Reading Time: < 1 minuteரொறன்ரோ பெரும்பாக பகுதியில் வீட்டு விற்பனையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் வீட்டு விற்பனை 7.1 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது இவ்வாறு வீட்டு விற்பனையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. கடந்த மாதம் 4642 வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் ஆகஸ்ட் மாதத்தை விடவும் வீட்டு விற்பனை 12.1 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. ரொறன்ரோ பிராந்திய வலய ரியல்எஸ்டேட் சபை இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.Read More →

Reading Time: < 1 minuteகனடா, இந்தியா தூதரக உறவில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள், சர்வதேச மாணவர்களுக்கு அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளதை மறுப்பதற்கில்லை. இந்நிலையில், கனடா பல்கலைக்கழகம் ஒன்றின் துணைவேந்தர் ஒருவர், இந்திய மாணவர்கள் உட்பட அனைத்து சர்வதேச மாணவர்களுக்கும் ஆறுதலளிக்கும் செய்தி ஒன்றை தெரிவித்துள்ளார். சீக்கிய பிரிவினைவாத அமைப்பொன்றின் தலைவர் ஒருவர் கனடாவில் கொல்லப்பட்ட நிலையில், அந்த சம்பவத்தின் பின்னணியில் இந்தியா இருக்கலாம் என கனடா பிரதமர் வெளிப்படையாக குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, இரு நாடுகளின்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் பிரம்டனின் ஆறு பாடசாலைகள் மீது அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தப் போவதாக இணைய வழி அச்சுறுத்தல் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பீல் பிராந்திய பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பிரம்டனின், ஆறு பாடசாலைகளை இலக்கு வைத்து சமூக ஊடகங்களின் ஊடாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த அச்சுறுத்தல்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பிரம்டன் பாடசாலைகளுக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தாக்குதல் அச்சுறுத்தல்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் உணவுப் பொருட்களுக்கான விலை அதிகரிப்பு காரணமாக பெரும்பான்மையான மக்கள் போஷாக்கான உணவுகளை கைவிட நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்றின் மூலம் இந்த விடயம் தெரிய வந்துள்ளது. ஹாலிபிக்ஸில் அமைந்துள்ள Dalhousie பல்கலைக்கழகத்தின் உணவு விவசாய ஆய்வு நிறுவனம் இந்த ஆய்வினை முன்னெடுத்துள்ளது. அனேகமான குறிப்பாக அரைவாசிக்கும் மேற்பட்ட கனடியர்கள் போசாக்கான அல்லது ஊட்டச்சத்துடைய உணவு பொருட்களை விடவும் உணவுப் பொருட்களின் விலையின் அடிப்படையில் கொள்வனவு செய்வதில்Read More →

Reading Time: < 1 minuteஇந்தியாவின் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறை துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து நாளை (வெள்ளிக்கிழமை) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. கேரளா மாநிலத்தின் கொச்சி துறைமுகத்தில் இருந்து நாகப்பட்டினம் துறைமுகத்துக்கு நேற்று புறப்பட்ட கப்பல், இன்று நாகப்பட்டினத்தை வந்தடைந்தது. இந்த நிலையில், குறித்த கப்பலானது நாளைய தினம் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து காங்கேசன் துறைக்கான போக்குவரத்தை சோதனை முறையில் ஆரம்பிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், துறைமுகத்திற்கான அனைத்து நிர்மாணப்பணிகளும் நிறைவுப்பெற்று ஜனவரி மாதம்Read More →

Reading Time: < 1 minuteமனிட்டோபாவில் நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலில் என்.டி.பி கட்சி வெற்றியீட்டியுள்ளது. இது ஓர் வரலாற்று வெற்றியாக கருதப்படுகின்றது. தொடர்ச்சியாக இரண்டு தடவைகள் மானிடோபாவில் கான்சர்வேட்டிவ் கட்சி ஆட்சி அமைத்திருந்தது. மனிட்டோபாவில் முதல் தடவையாக பழங்குடி இனத்தவர் ஒருவர் முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். சுகாதார வசதிகளை மேம்படுத்தல் மலிவு விலை வீட்டுத்திட்டம் உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளின் அடிப்படையில் என்டிபி கட்சி பிரச்சாரத்தை முன்னெடுத்து இருந்தது. மனிடோபாவின் மாகாண முதல்வராக வாப் நியூRead More →

Reading Time: < 1 minuteகனடிய நாடாளுமன்றின் சபாநாயகராக முதல் தடவையாக கறுப்பினத்தவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கிரெக் பெர்குஸ் இவ்வாறு சபாநாயகர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். 14 வயது முதலே நாடாளுமன்ற அமர்வுகள் பற்றிய விடயங்களை பின்தொடர்ந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். நாசி போராளி ஒருவரை நாடாளுமன்றிற்கு அழைத்து கௌரவித்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் கனடிய நாடாளுமன்றின் சபாநாயகராக கடமையாற்றிய அன்தனி ரோட்டா பதவி விலகினார். இதனால்Read More →

Reading Time: < 1 minuteதனியார் வாகனங்கள் தவிர்ந்த ஏனைய இறக்குமதிகள் மீதான சகல கட்டுப்பாடுகளையும் அடுத்த வாரம் தளர்த்த எதிர்பார்த்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய நிதி இராஜாங்க அமைச்சர், தேவையான உத்தரவுகள் விரைவில் வெளியிடப்படும் என கூறியுள்ளார். இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் காரணமாக இலங்கை சுங்கத்தின் வருமானம் வெகுவாக குறைந்துள்ளது என்றும் இது சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோரின் வர்த்தகRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் எட்மாண்டன் பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் சர்வதேச ரீதியில் சாதனை படைத்துள்ளார். சர்வதேச விஞ்ஞான போட்டி ஒன்றில் குறித்த மாணவி சாதனையை படைத்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. புற்றுநோயை தொடர்பான சிகிச்சை முறைமை ஒன்றை இந்த மாணவி ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளார். CAR T-cell therapy எனப்படும் புதிய மாற்று சிகிச்சை முறைமை ஒன்று குறித்து இந்த சிறுமி ஆய்வு நடத்தியுள்ளார். Old Scona Academic பாடசாலையின் தரம்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் பார்மஸிகள் (மருந்தகங்கள்) மருந்து வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சில வகை நோய்களுக்கு மருந்தாளர்களிடமிருந்து, மருந்து பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாகாணம் முழுவதிலும் காணப்படும் மருந்தகங்களில் இவ்வாறு மருந்துகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது. ஒன்றாரியோ சுகாதார அமைச்சர்; சில்வியா ஜோன்ஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். மருத்துவமனைகளில் நீண்ட நேரம் காத்திருப்பதனை தவிர்க்கும் நோக்கில் இவ்வாறு மருந்தகங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.Read More →