Reading Time: < 1 minuteகனடாவில் வங்கிக் கொள்கைகளில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் மடக்கிப்பிடித்துள்ளனர். கடந்த மூன்று மாதங்களில் றொரன்டோவை அண்டிய பகுதிகளில் இடம்பெற்ற வங்கிக் கொள்ளைகளுடன் குறித்த நபருக்கு தொடர்பு உண்டு என தெரிவிக்கப்படுகின்றது. கடந்த நவம்பர் மாதம் 4ம் திகதி தொடக்கம் பெப்ரவரி மாதம் 2ம் திகதி வரையிலான காலப் பகுதியில் மொத்தமாக 9 வங்கிக் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. முகமுடி அணிந்து வங்கிகளுக்குள் பிரவேசித்து இவ்வாறு குறித்த நபர் கொள்ளையிட்டுள்ளதாகத்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ரொறன்ரோவைச் சேர்ந்த குடும்பம் ஒன்று 250,000 டொலர் சன்மானம் வழங்குவதாக அறிவித்துள்ளது. ரொறன்ரோவை மையமாகக் கொண்ட Vleepo என்ற நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி மொத்திவ் ஸ்டாய்கோஸ் என்பவரின் மரணம் தொடர்பில் தகவல் வழங்குவோருக்கு இந்த சன்மானத் தொகை வழங்கப்பட உள்ளது. ஸ்டாய்கோஸ் கொல்லப்பட்டு ஐந்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் அவரது குடும்பத்தினர் இந்த சன்மான அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர். ஸ்டாய்கோஸின் மரணம் பெரும் வேதனையை அளிப்பதாகவும் தொடர்ந்தும்Read More →

Reading Time: < 1 minuteகடந்த 2007ம் ஆண்டு வெளியான நான் அவனில்லை தமிழ்த் திரைப்பட பாணியில் கனடாவில் நூறு பெண்களை காதல் வலையில் சிக்க வைத்த நபர் ஒருவர் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் பல பெண்களை காதல் வலையில் சிக்க வைத்து ஏமாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இணைய வழியில் தொடர்பு கொண்டு இவ்வாறு பெண்களை ஏமாற்றி அவர்களிடமிருந்து பணம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் பிரம்டன் பகுதியில் முதியவர்களிடம் நூதன வழியில் சுமார் 200,000 டொலர் மோசடி செய்த நபருக்கு எதிராக பொலிஸார் வழக்குத் தொடர்ந்துள்ளனர். வயது முதிர்ந்த நபர்களை ஏமாற்றி இவ்வாறு பணம் மோசடி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. லொத்தர் சீட்டில் பரிசு வென்றெடுக்கப்பட்டுள்ளதாக கூறி நூதனமான முறையில் முதியவர்கள் ஏமாற்றப்பட்டு அவர்களிடமிருந்து பணம் பறிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் மேற்கொண்ட நீண்ட விசாரணைகளின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. மில்லியன் கணக்கான பணமும் வாகனங்களும் வழங்குவதாகRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாண அமைச்சர் செலினா ரொபின்சன் மீண்டும் புற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். மாகாணத்தின் உயர்கல்வி அமைச்சராக செலினா கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே புற்று நோயினால் பாதிக்கப்பட்டு குணமடைந்த நிலையில் மீண்டும் புற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். குணமடைந்து விடலாம் என்ற நம்பிக்கை தமக்கு உண்டு என அவர் தெரிவித்துள்ளார். எனினும் புற்று நோயினால் மீண்டும் பாதிக்கப்பட்டிருப்பதனை தனது தந்தை மற்றும் தமது பிள்ளைகளுக்கு கூறுவது கடினமானதுRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் றொரன்டோவில் ஸ்கேட்டிங் விளையாட்டில் ஈடுபட்டிருந்த மூவர் பனிப்பாறை உடைந்து நீரில் தவறி வீழ்ந்துள்ளனர். ஹான்லான்ஸ் தீவுகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள பிளக்அவுஸ்பே பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பனிப்பாறையில் ஸ்கேட்டிங் விளையாட்டில் ஈடுபட்டிருந்த இரண்டு பேர் இவ்வாறு பனிப்பாறை உடைந்து, அந்த பனிப்பாறையுடன் தவறி பனி நீரில் வீழ்ந்துள்ளனர். இவ்வாறு கடுமையான குளிரான நீரில் வீழ்ந்தவர்கள் சுமார் பதினைந்து நிமிடங்களில் சிறிய பனிப்பாறையின் மேலு; தத்தளித்துள்ளனர். உயிர் காப்பு படையினர்,Read More →

Reading Time: < 1 minuteதிரைப்படங்களில் கொள்ளையர்கள் நிலக்கீழ் சுரங்கம் தோண்டி கொள்ளையிடுவதனை நாம் பார்த்திருக்கின்றோம், அதே பாணியில் கனடாவில் பிரபல ஹோட்டல் ஒன்றில் சுவரில் பாரிய துளையிட்டு திருடப்பட்டுள்ளது. ஒட்டாவா நகரின் டவுன்கேட் சொப்பிங் பிளாஸாவில் அமைந்துள்ள Moe’s BBQ என்ற பிரபல ஹோட்டலில் இவ்வாறு துளையிட்டு கொள்ளையிடப்பட்டுள்ளது. இந்த ஹோட்டலுக்கு அடுத்தபடியாக காணப்படும் தங்க நகையகம் ஒன்றில் கொள்ளையிடும் நோக்கில் இவ்வாறு துளையிடப்பட்டுள்ளது. பாரியளவில் சுவரில் துளையிடப்பட்டதனால் குழாய்கள் உடைந்து நீர் வெளியேறிக்Read More →

Reading Time: < 1 minuteகடனாவில் அடைக்கலம் கோரும் ஏதிலிகளுக்கு இலவச பஸ் டிக்கட்டுகளை அமெரிக்காவின் நியூயோர்க் நகரம் வழங்குவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கியூபெக் மாகாண குடிவரவு அமைச்சர் கிறிஸ்டின் பெரிச்டி இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். நியூயோர்க் நகரிற்கு வரும் ஏதிலிகளை இலவச பஸ் டிக்கட் வழங்கி வேறும் இடங்களில் ஏதிலி கோரிக்கை பெற்றுச் செல்ல உதவுவதாக நகர மேயர் எரிக் எடம்ஸ் தெரிவித்துள்ளார். கனேடிய எல்லைப் பகுதி வரையில் பயணம் செய்வதற்கு இவ்வாறு இலவசRead More →