Reading Time: 2 minutesகனடாவின் அமைதியான பயணத்தில், ஒரு குழப்பமான கதை வெளிப்படுகிறது. வன்முறையைத் தூண்டும் உள்ளடக்கத்துடன் சாலையோரப் பலகைகள் மற்றும் சுவரொட்டிகள் எழுந்துள்ளன.இது நாட்டின் பல்வேறு சமூகங்களின் அமைதியான சகவாழ்வைக் குழப்புகிறது. இந்த அறிகுறிகள்; ஒரு இடத்தை ‘போர் மண்டலம்’ என்று பிரகடனப்படுத்துமளவிற்கு உள்ளது. இந்த தூண்டுதலின் சின்னங்கள், மொல்டன் குர்தாவாராவிற்கு வடக்கே ஒரு கிலோமீட்டர் தொலைவில், காணப்படுவதோடு மொல்டன் அல்லது ஒட்டுமொத்த கனடா கூட போர் மண்டலமா? என்ற கேள்வியை ஏற்படுத்துகின்றன.Read More →

Reading Time: < 1 minuteநல்லூர் உற்சவத்தையொட்டி தினசரி புகையிரதச் சேவைகளை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 21 ஆம்திகதி நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெருந்திருவிழா ஆரம்பமாகவுள்ளதால், பக்தர்களின் நலன் கருதி தினசரி புகையிரத சேவைகளை அதிகரிக்குமாறு நல்லை திருஞான சம்பந்தர் ஆதீனத்தின் பொது முகாமையாளர் புகையிரத திணைக்களத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார். ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteஸ்காப்ரோ ரூஜ் பார்க் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் கெரி ஆனந்தசங்கரி, கனடாவின் அமைச்சரவையில் முடியரசு – பழங்குடியினர் உறவுகள் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழர் ஒருவர் கனடிய அமைச்சரவை அமைச்சராக முதல் தடவையாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆளும் லிபர கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களில் ஒருவராக ஆனந்தசங்கரி கடமையாற்றி வருகின்றார். கனடாவின் அரசு பழங்குடியின உறவுகளுக்கான அமைச்சராக கெரி ஆனந்தசங்கரி நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்காப்ரோ ரூஜ் பார்க் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக கடமையாற்றி வரும் கெரிRead More →

Reading Time: < 1 minuteகனடா உள்ளிட்ட சில நாடுகளில் ஆபத்தான பால்வினை நோய்களில் ஒன்றான குளோரியா தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. உலக சுகாதார ஸ்தாபனத்தினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்பொழுது காணப்படும் பால்வினை நோய் சிகிச்சை முறைமைகளுக்கு கட்டுப்படாத புதிய வகை நோய் தொற்று ஒன்று பரவி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனம் நேற்றைய தினம் இது தொடர்பில் அறிக்கை அன்றை வெளியிட்டுள்ளது. கோவிட் 19 நோய் தொற்று காரணமாக அநேகமானRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கல்கரியைச் சேர்ந்த 32 வயதான நபர் ஒருவர் தனது தாயை படுகொலை செய்துள்ளதாக போலீசார் குற்றம் சுமத்தியுள்ளனர். மேலும் இந்த நபர் மற்றுமொரு பெண்ணையும் படுகொலை செய்ய முயற்சித்துள்ளதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை downtown பிரதேசத்தில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் இந்த படுகொலை சம்பவம் இடம் பெற்றுள்ளது. சுமார் 60 வயது மதிக்கத்தக்க இரண்டு பெண்கள் தாக்குதலுக்கு இலக்கானதாக போலீசாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றது. இந்தRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட 2 சிறுவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் வெள்லைத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3ஆக அதிகரித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த சனிக்கிழமை நோவா ஸ்கோஷியாவில் (Nova Scotia) உள்ள தங்களது வீட்டை விட்டு வெளியேற சிறுவர்கள் முயன்றபோது அவர்களை ஏற்றியிருந்த வாகனம் வெள்ள நீரில் அடித்துச்செல்லப்பட்டது. அதில் இருவர் உயிரிழந்த நிலையில் காரில் இருந்த மேலும் 3 பேர் உயிர்தப்பினர். அதே போன்ற சூழ்நிலையில்Read More →

Reading Time: < 1 minuteஇந்தியாவில் உள்நாட்டில் அரிசி விலையை கட்டுக்குள் வைக்கும் விதமாக பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு இந்திய மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ள நிலையில் கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வாடிக்கையாளர் ஒருவருக்கு இத்தனை கிலோ அரிசிதான் விற்கப்படும் என்ற கட்டுப்பாட்டு விதிக்கப்பட்டுள்ளது. உலகில் அரிசி ஏற்றுமதியில் முக்கிய நாடாக இந்தியா உள்ள நிலையில், இந்த தடை சர்வதேச அளவில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆசிய , ஆபிரிக்க கோடிக்கணக்கானRead More →

Reading Time: < 1 minuteகடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையிலான ஐந்தாண்டு காலப்பகுதியில் கனடிய மக்கள் மோசடிகள் காரணமாக 16 பில்லியன் டாலர்களை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடிய புள்ளி விபரவியல் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. கனடாவில் மோசடி சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அநேக கனடியர்கள் நம்புகின்றனர். ஆறு பேரில் ஒருவர் ஏதாவது ஒரு வகை நிதி மோசடியில் பணத்தை இழந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆயிரம் டாலர்கள் முதல் பத்தாயிரம்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் மசூதி ஒன்றின் பக்தர்கள் மீது தாக்குதல் நடத்திய நபருக்கு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. மிஸ்ஸிசாகாவின் பள்ளிவாசல் ஒன்றில் வழிபாட்டில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்திய நபருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நபருக்கு எதிராக மூன்று தீவிரவாத குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. முஹம்மத் மாயிஸ் ஒமர் என்ற நபருக்கு ஓன்றாரியோ உச்சநீதிமன்றம் இந்த தண்டனையை விதித்துள்ளது. தாக்குதல் சம்பவம் ஒன்றுக்கு வழமையாக வழங்கப்படும் தண்டனையை விடவும் அதிகRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் நாய் கடிக்கு இலக்காகி ஒருவர் பேர் படுகாயம் அடைந்துள்ளார். கனடாவின் ஒஷாவா பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஒன்றாரியோ மாகாணத்தின் ஒஷாவா பகுதியில் நாய் ஒன்று மேற்கொண்ட தாக்குதலில் மூன்று பேர் காயம் அடைந்துள்ளனர். சம்பவத்தில் காயம் அடைந்த நபர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தர்ஹம் பிராந்திய போலீசார் தெரிவிக்கின்றனர். ஒஷாவாவின் அடிலைட் மற்றும் மேரி வீதிகளுக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த தாக்குதலில் ஒருவர்Read More →