Reading Time: < 1 minuteகனடாவின் நியூபிரவுன்ஸ்விக் பகுதியைச் சேர்ந்த மக்களை ஒரு வகை மர்ம நோய் தாக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தாம் மர்மமான மூளை சார் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக நோயாளிகள் தெரிவிக்கின்றனர். எனினும், இவ்வாறான ஓர் மர்ம மூளை நோய் எதுவும் கிடையாது மாகாண அரசாங்கம் தெரிவித்துள்ளது. புதிதாக எவ்வித நரம்பியல் நோய்களும் ஏற்படவில்லை என குறிப்பிட்டுள்ளது. நோய் பாதிப்புக்கு உட்பட்டவர்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள் என தெரிவித்துள்ளது. எனினும், வித்தியாசமானRead More →

Reading Time: < 1 minuteமின்சாரப் பாவனை சுமார் 20 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மின்சாரக் கட்டண உயர்வை அடுத்தே மின்சாரப் பாவனை சுமார் 20 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் செயற்பாடுகள் தொடர்பில் சர்வதேச மன்னிப்புச் சபை கடுமையான கண்டனம் வெளியிட்டுள்ளது. பழங்குடியின மக்களின் உரிமைகளை அரசாங்கம் உதாசீனம் செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சர்வதேச ரீதியில் மனித உரிமை நிலைமைகள் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கனடாவிற்கு கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது. பழங்குடியின மக்களுக்கு எதிராக அரசாங்கம் பல வழிகளில் ஒடுக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளது. பழங்குடியின மக்களின் காணிகளையும், வளங்களையும் அபகரிப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது. சமத்துவமின்மை மற்றும் ஒடுக்குமுறை என பலRead More →

Reading Time: < 1 minuteசந்தேக நபர் ஒருவரை கைது செய்யச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். கியூபெக் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பொலிஸ் சேவையில் இருபது ஆண்டுகள் அனுபவம் உடைய பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். பொலிஸ் உத்தியோகத்தரை கத்தியால் குத்தி கொன்ற சந்தேக நபரை, சகல பொலிஸ் உத்தியோகத்தர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி கொன்றுள்ளனர். மொன்றியலில் இருந்து 100 கிலோ மீற்றர் தொலைவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 35Read More →

Reading Time: < 1 minuteஇலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று (28) பிற்பகல் முதல் நாட்டின் பல பகுதிகளில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்பட்டுள்ளன. இதேவேளை, கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் நீண்ட வரிசைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எரிபொருள் கையிருப்பு தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் முடிவுக்கு வராவிட்டால், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சிக்கல் ஏற்படலாம் என இரவோடு இரவாக, பல எரிபொருள்Read More →

Reading Time: 2 minutesதங்களின் தங்கை மீது இருந்த அதீத பாசத்தின் காரணமாக அவரது சகோதரர்கள் செய்த விஷயம் ஒன்று, பெரிய அளவில் இணையத்தில் வைரலாகி வருகிறது. ராஜஸ்தான் மாநிலம், நாகூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கிங் சாரா என்ற கிராமத்தை சேர்ந்தவர்கள் அர்ஜுன், பகீரத் மெஹாரியா என மொத்தம் 4 சகோதரர்கள் உள்ளனர். இவர்கள் அனைவருமே விவசாய தொழில் செய்து வருகின்றனர். இவர்களுக்கு தங்களின் தங்கை என்றால் அளவு கடந்த பாசம் என தெரிகிறது.Read More →

Reading Time: < 1 minuteகனடா அமெரிக்க எல்லை பரபரப்படைந்துள்ள நிலையில், எல்லை கடக்க புலம்பெயர்வோர் பலர் பயன்படுத்தும் Roxham Road என்ற இடம் மூடப்பட்டது தெரியாமலே இன்னமும் பணம் செலவு செய்து அப்பகுதிக்கு வருகிறார்கள் புலம்பெயர்வோர். கனடா அமெரிக்க எல்லையில், கியூபெக்கிலுள்ள Hemmingford என்ற இடத்தில் வாழ்ந்துவருகிறார் ஈவ்லின் (Evelyne Bouchard). அவர் வாழும் பகுதிக்கு அருகில்தான் Roxham Road அமைந்துள்ளது. திடீரென அப்பகுதிக்கு கனேடிய பொலிசார் வருவதைக் கவனிக்கிறார் ஈவ்லின். சிறிதுநேரத்தில், எல்லைRead More →

Reading Time: < 1 minuteகனேடிய டொலர் நாணயத்தாளில் பழங்குடியின பெண்களின் உருவப்படத்தை பொறிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடாவின் பூர்வகுடிகளான பழங்குடியின பெண்களை கௌரவிக்கும் வகையில் நாணயத் தாள்களில் அவர்களின் உருவப்படம் பொறிக்கப்பட வேண்டுமென கோரப்பட்டுள்ளது. கனேடிய பூர்வீக மகளிர் அமைப்பினால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 20 டொலர் நாணயத்தாளில் பழங்குடியின பெண்களின் உருவங்கள் பொறிக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தங்களது கோரிக்கைக்கு கனேடிய மத்திய வங்கி நல்லதொரு பதிலை அளிக்கும் எனRead More →