வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சர் பில் பிளயர் உக்ரைனுக்கான உதவிகள் குறித்து அறிவித்துள்ளார். ரஸ்யாவுடனான போருக்காக இவ்வாறு உதவிகள் வழங்கப்படுவதாகவும், பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்தக் கூடிய படகுகள் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார். தாக்குதல் விமானங்களை இயக்குவதற்கு உக்ரைன்Read More →