Reading Time: < 1 minuteநரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அனைத்து குடிமக்களுக்கும், தொலைதூரப் பகுதிகளுக்கும் இணையத்தைப் பாதுகாப்பானதாகவும் அணுகக்கூடியதாகவும் மாற்றுவதற்கான உந்துதலை முன்னெடுத்துள்ளது. இதற்காக அருணாச்சலப் பிரதேசத்தில் 4ஜி வலையமைப்பை செயற்படுத்தும் 254 கோபுரங்களை மத்திய தகவல், தொழில்நுட்பம், மற்றும் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஆரம்பித்து வைத்துள்ளார். இந்த நிகழ்வில், கிரண் ரிஜிஜு மற்றும் முதல்வர் பெமா காண்டு ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்த நடவடிக்கையானது கிராமங்களைச் சுற்றியுள்ள குறைந்ததுRead More →

Reading Time: < 1 minuteஉணவு, எரிபொருள் மற்றும் மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறை போராட்டங்களுக்கு வழிவகுத்த நிலையில் கடன் திருப்பி செலுத்தலை நிறுத்தியுள்ள இலங்கை தற்போது பொருளாதார மீட்சிக்கான திட்டத்தை வகுத்து வருகின்றது. இந்நிலையில் கொழும்பு துறைமுகத்தில் ஒரு பெரிய தளவாட வளாகத்தில், 392 மில்லியன் டொலர்கள் மதிப்பீட்டைக் கொண்ட சீனா வணிக குழுவின் முதலீடொன்று முன்னெடுக்கப்படுகின்றது.இது தற்போது இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட முதல் பாரிய வெளிநாட்டு முதலீடாகும். தளவாட மையத்திட்டம் இலங்கையின் வருமாதத்திட்டம்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் கியூபெக் மாகாண அரசியல்வாதிகள் தங்களது சம்பளத்தை உயர்த்திக்கொள்ளும் யோசனை ஒன்றை முன்மொழிந்துள்ளனர். 30000 டொலர்களினால் உயர்த்தும் யோசனை மாகாண ஆளும் கட்சி சம்பளத்தை 30000 டொலர்களினால் உயர்த்தும் யோசனை ஒன்றை முன்மொழிந்துள்ளது. இந்த யோசனைக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு எதனையும் வெளியிடவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. பில்24 என்ற சட்டமூலத்தின் ஊடாக கியூபெக் மாகாண சட்ட மன்ற உறுப்பினர்களது சம்பளத்தை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. தற்பொழுது வழங்கப்படும் 101000 டொலர் சம்பளம் 131000Read More →

Reading Time: < 1 minuteஒன்றாரியோ மாகாணத்தில் மென்பானக் கட்டணங்கள் உயர்வடையும் சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குளிர்பான வகைகளின் விலைகள் சிறிதளவில் உயர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குளிர்பான வகைகளின் கொள்கலன்களை மீள்சுழற்சி செய்வதற்காக கட்டணம் அறவீடு செய்யப்பட உள்ளது. எதிர்வரும் ஜூன் மாதம் 1ம் திகதி தொடக்கம் மென்பான உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து, கனடிய மென்பான கொள்கலன் மீள்சுழற்சி நிறுவனம் கட்டணம் அறவீடு செய்ய உள்ளது. இந்தக் கட்டண அறவீட்டுத் தொகையை உற்பத்தி நிறுவனங்கள் நுகர்வோரிடம் அறவீடுRead More →

Reading Time: < 1 minuteமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முதலாம் நாள் நினைவஞ்சலி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமானது. இந்நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முதலாம் நாள் நினைவஞ்சலி யாழ். பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அருகே இடம்பெற்றது. ஒரு நிமிட அக வணக்கத்துடன் ஆரம்பமாகிய நினைவேந்தலின்போது, பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களால் மலரஞ்சலி செலுத்தப்பட்டு, ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது.Read More →

Reading Time: < 1 minuteரொறன்ரோவின் பியர்சன் விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானமொன்று தீப்பற்றிக் கொண்டது. வெஸ்ட் ஜெட் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானமொன்றின் எஞ்சினில் தீப்பற்றிக் கொண்டது. எட்மோன்டனிலிருந்து ரொறன்ரோ திரும்பிய விமானமே இவ்வாறு தீப்பற்றிக் கொண்டது. விமானப் பணியாளர்கள் விரைந்து செயற்பட்டு தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதனால் எவருக்கும் கயங்கள் ஏற்படவில்லை என பியர்சன் விமான நிலைய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானத்தில் இருந்த பயணிகள் பாதுகாப்பாக விமானத்திலிருந்து இறக்கிவிடப்படடதாகRead More →

Reading Time: < 1 minuteகனேடிய மக்கள் தங்கள் கடவுச்சீட்டுகளை புதுப்பிக்க இனி வரிசையில் காத்திருக்கும் நிலை இருக்காது என தொடர்புடைய அமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் இருந்து கனேடிய மக்கள் இணைய மூடாக தங்கள் கடவுச்சீட்டுகளை புதுப்பித்துக் கொள்ளலாம். புகைப்படம் உள்ளிட்ட உரிய ஆவணங்களை பாதுகாப்பான அரசாங்க இணைய பக்கமூடாக தரவேற்றம் செய்து கொள்ளலாம் எனவும் குடிவரவு அமைச்சர் சீன் பிரேசர் தெரிவித்தார். புதுப்பிக்கப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள்Read More →

Reading Time: < 1 minuteமூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழா நிகழ்வினை 7.6 மில்லியன் கனடியர்கள் பார்வையிட்டுள்ளனர். முழு நிகழ்ச்சியை அல்லது நிகழ்ச்சியின் ஓரு பகுதியினை கனடியர்கள் இவ்வாறு நேரலையாக பார்வையிட்டுள்ளனர். கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற இளவரசர் ஹரி மற்றும் மெகனின் திருமண நிகழ்வினை 12 மில்லியன் பேர் பார்வையிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, பிரித்தானியாவில் முடிசூட்டு நிகழ்வினை 20 மில்லியன் பேர் பார்வையிட்டுள்ளனர். முடிசூட்டு விழா நிகழ்வில் கனடியRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் டர்ஹாம் பகுதியில் திடீரென்று தற்கொலை செய்துகொண்டவர்கள் தொடர்பில் பொலிசார் முக்கிய முடிவுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்கொலை தொடர்பிலான எண்ணத்தில் இருக்கும் நபர்களை இலக்கு வைத்து மிசிசாகா பகுதியை சேர்ந்த கென்னத் லா என்பவர் சோடியம் நைட்ரைட் ரசாயனத்தை விற்பனை செய்துள்ளதை தற்போது டர்ஹாம் பொலிசார் உறுதி செய்துள்ளனர். இந்த நிலையில் 2022ல் திடீரென்று தற்கொலை செய்துகொண்டவர்கள், சோடியம் நைட்ரைட் வழக்கில் தொடர்புடையவர்கள் என கருதி, வழக்கை விசாரிக்கRead More →

Reading Time: < 1 minuteஒட்டாவா நகருக்கு கிழக்கே குடியிருப்பு ஒன்றில் இருந்து முன்னெடுக்கப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒன்ராறியோ பிராந்திய பொலிசார் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. குறித்த சம்பவத்தில் மேலும் இரு பொலிசார் காயங்களுடன் தப்பியதாகவும் கூறப்படுகிறது. புதன்கிழமை நள்ளிரவு சுமார் 2 மணியளவில் போர்கெட் கிராமத்திலேயே தொடர்புடைய துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் ஒன்ராறியோ பிராந்திய பொலிசார் தெரிவிக்கையில், லாவல் தெருவில் உள்ள ஒரு வீட்டில்,Read More →