Reading Time: < 1 minuteகனடாவின் ஸ்காப்ரோவில் ரயில் பாதையொன்றில் சிக்கிய கார் ஒன்றில் பயணம் செய்த நான்கு பேரை மீட்ட ரீ.ரீ.சீ பணியாளர் ஒருவருக்கு பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர். ரயில் காரில் மோதுவதற்கு முன்னதாக, விரைந்து செயற்பட்டு காரில் சிக்கியிருந்த நான்கு பேரையும் பாதுகாப்பாக குறித்த பணியாளர் மீட்டுள்ளார். ஸ்காப்ரோவின் பின்ச் அவன்யூ மற்றும் கென்னடி வீதி என்பனவற்றுக்கு அருகாமையில் இருந்த ரயில் கடவையில் பயணித்த போது திடீரென வாகனம் இயங்கவில்லை எனRead More →

Reading Time: < 1 minuteகனேடிய இளம்பெண் ஒருவர் முதன்முறை வாங்கிய லொட்டரிச் சீட்டிலேயே அவருக்கு 48 மில்லியன் டொலர்கள் பரிசு கிடைத்துள்ளது. ஒன்ராறியோவில் வாழும் ஜூலியட்டை (Juliette Lamour, 18) லொட்டரிச்சீட்டு ஒன்றை வாங்கும்படி ஆலோசனை கூறியுள்ளார் அவரது தந்தை. அதன்படி ஜூலியட் வாங்கிய முதல் லொட்டரிச் சீட்டிலேயே அவருக்கு 48 மில்லியன் டொலர்கள் பரிசு கிடைத்துள்ளது. இளம் வயதில் லொட்டரியில் பரிசு வென்ற எத்தனையோ பேர் பணத்தால் சீரழிந்ததைக் குறித்த செய்திகளைக் கேட்டிருக்கிறோம்.Read More →

Reading Time: < 1 minuteரொறன்ரோவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஜனவரியில் குடியிருப்புகளின் விலையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 44.6% அளவுக்கு வீட்டு விலை சரிவடைந்துள்ளது. ஜனவரி மாதத்தில் மொத்தம் விற்பனையான குடியிருப்புகளின் எண்ணிக்கை 3,100 என தெரியவந்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்த எண்ணிக்கையானது 5,594 என இருந்தது. சராசரி விற்பனை விலை 16.4 சதவீதம் குறைந்து $1.04 மில்லியனாக இருந்தது.Read More →

Reading Time: < 1 minuteஅமெரிக்க வான்வெளியில்ல் பறந்த சீன இராட்சத பலூன் விவகாரம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கனடா விமானிகளுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடாவின் மரமற்ற பரந்த புல்வெளி பிரதேசங்களான ஒன்ராறியோ மற்றும் கியூபெக் பகுதிகளின் மீது பறக்கும் விமானிகள் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும், அமெரிக்க வான்வெளியில் காணப்பட்ட பலூன்கள் போன்று சந்தேகத்திற்குரிய நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு தகவல் தெரிவிக்கவும் கோரியுள்ளனர். தொடர்புடைய கண்காணிப்பு பலூன் கனடா வான்வெளியிலும் காணப்பட்டுள்ளது எனவும்,Read More →

Reading Time: < 1 minuteகனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவிற்கான ஆதரவு குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக மேற்கு கனேடிய பகுதிகளில் ட்ரூடோ தொடர்பிலான விமர்சனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அண்மையில் முன்னெடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. வேறும் ஒருவர் பிரதமராக இருந்திருந்தால் தமது மாகாணம் தற்போதைய நிலைமையை விடவும் நல்ல நிலையில் இருந்திருக்கும் என்ன கனேடியர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். கருத்துக் கணிப்பில் பங்கேற்ற சுமார் 52 வீதமான கனேடியர்கள் இந்த விடயத்தை தெரிவித்துள்ளனர்.Read More →

Reading Time: < 1 minuteகடந்த ஆண்டைவிட பொது போக்குவரத்தை பயன்படுத்துவது பாதுகாப்பின்மையை உணர்த்துவதாக பெரும்பாலான ஒன்ராறியோ மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர். வெள்ளிக்கிழமை ரொறன்ரோ பகுதியில் போக்குவரத்தில் அல்லது அதற்கு அருகில் வன்முறை சம்பவங்கள் நடந்துள்ள நிலையில், ஒன்ராறியோ மக்களிடம் இருந்து இந்த கருத்து வெளியாகியுள்ளது. வெளியான கருத்துகளின் அடிப்படையில், மற்ற மாகாணங்கள் மற்றும் பிராந்தியங்களுடன் ஒப்பிடும்போது, பொதுப் போக்குவரத்தில் பெரும்பாலான ஒன்ராறியோ மக்கள் குறைவான பாதுகாப்பை உணர்கிறார்கள் என தெரியவந்துள்ளது. சுமார் 66% ஒன்ராறியோ மக்கள்Read More →

Reading Time: < 1 minuteகனேடிய பெண்கள் இருதய நோய்கள் மற்றும் பக்கவாதம் போன்றவற்றினால் இளவயதிலேயே மரணிக்கும் சாத்தியங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விடயம் தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கனடாவின் இருதய மற்றும் பக்கவாத அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோயை கண்டறிதல் மற்றும் சிகிச்சை அளித்தல் ஆகிய விடயங்களில் பின்தங்கிய நிலைமை காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மாரடைப்பு ஏற்படும் அரைவாசிக்கும் மேற்பட்ட பெண்களுக்கான நோய் அறிகுறிகள் அவதானிக்கப்படுவதில்லைRead More →

Reading Time: < 1 minuteஒன்றாரியோ மாகாணத்தில் ஷாப்பிங் மால் ஒன்றில் கொள்ளைச் சம்பவமொன்று இடம் பெற்றுள்ளது. சினிமா பாணியில் இந்த துணிகர கொள்ளை சம்பவம் இடம் பெற்றுள்ளது. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பில் வெளியான தகவல்கள் கியூபெக்கைச் சேர்ந்த பெண் ஒருவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏனெனில் இந்த கொள்ளைக்காக பயன்படுத்தப்பட்ட கருப்பு நிற அவுடு கார் குறித்த பெண்ணுக்கு சொந்தமானது எனவும் இந்த கார் களவாடப்பட்டிருந்தது எனவும் தெரிவிக்கப்படுகிறது. டெய்லர் அன்னா கோபின்கர் (Taylor-AnnaRead More →

Reading Time: < 1 minuteசீனாவில் இருந்து வெளியேறிய 10,000 உய்குர் அகதிகளுக்கு அடைக்கலம் அளிப்பதற்கான பிரேரணை கனடா நாடாளுமன்றம் புதன்கிழமை ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது. சீனாவில் உய்குர் மற்றும் துருக்கிய இஸ்லாமியர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் ஒடுக்குமுறைகள் இன அழிப்பு என்றே கனடா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அடையாளப்படுத்தி வருகிறது. இந்த நிலையில், கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 2021 பிப்ரவரி மாதம் முக்கிய முடிவொன்றை முன்னெடுத்தனர். இதன்படியே, சீனா முன்னெடுப்பது இன அழிப்பு என கனடா நிர்வாகம்Read More →

Reading Time: < 1 minuteகனடா அரசு, ஐ எஸ் அமைப்பில் இணைந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் கனேடிய பெண்கள் மற்றும் சிறுவர்களையும், சில ஆண்களையும் சிரியாவிலிருந்து கனடாவுக்கு அழைத்துவர திட்டமிட்டுவருகிறது. ஆனால், ஐ எஸ் அமைப்பால் பயங்கரமாக பாதிக்கப்பட்ட யாஸிடி இனத்தவர்கள், அந்த கனேடியர்களை கனடாவுக்கு அழைத்துவரவேண்டாம் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்கள். அதாவது, ஐ எஸ் அமைப்பினர் இந்த யாஸிடி இனத்து ஆண்களைக் கொலை செய்து, பெண்களையும் பிள்ளைகளையும் பிடித்து அடிமையாக்கியுள்ளார்கள். பெண்கள், வயதுRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் சிலவகை ஸ்வட்டர்கள் மட்டும் ஹுடிகள் (sweaters and hoodies) என்பனவற்றை பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரபல ஸ்வெட்டர் ஹுடிகள் உற்பத்தி நிறுவனமான ஹெலி ஹான்சன் நிறுவனத்தின் உற்பத்திகள் தொடர்பிலே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வகை ஸ்வெட்டர்கள் மட்டும் ஹுடிகள் சந்தையில் இருந்து மீளப் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 130000 ஸ்வெட்டர் வகைகள் இவ்வாறு மீள பெற்றுக் கொள்ளப்பட உள்ளன. இந்த ஷட்டர்Read More →

Reading Time: < 1 minuteஒன்றாரியோ சிறைகளில் கைதிகளின் மரண எண்ணிக்கை வெகுவாக உயர்வடைந்துள்ளதாக அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அண்மைய ஆண்டுகளில் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் மரணங்கள் வெகுவாக உயர்வடைந்துள்ளது. மாகாண பிரதம பிரேதப் பரிசோதகரின் அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்கட்டப்பட்டுள்ளது. கடந்த 2014ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் 186 மரணங்கள் பதிவாகியுள்ளன. மித மிஞ்சிய அளவில் மருந்து மாத்திரைகளை உட்கொள்ளல், தற்கொலைகள் மற்றும் இயற்கை காரணிகளினால் இவ்வாறு மரணங்கள்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் மார்க்கம் பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் 2 மாத சிசுவொன்று படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. வுட்பைன் அவன்யூவில் இருந்து கிடைக்கப் பெற்ற தொலைபேசி அழைப்பின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக யோர்க் பிராந்திய பொலிஸார் தெரிவிக்கின்றனர். இரண்டு மாதங்களேயான சிசு படுகாயமடைந்த நிலையில் காணப்பட்டதாகவும், உடனடியாக அந்த சிசுவை வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் சிசுவின் அருகாமையிலிருந்த நபர் ஒருவரை பொலிஸார்Read More →

Reading Time: < 1 minuteசுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னதாக கனடாவிற்கு வருவதற்கு உதவியவர்களை தேடி அவர்களுக்கு நன்றி பாராட்டும் முயற்சியில் கனேடிய பிரஜையொருவர் இறங்கியுள்ளார். தற்பொழுது அல்பர்ட்டாவில் வாழ்ந்து வரும் இவோ சிகோ என்ற நபரே இவ்வாறு தனக்கு உதவியவர்களை தேடி வருகின்றார். கடந்த 1994ம் ஆண்டு மத்திய பொஸ்னியாவில் இராணுவ பொலிஸ் பிரிவில் கடமையாற்றிய போது சிகோவிற்கு சந்திக்க கிடைத்த இளம் கனேடிய குழுவொன்றே தாம் கனடா வருவதற்கு உதவியதாக தெரிவித்துள்ளார். இந்தRead More →

Reading Time: < 1 minuteகனடாவில், தற்போது மின்னணு கனேடிய குடியுரிமைச் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. இது, காகிதத்தில் அச்சிடப்பட்ட சான்றிதழுக்கு ஒரு மாற்றாகும். 2023 ஜனவரி 4ஆம் திகதி முதல், நீங்கள் கனேடிய குடியுரிமைக்காக விண்ணப்பித்தாலோ அல்லது குடியுரிமைச் சான்றிதழுக்கு விண்ணப்பித்தாலோ, குடியுரிமைச் சான்றிதழ் காகித வடிவில் வேண்டுமா அல்லது மின்னணுச்சான்றிதழ் வேண்டுமா என்பதை நீங்கள் முடிவு செய்யலாம் என பெடரல் அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. கனேடிய குடியுரிமைச் சான்றிதழ் என்பது,Read More →