Reading Time: < 1 minuteஇலங்கையில் உற்பத்தி செய்யப்படும் மிளகு, ஏலக்காய், கிராம்பு, மஞ்சள் மற்றும் இலவங்கப்பட்டை போன்ற வாசனை திரவியங்களை கொள்வனவு செய்வது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சீன விசேட வர்த்தக பிரதிநிதிகள் குழுவொன்று இந்த நாட்களில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. சீன மசாலா இறக்குமதியாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த 42 நிறுவனங்களின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்கின்றனர். இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் வாசனை திரவியங்கள் தொடர்பில் 50 பேர் அடங்கிய குழுவினர் நேற்று (21) விவசாய மற்றும்Read More →

Reading Time: < 1 minuteஉலகத் தமிழர் பேரவை மற்றும் கனடிய தமிழ் காங்கிரஸ் ஆகியன இணைந்து வெளியிட்டுள்ள ஹிமாலய பிரகடனத்தை நிராகரிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனடிய தமிழ் இளைஞர் அமைப்பினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு அமைப்புக்களும் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதனை கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளது. இனச்சுத்திகரிப்பில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கனடிய அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்ட மஹிந்த ராஜபக்சவுடன் குறித்த அமைப்புக்கள் தொடர்பு பேணியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தயாகத்தில் வாழும் தமிழர்கள் மற்றும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்த குடும்பம் ஒன்று ஐம்பது மில்லியன் டொலர்களை பரிசாக வென்றுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 15ம் திகதி நடைபெற்ற லொட்டோ மெக்ஸ் லொத்தர் சீட்டிலுப்பில் குறித்த குடும்பத்தினர் பரிசு வென்றுள்ளனர். நேற்றைய தினம் குறித்த குடும்பத்திற்கு பணப்பரிசு வழங்கப்பட்டுள்ளது. நான்சி காவுத்தியர் குடும்பத்தினர் இவ்வாறு பெருந்தொகை ஜாக்பொட் பரிசினை வென்றுள்ளனர். வீடு ஒன்றை கொள்வனவு செய்யத் திட்டமிட்டுள்ளதாக நான்சி குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். கடந்த சில வாரங்களாகRead More →

Reading Time: < 1 minuteகாசாவிலிருக்கும் கனேடியர்களின் உறவினர்களுக்கு கனடா தற்காலிக விசா வழங்க இருப்பதாக, கனேடிய புலம்பெயர்தல் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். காசாவிலிருக்கும் சுமார் 660 கனேடியர்கள், நிரந்தர குடியிருப்பு அனுமதி பெற்றவர்கள் மற்றும் அவர்களுடைய கணவன் அல்லது மனைவி பிள்ளைகளை காசாவிலிருந்து வெளியே கொண்டுவர கனடா இலக்கு வைத்துள்ளதாக கனடா புலம்பெயர்தல் துறை அமைச்சரான மார்க் மில்லர் (Marc Miller) தெரிவித்துள்ளார். கனேடியர்களின் பெற்றோர், தாத்தா பாட்டி, சகோதர சகோதரிகள் மற்றும் பேரன்Read More →

Reading Time: < 1 minuteஹமாஸ் இயக்கம் சரணடைய வேண்டுமென கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். காசாவில் உருவாக்கப்படக்கூடிய எதிர்கால ஆட்சியில் ஹமாஸ் இயக்கம் பங்கேற்கக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார். இரு நாட்டு தீர்வுத் திட்டத்திலும் ஹமாஸ் இயக்கம் பங்கேற்க முடியாது என தெரிவித்துள்ளார். அண்மையில் மனிதாபிமான போர் நிறுத்தத்தை ஆதரித்த போதிலும் அது ஹமாஸ் இயக்கத்திற்கு சார்பான தீர்மானம் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேலை சர்வதேச அரங்கில் தனிமைப்படுத்தும் நோக்கில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் தொழில் வாய்ப்புக்களில் வீழ்ச்சி பதிவாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்தாவது காலாண்டாக நாட்டில் தொழில் வாய்ப்புக்கள் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டின் பின்னர் தொடர்ச்சியாக தொழில் வாய்ப்புக்களின் எண்ணிக்கையில் சரிவு பதிவாகி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அண்மைய ஆண்டுகளாகவே தொழில் வாய்ப்பு வெற்றிடங்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறெனினும் தொழில் பெற்றுக்கொள்வோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. கடந்த இரண்டாம்Read More →

Reading Time: < 1 minuteஹுதி போராளிகளின் தாக்குதல்களை தடுக்கும் நோக்கில் செங்கடலில் அமெரிக்க தலைமையிலான கூட்டுப் பாதுகாப்பு படையில் கனடாவும் இணைந்து கொண்டுள்ளது. செங்கடலில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையணியினால் இந்த பாதுகாப்பு பணி முன்னெடுக்கப்பட உள்ளது. செங்கடலில் பரப்பில் பயணிக்கும் வர்த்தக கப்பல்கள் எதிர்நோக்கும் அச்சுறுத்தல்களை தடுக்கும் நோக்கில் அமெரிக்கா தலைமையிலான நாடுகள் இந்த பாதுகாப்பு படையணியை உருவாக்கியுள்ளன. யேமனில் இயங்கி வரும் ஹுதி போராளிகள் செங்கடலில் பயணிக்கும் வர்த்தக கப்பல் மீதானRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் ரொறன்ரோவில் குரோத உணர்வு சம்பவங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. காசா போர் தொடங்கியது முதல் இதுவரையில் ரொறன்ரோவில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குரோத உணர்வு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஓராண்டு காலப் பகுதியில் குரோத உணர்வு சம்பவங்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டில் இந்தக் காலப் பகுதியில் 48 சம்பவங்களும் பதிவாகியுள்ளதுடன், இந்த ஆண்டு இதே காலப் பகுதியில் 98 சம்பவங்களும் பதிவாகியுள்ளன. ரொறன்ரோவில் இஸ்லாமியர்களுக்கும்,Read More →

Reading Time: < 1 minuteகனடாவுக்கு சமீபத்தில் வந்த இந்திய இளைஞர் ஒருவர், அசாதாரண விபத்தொன்றில் உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் வாழும் மக்களிடையே அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள Kitchener என்னுமிடத்தில் அமைந்துள்ள வீடுகளில், சர்வதேச மாணவர்கள் பலர் தங்கியுள்ளார்கள். அவர்களில் இந்திய மாணவர்களும் அடங்குவர். கடந்த செவ்வாயன்று அதிகாலை 7.35 மணிக்கு அவசர உதவிக்குழுவினர் அந்த பகுதியிலுள்ள வீடு ஒன்றிற்கு அழைக்கப்பட்டுள்ளார்கள். எரிவாயுக் கசிவு என்று நினைத்து அவசர உதவிக்குழுவினர் அங்கு விரைந்தRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் வீடு நிர்மானிப்போருக்கு மகிழ்ச்சியான தகவல் ஒன்றை பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ வெளியிட்டுள்ளார். நாட்டில் நிலவி வரும் வீட்டுப் பிரச்சினைக்கு தீர்வு காணும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார். வருட இறுதியை முன்னிட்டு வழங்கிய நேர்காணல் ஒன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். கனடாவில் வீடு நிர்மானிப்போருக்கு, குறைந்தளவு வட்டியுடனான கடன் வசதிகள் செய்து கொடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். ஜீ7 நாடுகளில் கனடா பொருளாதார ரீதியில் சிறந்தRead More →