Reading Time: < 1 minuteகனடாவில் காட்டுத் தீ காரணமாக கண் நோய்கள் ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. பல்வேறு வகையிலான கண் நோய்கள் ஏற்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக காட்டுத் தீ தாக்கம்கனடாவின் ஒன்றாரியோ, கியூபெக், பிரிட்டிஷ் கொலம்பியா போன்ற பகுதிகளில் தொடர்ச்சியாக காட்டுத் தீ தாக்கம் ஏற்பட்டுள்ளது. புறச்சூழலில் நடமாடும் போது கண்களில் எரிச்சல் நிலை ஏற்பட்டால் அது குறித்து அதிக அவதானம் செலுத்தப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. காட்டுத் தீ காரணமாக வளி மாசடைவதாகவும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தைச் சேர்ந்த மக்கள் குளிப்பதற்கு வரையறை விதிக்கப்பட்டுள்ளது அல்லது அதிக அளவு நீரை பயன்படுத்தி குளிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாகாணத்தில் நிலவிவரும் கடுமையான வறட்சி நிலைமையை காரணமாக இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. மாகாண மக்கள் முடிந்த அளவு நீரை சேமிக்குமாறு கோரப்பட்டுள்ளது. நீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள்மாகாணத்தின் 34 நீர் நிலைகளில் அரைவாசிக்கும் மேற்பட்ட நீர் நிலைகளில் வறட்சி நிலமைக்கு நிகரான நீர்மட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.Read More →

Reading Time: < 1 minuteஉக்ரைன் தொடர்பில் அமெரிக்காவின் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என கனடா தெரிவித்துள்ளது. போரில் கொத்தணி குண்டுகள் பயன்படுத்தப்படுவதனை அனுமதிக்க முடியாது என என கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். லாட்வியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர், அந்நாட்டு ஊடகவியலாளர்களிடம் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். கொத்தணி குண்டு பயன்பாட்டை தடை செய்யும் சர்வதேச பிரகடனம் பின்பற்றப்பட வேண்டுமெனவும், அதனை கனடா முழுமையாக மதிப்பதாகத் தெரிவித்துள்ளார். கொத்தணி குண்டுகள் பயன்படுத்தப்படுவதனை எதிர்க்கும் உலகRead More →

Reading Time: < 1 minuteஉயர் கல்வியைத் தொடருவதற்காக கனடா சென்ற இலங்கை இளைஞர் ஒருவர் வாகன விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் 28 வயதான எம்.எச். வினோஜ் யசங்க ஜெயசுந்தர என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார். மதுபோதையில் வாகனமோட்டிய நபர்கடந்த ஜூன் மாதம் 22 ஆம் திகதி மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் இலத்திரனியல் பொறியியலில் பட்டம் பெற்ற வினோஜ் யசங்க , கலாநிதி பட்டம் பெறுவதற்காகச் சென்றபோதே இந்த அனர்த்தத்துக்கு முகங்கொடுத்துள்ளார். கனடாவின் வான்கூவர் நகரில் மதுRead More →

Reading Time: < 1 minuteயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அடுத்த துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருந்த நான்கு பேரில், திறமைப் புள்ளி அடிப்படையில் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, சிரேஷ்ட பேராசிரியர் ரி. வேல்நம்பி, பேராசிரியர் செ. கண்ணதாசன் ஆகியோர் பேரவையினால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். பல்கலைக் கழகங்களில் துணைவேந்தரை நியமிப்பதற்கான சுற்றுநிருபத்துக்கு அமைவாகத் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருந்தவர்களின் தகுதி, தராதரங்களின் அடிப்படையில் திறமைப் புள்ளியிடலுக்காகப் பல்கலைக்கழகப் பேரவை இன்று புதன்கிழமை காலை கூடியது. இதன்போது, துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருந்த தற்போதைய துணைவேந்தர்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தை சேர்ந்த பெண் ஒருவர் நாள்தோறும் பறவை ஒன்றின் படத்தை வரைந்து வருகின்றார். ஒன்றாரியோவின் கிட்ச்னர் பகுதியைச் சேர்ந்த மெர்டிரித் புளுன்ட் என்ற பெண் இவ்வாறு நாள்தோறும் பறவை படங்களை வரைந்து வருகிறார். இந்த ஆண்டு ஆரம்பமானது முதல் இதுவரையில் தொடர்ச்சியாக அவர் இவ்வாறு பறவைகளின் படத்தை வரைந்து வருகின்றார். இந்த ஓவியங்கள் இணையத்தில் பிரபல்யம் பெற்று வருகின்றன. கடந்த ஆண்டில் சுகாதார பிரச்சனைகளை எதிர் நோக்கிRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் டொரன்டோ போலீஸ் தலைமையகத்தில் இயங்கி வந்த மதுபான சாலை மூடப்பட்டுள்ளது. டொரன்டோ போலீஸ் சேவை இந்த மதுபான சாலையை மூடுவதாக அறிவித்துள்ளது. டொரன்டோ போலீஸ் தலைமையகத்தில் அனுமதி பெற்ற மதுபான சாலை இயங்கி வருகின்றது. இந்த மதுபான சாலையின் ஊடாக சிரேஸ்ட போலீஸ் உத்தியோகத்தர்களுக்கு மதுபானம் விற்கப்பட்டது. மது போதையில் வாகனத்தை செலுத்தி விபத்துஅண்மையில் சிரேஸ்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மது போதையில் வாகனத்தை செலுத்தி விபத்துக்குள்ளாகி இருந்தமைRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் பாலியல் தொழில் தொடர்பில் சர்ச்சை நிலை உருவாகியுள்ளது. கனடாவில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண் ஒருவருக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு காரணமாக இந்த சர்ச்சை நிலை உருவாகி உள்ளது. பாலியல் சேவை சட்டவிரோதமானதுகனடாவில் பாலியல் சேவை வழங்குவது சட்டவிரோதமானது என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான ஓர் பின்னணியில பாலியல் சேவை பெற்றுக் கொண்ட வாடிக்கையாளர் ஒருவர் உறுதியளித்த பணத்தொகையை வழங்கவில்லை என பெண் பாலியல் தொழிலாளி ஒருவர் நீதிமன்றில் வழக்குRead More →

Reading Time: < 1 minuteதம்ஸ் அப்’ இமோஜி ஆனது கையெழுத்தாக செல்லுபடியாகும் என கனேடிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதேசமயம் ஒப்பந்த படிவமொன்றுக்கு தம்ஸ்அப் இமோஜியை பதிலாக அனுப்பிவிட்டு, ஒப்பந்த்தை நிறைவேற்றாத நபருக்கு 82,000 கனேடிய டொலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. தானியத்தை வாங்க விளம்பரம்இந்த தீர்ப்பபை கடந்தவாரம் சஸ்கட்சேவன் மாகாணத்தின் உயர் நீதிமன்றம் அளித்துள்ளது. 2021 மார்ச்சில் கென்ட் மிக்கல்பரோ என்பவர், 86 தொன் ஆளிவிதை எனும் தானியத்தை வாங்குவதற்கு விளம்பரம் செய்திருந்தார். இது தொடர்பாகRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் பார்வையற்ற இளைஞர் ஒருவர் 30 கிலோமீட்டர் அகலமான நீரிணை ஒன்றை நீந்திக் கடந்து சாதனை படைக்க உள்ளார். பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தைச் சேர்ந்த ஸ்கொட் ரீஸ் என்ற இளைஞரே இந்த சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். சில மாதங்களாக பயிற்சியில் ஈடுபட்டு அவர் இந்த சாதனையை நிலைநாட்டும் முயற்சியை முன்னெடுத்து வருகின்றார். மிகவும் குளிர்ந்த அலைகளைக் கொண்ட குறித்த நீரிணையில் அவர் நீந்தி கடக்க உள்ளார். பிறக்கும் போது ஏற்பட்டRead More →

Reading Time: < 1 minuteகனடாவிலிருந்து தாய் ஒருவரும் அவரது மூன்று பிள்ளைகளும் நாடுகடத்தப்பட இருந்த நிலையில், நேற்று முன்தினம் அவர்களுக்கு கனடா பெடரல் அரசிடமிருந்து ஒரு செய்தி வந்தது. 2019ஆம் ஆண்டு, Roxham Road வழியாக கனடாவுக்குள் நுழைந்தனர், ஆர்லின் (Arlyn Huilar), டேவிட் (David Ajibade) தம்பதியரும், பிள்ளைகளும். ஆர்லின் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர், டேவிட் நைஜீரியாவைச் சேர்ந்தவர். நைஜீரியாவில் வாழலாம் என்றால், அவர்களுடைய பிள்ளைகளை ஒரு கும்பல் கடத்த முயன்றது, பிலிப்பைன்ஸுக்குச்Read More →

Reading Time: < 1 minute2023 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் சுற்றுலாத்துறை வருமானம் 986.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் காட்டுகின்றன. ஜூன் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை மூலம் இலங்கை 158.4 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டியுள்ளது. அதன்படி, ஜூன் மாதத்தில் இலங்கையின் மதிப்பிடப்பட்ட சுற்றுலா வருமானம் ஆண்டுக்கு ஆண்டு 45.1 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. மே மாதத்தில் சுற்றுலாத்துறையின் வருவாய் 131.5 மில்லியன்Read More →

Reading Time: < 1 minuteடொரன்டோ மிருகக்காட்சி சாலையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் கொரில்லாக்கள் மத்தியில் குழப்பம் விளைவிக்கும் வகையிலான செயற்பாடுகளை தவிர்க்குமாறு விசேட கோரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. டொரன்டோ மிருகக்காட்சிசாலை நிர்வாகம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது. மிருகக்காட்சி சாலைக்கு வருகை தரும் பொதுமக்கள் தங்களது அலைபேசிகளில் காணப்படும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை காண்பிக்க வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காணொளிகள், புகைப்படங்கள் என்பவற்றை பார்வையிடுவதனால் கோரிலாக்களின் மனநிலை பாதிக்கப்படலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வாறு கொரில்லாக்கள் மனநிலைRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் பெருநகர பகுதிகளின் மிகவும் பாதுகாப்பான நகரங்களின் பட்டியல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ரென்டோலா என்ற வாடகை தொடர்பான இணையதளம் ஒன்றினால் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலின் அடிப்படையில் மிகவும் பாதுகாப்பான நகரமாக பேரி (Barrie, Ontario) நகரம் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் இரண்டாவது பாதுகாப்பான நகரமாக பிராண்ட் போர்ட் (Brantford, Ontario) நகரம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. நகரின் பிரஜைகள் எண்ணிக்கைகளுக்கும் போலீஸ் உத்தியோகத்தகர்களுக்கும் இடையிலான விகிதம், வன்முறை சம்பவங்களின் எண்ணிக்கை,Read More →

Reading Time: < 1 minuteஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. குறித்த சந்திப்பு எதிர்வரும் 21 ஆம் திகதி புது டெல்லியில் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 20ஆம் திகதி வியாழக்கிழமை மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியாவிற்கு பயணிக்கவுள்ளார். இதன்போது இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்,Read More →

Reading Time: < 1 minuteகனடா – ஒன்றாரியோ, கஷேசெவான் பகுதியில் அல்பானி ஆற்றில் இடம்பெற்ற படகு விபத்தில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட இளைஞர் ஒருவர் உயரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மூன்றாம் திகதி இடம்பெற்ற இந்த விபத்தில் அவசர மருத்துவ உதவியாளராக பணியான்றி வந்த யாழை சேர்ந்த இளைஞரே உயிரிழந்துள்ளார். தீவிர தேடுதல் பணிபுதன் கிழமை மாலை 5 மணியளவில் காணாமல் போன இளைஞரின் உடல் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இளைஞர் காணாமல்போனவுடன் 20Read More →

Reading Time: < 1 minuteவெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து வெளிநாடு சென்றவர்களின் எண்ணிக்கை இவ்வருடம் 150,000ஐத் தாண்டியுள்ளது. கடந்த வருடம் சுமார் 311,000 இலங்கையர்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்காக சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. முக்கியமாக கட்டார், குவைத், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளுக்குச் சென்றுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மேலும் சுமார் 300,000 இலங்கையர்கள் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பைப் பெறுவார்கள் என்று எதிர்பாக்கப்படுவதாக வெளிநாட்டுRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் தம்ஸ்அப் இமோஜி ஒன்றினால் விவசாய நிறுவனமொன்று 82,000 டாலர்களை இலக்க நேரிட்டுள்ளது. கனடாவின் சஸ்கட்ச்வான் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. விவசாய நிறுவனமொன்றுக்கு நீதிமன்றம் இவ்வாறு 82000 டாலர்களை செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளது. புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று தொடர்பில் குறித்த விவசாய நிறுவனம், இமோஜி ஒன்றை பதிலாக அனுப்பியுள்ளது. தனக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு பதிலளிக்கும் வகையில் குறித்த விவசாய நிறுவனம் இமோஜியை அனுப்பி உள்ளது. இதன் மூலம் உடன்படிக்கையை வாசித்துRead More →