Reading Time: < 1 minuteதுருக்கிக்கு மீண்டும் ஆயுதங்களை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கனடா அறிவித்துள்ளது. ட்ரோன் உதிரிப் பாகங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேட்டோ அமைப்பில் சுவீடன் மற்றும் பின்லாந்து என்பன உள்வாங்கப்படுவதற்கு அண்மையில் துருக்கி இணக்கம் வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து துருக்கிக்கு ஆயுதங்கள் விற்பனை செய்ய கனடிய அரசாங்கம் தனது இணக்கப்பாட்டை வெளியிட்டுள்ளது. இதன்படி விரைவில் துருக்கிக்கு கனடா ஆயுத ஏற்றுமதிகளை தொடரும் எனRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் ரொறன்ரோவில் இடம்பெற்று வரும் மோசடி குறித்து பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். வீடு வீடாக சென்று ஓரு கும்பல் பாரியளவில் மோசடிகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர். சிக் கிட்ஸ் (SickKids Foundation) என்ற அறக்கட்டளைக்காக நிதி திரட்டும் போர்வையில் இந்த மேசாடி இடம்பெற்று வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. போலியான கும்பல் ஒன்று நன்கொடைகளை திரட்டி வருவதாக பொலிஸார் பொதுமக்களை எச்சரித்துள்ளனர். மெய்யான சிக் கிட்ஸ் அமைப்பின் உறுப்பினர்கள் தங்களதுRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் பாடசாலை பஸ் சாரதியொருவர் மிக மோசமாக நடந்து கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நயகராவில் பாடசாலை பஸ் ஒன்றின் சாரதி விபத்து ஒன்றை மேற்கொண்டதன் பின்னர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பஸ்ஸில் பயணம் செய்த மாணவர்களை நிர்க்கதியாக்கி, குறித்த சாரதி தப்பிச் சென்றுள்ளார். நயகராவின் வெல்லென்ட் பகுதியின் சார்ளஸ் ட்ரைவ் பகுதியில் விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தினால் பஸ்ஸின் ஒரு டயர் கழன்றிருந்தது எனவும், நான்கு பிள்ளைகள் பஸ்ஸில் இருந்தனர் எனவும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் கடுங்குளிரில், உறைபனியில், நடந்தே நுழைய முயன்று, ஒரு குடும்பமே பனியில் உறைந்து இறந்துகிடந்த சம்பவம் மூன்று நாடுகளை அதிரவைத்த விடயம் நினைவிருக்கலாம். இந்நிலையில், அந்தக் குடும்பத்தை அமெரிக்காவுக்குள் கடத்த உதவிய நபர் கனடாவில்தான் இருக்கிறார் என்னும் அதிரவைக்கும் செய்தி தற்போது வெளியாகியுள்ளது… 2022ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 19ஆம் திகதி, இந்தியாவின் குஜராத்திலுள்ள Dingucha என்ற கிராமத்தைச் சேர்ந்த, ஜகதீஷ் பட்டேல் (39), அவரது மனைவி வைஷாலிRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் பத்தாயிரம் டொலர் லொத்தர் சீட்டிலுப்பில் பரிசு வென்ற ஒருவர் இதுவரையில் உரிமை கோரவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த லொத்தர் சீட்டு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11ம் திகதியுடன் காலாவதியாகின்றது. 14, 15, 25, 36, 42 மற்றும் 43 என்ற பரிசு இலக்கங்களையும் 9 என்ற போனஸ் இலக்கத்தையும் கொண்ட லொத்தர் சீட்டே இவ்வாறு உரிமை கோரப்படாதிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. LOTTARIO என்ற லொத்தர் சீட்டிலுப்பின் மூலம் இந்த பரிசுRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் களவாடப்பட்ட பெருந்தொகை வாகனங்கள் இத்தாலியில் மீட்கப்பட்டுள்ளன. சுமார் 251 வாகனங்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. களவாடப்பட்ட வாகனங்கள் இத்தாலி வழியாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு கடத்தப்படவிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. விலை அதிகமான மற்றும் உயர் பண்டக்குறிகளைக் கொண்ட வாகனங்களே இவ்வாறு களவாடப்பட்டுள்ளன. இத்தாலிய பொலிஸார் இந்த வாகனங்களை மீட்டுள்ளனர். இன்டர்போல் மற்றும் கனடிய பொலிஸாரின் ஒத்துழைப்புடன் வாகனங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. போலியான தகவல்களுடன் இந்த வாகனங்கள் கொள்கலன்கள் ஊடாக அனுப்பிRead More →

Reading Time: < 1 minuteவருடக்கணக்காக கனடா மற்றும் பிரித்தானியாவுக்கிடையில் வர்த்தக பேச்சுவார்த்தைகள் நடந்துவந்த நிலையில், பிரித்தானிய தரப்பில் பேச்சுவார்த்தை நடத்திவந்தவர்கள், கனடாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் இருந்து, நேற்று, அதாவது, வியாழனன்று விலகினார்கள். இருதரப்புக்கும் இடையே, கனேடிய சீஸ் (cheese) சந்தையில், பிரித்தானிய சீஸ் உற்பத்தியாளர்கள் எவ்வளவு தீர்வையில்லாத (Tariff free) அணுகலைப் பெறவேண்டும் என்பது ஒரு முக்கிய விடயமாக உள்ளது. பிரெக்சிட்டிற்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட இடைக்கால ஒப்பந்தம் ஒன்று, மூன்றுRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் முன்னாள் நீதி அமைச்சர் டேவிட் லமாட்டி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். லிபரல் அரசாங்கத்தில் லமாட்டி நீதி அமைச்சராக கடமையாற்றியிருந்தார். எமார்ட் வெர்டுன் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக லமாட்டி தெரிவித்துள்ளார். அரசியலிலிருந்து விடைபெற்றுக்கொண்டு தனியார் சட்ட நிறுவனமொன்றில் இணைந்து கொள்வதாக தெரிவித்துள்ளார். கடந்த 2015ம் ஆண்டில் முதன் முறையாக லமாட்டி நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியிருந்தார். அதன் பின்னர் 2019ம் ஆண்டு தேர்தலில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் எதிர்வரும் காலங்களில் மறதி நோயாளர் எண்ணிக்கை வெகுவாக உயர்வடையும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடாவில், 2050 ஆம் ஆண்டளவில் மறதி நோயாளர் எண்ணிக்கை 187 வீதமாக உயர்வடையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆய்வாளர்களினால் அண்மையில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகள் மூலம் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. மறதி நோயாளர் எண்ணிக்கைநாட்டில் சிரேஸ்ட பிரஜைகளின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கின்றது. இந்தப் பின்னணியில், இன்னும் 26 ஆண்டுகளில் மறதி நோயாளர் எண்ணிக்கை 1.7 மில்லியனாகRead More →

Reading Time: < 1 minuteசிதறிக்கிடக்கும் தலைமைத்துவத்தை சிறீதரன் ஒன்றிணைக்க வேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்க உறுப்பினர் நிமால் விநாயகமூர்த்தி வலியுறுத்தியுள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள சிவஞானம் சிறீதரனுக்கு அவர் அனுப்பிய வாழ்த்துச் செய்தியிலேயே இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், நிலத்திலும் புலம்பெயர் தேசத்திலும் கட்சிகள் மற்றும் அமைப்புக்களை ஒன்றிணைக்கும் காலப் பணியை அவர் ஆற்ற வேண்டும் என்றும் செயலூக்கமான நடவடிக்கை வாயிலாவே ஈழத் தமிழ் மக்களின்Read More →

Reading Time: < 1 minuteநாட்டில் வட்டி வீதத்தில் மாற்றமில்லை என கனடிய மத்திய வங்கி அறிவித்துள்ளது. வங்கி வட்டி வீதம் தொடர்ந்தும் ஐந்து வீதமாக பேணப்படும் என மத்திய வங்கியின் ஆளுனர் ரிப் மெக்கலம் தெரிவித்துள்ளார். விலை ஸ்திரத்தன்மையை பேணும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். பொருளாதார வளர்ச்சி வேகம் உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் வட்டி வீதம் மாற்றமின்றி பேணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும், பணவீக்கம் தொடர்ந்தும் அதிகரித்தால் வட்டி வீதங்கள்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில், தற்கொலை எண்ணத்துடன் போராடிக்கொண்டிருந்த பெண் ஒருவருடைய சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்டு அவரிடம் அத்துமீறிய பொலிசார் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 2021ஆம் ஆண்டு, ஆகத்து மாதம் 14ஆம் திகதி, பிரிட்டிஷ் கொலம்பியாவில் மது அருந்தி சுயநினைவின்றிக் கிடந்த இளம்பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கான்ஸ்டபிள் Connor McDonald என்னும் பொலிசார் ஒருவர் அவருடன் நேரம் செலவிட்டுள்ளார். அந்தப் பெண்ணுக்கும் அவர் மீது ஈர்ப்பு ஏற்படவே, இருவரும் ஜாலியாக பேசிக்கொண்டிருந்திருக்கிறார்கள். அந்தப்Read More →

Reading Time: < 1 minuteநச்சுப் போதை மருந்து காரணமாக பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கூடுதல் எண்ணிக்கையிலான மரணங்கள் பதிவாகியுள்ளன. கடந்த 2023ம் ஆண்டில் மாகாணத்தில் சுமார் இரண்டாயிரத்து ஐநூறு பேர் நச்சு போதை மருந்து வகைகள் பயன்பாட்டினால் உயிரிழந்துள்ளனர். நாளொன்றுக்கு சராசரியாக ஏழு பேர் என்ற அடிப்படையில் மரணங்கள் பதிவாகியுள்ளன. பிரிட்டிஷ் கொலம்பியாவின் பிரதம மரண விசாரணையாளர் லிசா லாபொயின்ட் இது பற்றிய தகவல்களை ஊடகங்களிடம் வெளிப்படுத்தியுள்ளார். நச்சுப் போதை மருந்து பயன்பாட்டினால் ஏற்படக்கூடியRead More →

Reading Time: < 1 minuteகனடிய அரசாங்கம், உக்ரைனுக்கு 35 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவ உதவிகளை வழங்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் அரசாங்கம், இராணுவ உபகரணங்களை வழங்கவும், பயிற்சிகளை வழங்கவும் உதவி வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சர் பில் பிளயர் உக்ரைனுக்கான உதவிகள் குறித்து அறிவித்துள்ளார். ரஸ்யாவுடனான போருக்காக இவ்வாறு உதவிகள் வழங்கப்படுவதாகவும், பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்தக் கூடிய படகுகள் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார். தாக்குதல் விமானங்களை இயக்குவதற்கு உக்ரைன்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் தங்கி வெளிநாடுகளை சேர்ந்த மாணவர்கள் கல்வி பயில அந்த நாட்டு அரசாங்கம் விசாக்களை வழங்கி வருகிறது. இந்த சூழலில் கடந்த சில ஆண்டுகளாக கனடாவுக்கு வரும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை அதிகளவு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக நிரந்தர குடியுரிமை இல்லாதவர்களுக்கு தங்குவதற்கு இடம் கிடைக்காமல் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை சமாளிக்க வெளிநாட்டு மாணவர்களின் வருகைக்கு கட்டுப்பாடு விதிக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி எதிர்வரும் 2Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். கனடாவின், பிரிட்டிஸ் கொலம்பிய மாகாணத்தில் விபத்து இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரில் பயணம் செய்த மேலும் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். இவ்வாறு காயமடைந்தவர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கனேடிய பாதுகாப்பு துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் விபத்து தொடர்பிலான விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை. மேலும், சுற்றுலா நிறுவனமொன்றின் ஹெலிகொப்டரில் பயணித்தவர்களே இவ்வாறு விபத்தில் சிக்கிRead More →

Reading Time: < 1 minuteகனேடியர் ஒருவர், ஒரு இஸ்லாமியக் குடும்பத்தையே வேன் மோதிக் கொன்றுவிட்டு, இப்போது மன்னிப்புக் கோரியுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் அதை ஏற்க மறுத்துவிட்டார்கள். கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள லண்டன் பகுதியில், 2021ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 6ஆம் திகதி, சல்மான் அஃப்சால் (46), அவரது மனைவி மதீஹா சல்மான் (44), தம்பதியரின் மகள் யும்னா அஃப்சால் (15), தம்பதியரின் 9 வயது மகன் மற்றும் அஃப்சாலின் தாயாகிய தலத் அஃப்சால் (74)Read More →

Reading Time: < 1 minuteதனிப்பட்ட தகவல்கள் களவாடப்படுவதாக கனடியர்கள் கருதுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. கடந்த காலங்களை விடவும் தற்பொழுது தனிப்பட்ட தரவுகள் அம்பலமாகும் சாத்தியங்கள் அதிகம் என அநேக கனடியர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். இன்டரெக் என்னும் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. 77 வீதமான கனடியர்கள் தங்களது தரவுகள் களவாடப்படுவதாக கருதுகின்றனர். பெரும் எண்ணிக்கையிலான இணைய வாடிக்கையாளர்கள் தங்களதுRead More →