Reading Time: < 1 minuteவவுனியாவில் இன்றைய தினம் காணாமல் ஆக்கப்பட்டோரினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது உலகத் தமிழர் பேரவையின் உறுப்பினர்களின் புகைப்படங்களின் மீது முட்டை வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டமானது இன்றுடன் 2500 ஆவது நாளைக் கடந்துள்ளது. இந்நிலையில் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ”உலகத் தமிழர் பேரவையினரின் செயற்பாடு தமிழ் மக்களுக்கு விரோதமானது எனவும், அவர்கள்Read More →

Reading Time: < 1 minuteஅமெரிக்கவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டினால் அது ஆபத்தாக அமையும் என கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். குறிப்பாக காலநிலை மாற்றம் குறித்த முயற்சிகளை ட்றாம்பின் வெற்றி பாதிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்வரும் 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ட்றாம்ப் குடியரசுக் கட்சியின் சார்பில் வேட்பாளராக வெற்றியீட்டினால், அது பாதகமானது என தெரிவித்துள்ளார். காலநிலை மாற்றம் தொடர்பில் உலக அளவில்Read More →

Reading Time: < 1 minuteபண்டிகைக் காலத்தில் கனேடியாகள் தங்களது செலவுகளை குறைத்துக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பணவீக்கம் காரணமாக பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக சில கனேடியர்கள் நத்தார் மற்றும் புத்தாண்டு கால வழயைமான செலவுகளை வரையறுத்துக் கொண்டுள்ளனர். பண்டிகைக் காலத்தில் பரிசுப் பொருட்களை கொள்வனவு செய்வதனையும் கனடியர்கள் ஒப்பீட்டளவில் குறைத்துக் கொண்டுள்ளனர். உறவினர்கள நண்பர்களுக்கு வழங்கப்படும் விருந்துகளும் குறைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆறு பேரைக் கொண்ட குடும்பமொன்றின் மரபு ரீதியானRead More →

Reading Time: < 1 minuteஅண்மையில் திருமண பந்தத்திலிருந்து பிரிந்த மனைவி மற்றும் ஏனைய குடும்ப உறுப்பினர்களுடன் கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ விடுமுறையை கழிப்பதற்காக ஜமெய்க்கா விஜயம் செய்ய உள்ளார். முன்னாள் மனைவி சோபி கிரகரி ட்ரூ மற்றும் பிள்ளைகளுடன் எதிர்வரும் 26ம் திகதி முதல் ஜனவரி மாதம் 4ம் திகதி வரையில் ஜமெய்க்காவில் தங்கியிருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டிலும் பிரதமரும் அவரது குடும்பத்தினரும் ஜமெய்க்காவிற்கு விஜயம் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. விமானப்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தின் மக்கள் ஏனைய மாகாணங்கள் நோக்கி குடிப்பெயர்தல் அதிகரித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலப் பகுதியில் அதிகளவான பிரிட்டிஷ் கொலம்பிய வாழ் மக்கள், ஏனைய மாகாணங்களில் குடியேறியுள்ளனர். கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த விபரங்களை தெரிவித்துள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஐந்து காலாண்டு பகுதியாக இவ்வாறு உள்ளக குடிப்பெயர்வு பதிவாகியுள்ளது. மாகாணத்தை விட்டு வெளியேறி நகர சனத் தொகை எண்ணிக்கை 4634Read More →

Reading Time: < 1 minuteசீனாவை பகைத்துக் கொள்ளும் வகையில் கனடா தாய்வானுடன் வர்த்தக உடன்படிக்கையொன்றை கைச்சாத்திட்டுள்ளது. இந்த உடன்படிக்கை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது எனத் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் தாய்வானை சீனா தனி நாடாக அங்கீகரிக்கவில்லை. இவ்வாறான ஓர் பின்னணியில் தாய்வானுடன் தொடர்புகளை பேணுவது சீனாவுடனான உறவுகளில் விரிசல் நிலை ஏற்படுத்தக் கூடும் என தெரிவிக்கப்படுகின்றது. வர்த்தக விவகாரங்களை மேம்படுத்தும் நோக்கில் தாய்வானுடன் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. சுயாட்சி நடத்தி வரும் தாய்வானுக்கு கனடா போன்றRead More →

Reading Time: < 1 minuteஇலங்கையில் உற்பத்தி செய்யப்படும் மிளகு, ஏலக்காய், கிராம்பு, மஞ்சள் மற்றும் இலவங்கப்பட்டை போன்ற வாசனை திரவியங்களை கொள்வனவு செய்வது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சீன விசேட வர்த்தக பிரதிநிதிகள் குழுவொன்று இந்த நாட்களில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. சீன மசாலா இறக்குமதியாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த 42 நிறுவனங்களின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்கின்றனர். இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் வாசனை திரவியங்கள் தொடர்பில் 50 பேர் அடங்கிய குழுவினர் நேற்று (21) விவசாய மற்றும்Read More →

Reading Time: < 1 minuteஉலகத் தமிழர் பேரவை மற்றும் கனடிய தமிழ் காங்கிரஸ் ஆகியன இணைந்து வெளியிட்டுள்ள ஹிமாலய பிரகடனத்தை நிராகரிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனடிய தமிழ் இளைஞர் அமைப்பினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு அமைப்புக்களும் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதனை கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளது. இனச்சுத்திகரிப்பில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கனடிய அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்ட மஹிந்த ராஜபக்சவுடன் குறித்த அமைப்புக்கள் தொடர்பு பேணியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தயாகத்தில் வாழும் தமிழர்கள் மற்றும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்த குடும்பம் ஒன்று ஐம்பது மில்லியன் டொலர்களை பரிசாக வென்றுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 15ம் திகதி நடைபெற்ற லொட்டோ மெக்ஸ் லொத்தர் சீட்டிலுப்பில் குறித்த குடும்பத்தினர் பரிசு வென்றுள்ளனர். நேற்றைய தினம் குறித்த குடும்பத்திற்கு பணப்பரிசு வழங்கப்பட்டுள்ளது. நான்சி காவுத்தியர் குடும்பத்தினர் இவ்வாறு பெருந்தொகை ஜாக்பொட் பரிசினை வென்றுள்ளனர். வீடு ஒன்றை கொள்வனவு செய்யத் திட்டமிட்டுள்ளதாக நான்சி குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். கடந்த சில வாரங்களாகRead More →

Reading Time: < 1 minuteகாசாவிலிருக்கும் கனேடியர்களின் உறவினர்களுக்கு கனடா தற்காலிக விசா வழங்க இருப்பதாக, கனேடிய புலம்பெயர்தல் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். காசாவிலிருக்கும் சுமார் 660 கனேடியர்கள், நிரந்தர குடியிருப்பு அனுமதி பெற்றவர்கள் மற்றும் அவர்களுடைய கணவன் அல்லது மனைவி பிள்ளைகளை காசாவிலிருந்து வெளியே கொண்டுவர கனடா இலக்கு வைத்துள்ளதாக கனடா புலம்பெயர்தல் துறை அமைச்சரான மார்க் மில்லர் (Marc Miller) தெரிவித்துள்ளார். கனேடியர்களின் பெற்றோர், தாத்தா பாட்டி, சகோதர சகோதரிகள் மற்றும் பேரன்Read More →

Reading Time: < 1 minuteஹமாஸ் இயக்கம் சரணடைய வேண்டுமென கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். காசாவில் உருவாக்கப்படக்கூடிய எதிர்கால ஆட்சியில் ஹமாஸ் இயக்கம் பங்கேற்கக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார். இரு நாட்டு தீர்வுத் திட்டத்திலும் ஹமாஸ் இயக்கம் பங்கேற்க முடியாது என தெரிவித்துள்ளார். அண்மையில் மனிதாபிமான போர் நிறுத்தத்தை ஆதரித்த போதிலும் அது ஹமாஸ் இயக்கத்திற்கு சார்பான தீர்மானம் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேலை சர்வதேச அரங்கில் தனிமைப்படுத்தும் நோக்கில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் தொழில் வாய்ப்புக்களில் வீழ்ச்சி பதிவாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்தாவது காலாண்டாக நாட்டில் தொழில் வாய்ப்புக்கள் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டின் பின்னர் தொடர்ச்சியாக தொழில் வாய்ப்புக்களின் எண்ணிக்கையில் சரிவு பதிவாகி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அண்மைய ஆண்டுகளாகவே தொழில் வாய்ப்பு வெற்றிடங்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறெனினும் தொழில் பெற்றுக்கொள்வோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. கடந்த இரண்டாம்Read More →