Reading Time: < 1 minuteநயகரா நீர் வீழ்ச்சிக்கு அருகாமையில் அமைந்துள்ள பள்ளத்தாக்கு ஒன்றில் தாய் ஒருவரும், அவரது ஐந்து வயது மகனும் வீழ்ந்துள்ளனர். இந்த சம்பவத்தில் குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பள்ளதாக்கில் வீழ்ந்த சம்பவத்தை ஓர் விபத்தாக கருதிவிட முடியாது என பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர். தாயும் மகனும் பாதுகாப்பு வேலியில் ஏறி பள்ளதாக்கில் வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு பலர் தகவல் வழங்கியுள்ளனர். பள்ளத்தாக்கில் வீழ்ந்த பெண்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் வீட்டு விற்பனை தொடர்பிலான மோசடிகள் குறித்து மீண்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மோசடிகாரர்கள் வீட்டு உரிமையாளர்கள் போன்று மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒன்றாரியோ ரியல் எஸ்டேட் பேரவையினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வீடுகளை விற்பனை செய்வதாக வீட்டு உரிமையாளர்கள் போன்று தோன்றி மோசடிகாரர்கள் மோசடிகளில் ஈடுபடுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான மோசடிச் சம்பவங்கள் தொடர்பிலான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வீடு விற்பனையாளர்களின் ஆள் அடையாளம் சரியானRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் பாடசாலைக்கு எதிரில் மாணவன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. தரம் 10ல் கல்வி கற்ற மாணவன் ஒருவனே நேற்று (Feb 16, 2023) இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளான். றொரன்டோவின் வெஸ்டன் பகுதியில் பகல் போசன விடுமுறையின் போது இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. மாணவன் பாடசாலையை விட்டு வெளிய வந்ததாகவும், வாகனத்தில் வந்த கும்பல் ஒன்று மாணவனின் நெஞ்சுப் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும்Read More →

Reading Time: < 1 minuteறொரன்டோ நகர மேயர் ஜோன் டோரி நாளைய தினம் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டோரி நேற்றைய தினம் மாலை நகர அலுவலரிடம் (City Clerk) தனது பதவி விலகல் கடிதத்தை ஒப்படைத்தார். எதிர்வரும் 17ம் திகதி அதாவது வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணியுடன் தாம் பதவியை துறப்பதாக டோரி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2014ம் ஆண்டு முதல் தம்மை மேயராக ஏற்றுக் கொண்டு மக்கள்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் குடியுரிமை பெற்றுக் கொள்வோர் எண்ணிககையில் ஏற்பட்டுள்ள மாற்றம் தொடர்பிலான விபரங்களை கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. கடந்த இரண்டு தசாப்த காலத்தில் குடியுரிமை பெற்றுக் கொள்ளும் கனேடிய நிரந்தர வதிவிட உரிமையாளர் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. கடந்த 2001ம் ஆண்டு முதல் இதுவரையிலான காலப் பகுதியில் நிரந்தர வதிவிட உரிமை உடையவர்களில் குடியுரிமை பெற்றுக்கொள்வோர் எண்ணிக்கை 40 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது. இவ்வாறு குடியுரிமை பெற்றுக் கொள்வதில் நாட்டம் காட்டமைக்கானRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் வீட்டு விற்பனையில் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கனேடிய ரியல் எஸ்டேட் ஒன்றியம் தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த 2009ம் ஆண்டின் பின்னர் இந்த ஜனவரி மாதம் வீட்டு விற்பனை 37.1 வீதமாக குறைவடைந்துள்ளது. வீடுகளின் விலைகளும் வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஜனவரி மாதம் கனடாவில் 20931 வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன, இது டிசம்பர் மாத வீட்டு விற்பனையை விடவும் 3 வீதம் குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டின்Read More →

Reading Time: < 1 minute14 வயதான சிறுவன் ஒருவனினால் விடுக்கப்பட்ட தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக கனடாவில் இரண்டு பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. கனடாவின் ஸ்காப்ரோ பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (Feb 14, 2023) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 14 வயதான சிறுவன் ஒருவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். பாடசாலைகள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக குறித்த சிறுவன் எச்சரிக்கை விடுத்துள்ளான். ஸ்காப்ரோவின் எல்ஸ்மேர் மற்றும் மார்க்கம் வீதிகளுக்கு அருகாமையில் துப்பாக்கியுடன்Read More →

Reading Time: < 1 minuteகனேடிய பிரஜை ஒருவருக்கு அமெரிக்க நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. அமெரிக்காவிலிருந்து ஆசியாவிற்கு பாம்பு உள்ளிட்ட ஊர்வன வகைகளை கடத்தியதாக இந்த கனேடியர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டை நிரூபிக்கப்பட்டதனைத் தொடர்ந்து குறித்த நபருக்கு 14 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நீதி ராஜாங்கத் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. மலைப்பாம்பு, அமெரிக்க பல்லி உள்ளிட்ட சில வகை ஊர்னவற்றை இவ்வாறு கடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த கனேடியரும் மேலும் இரண்டுRead More →