Reading Time: < 1 minuteறொரன்டோவில் ஓடும் பஸ்ஸில் பயணித்த 12 வயது சிறுமியொருவரை தாக்கிய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 32 வயதான நபர் ஒருவரை பொலிஸார் இவ்வாறு கைது செய்துள்ளனர். இன வெறுப்பு சொற்களை பயன்படுத்தி கடுமையாக திட்டியதுடன் குறித்த நபர் சிறுமியை தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கிழக்கு றொரன்டோவின் டான்போர்த் மற்றும் பிரதான வீதிக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருந்த நபர் சிறுமியையும் ஏனைய பயணிகளையும் அச்சுறுத்தியதாகRead More →

Reading Time: < 1 minuteகனடாவில், நாடு முழுவதிலும் பணவீக்கம் குறைவடைந்துள்ள நிலையில் மக்கள் உணவுப் பொருள் விலை அதிகரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ளனர். உணவுப் பொருட்களின் விலைகள் தொடர்ச்சியாக உயர்வடைந்து செல்லும் நிலைமையை அவதானிக்க முடிகின்றது. இதன் காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதியளவில் உணவுப் பொருட்களின் விலைகளில் சிறிதளவு வீழ்ச்சியை எதிர்பார்க்க முடியும் என பொருளியல் நிபுணர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்னர். கடந்த ஜனவரி மாதம் உணவுப் பொருட்களின் விலைகள் வருடாந்த அடிப்படையில்Read More →

Reading Time: < 1 minuteஇனி எங்களுக்கு அகதிகள் வேண்டாம், அனைத்து புகலிடக்கோரிக்கையாளர்களையும் வேறு மாகாணங்களுக்கு அனுப்புங்கள் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவைக் கேட்டுக்கொண்டுள்ளார் கியூபெக் பிரீமியர். நீண்ட காலமாக பிரச்சினையை ஏற்படுத்தும் எல்லைகனடாவின் கியூபெக் மாகாணத்தில் அமைந்துள்ள Roxham Road என்ற பகுதியின் வழியாக ஏராளமான புகலிடக்கோரிக்கையாளர்கள் கனடாவுக்குள் நுழைகிறார்கள். இந்த பகுதி கியூபெக் மாகாணத்தில் அமைந்துள்ளது. ஆக, இந்த பகுதி வழியாக கனடாவுக்குள் நுழைவோர், கியூபெக் மாகாணத்தை வந்தடைகிறார்கள். இப்படி பல்லாயிரக்கணக்கனோர்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் எட்மோன்டன் நகரில் வாகனங்களின் சத்தம் பெரிதாக இருந்தால் அபராதம் விதிக்கப்படும் யோசனை முன்மொழியப்பட்டுள்ளது. பெரும் சத்தத்துடன் வீதியில் செலுத்தப்படும் வாகனங்கள் மீது இவ்வாறு அபராதம் விதிக்கப்பட வேண்டுமெனவும் இதற்காக சட்டமொன்று நிறைவேற்றப்பட வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எட்மோன்டன் நகரசபையின் உறுப்பினர் மைக்கல் ஜான்ஸ் இந்த பிரேரணையை சமர்ப்பித்துள்ளார். தற்பொழுது அதிக சத்தத்துடன் செலுத்தப்படும் வாகனங்களின் சாரதிகளுக்கு 250 டொலர்கள் அபராதம் விதிக்கப்படுகின்றது. எனினும் இந்த அபராதத் தொகையை 1000Read More →

Reading Time: < 1 minuteஉலகின் முதல் நிலை இனிய பொழுதுபோக்கு நிறுவனங்களில் ஒன்றான netflix ஊடாக திரைப்படங்கள் வெப் சீரிஸ்கள் போன்றவற்றை பார்ப்பவரா நீங்கள் அவ்வாறானால் இந்த எச்சரிக்கை உங்களுக்கானது. Netflix பயன்படுத்தும் அதிக வாடிக்கையாளர்கள் தங்களது கடவுச்சொற்களை பிற நபர்களுடன் பகிர்ந்து கொள்வதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. அதாவது netflix சந்தாதாரர்கள் அல்லாதவர்கள் அந்த வசதியை பயன்படுத்தி கொள்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த மோசடியை தவிர்க்கும் நோக்கில் netflix கனடா நிறுவனம் கடவுச்சொற்களை பகிர்வோருக்குRead More →

Reading Time: < 1 minuteகொழும்பு தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கடந்த 15ம் திகதி அதிகாலை இடம்பெற்ற விபத்தில் சிக்கி அம்பாறை – திருக்கோவில் பிரதேசத்தில் சகோதர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்தவர்கள் கனடாவில் இருந்து தாயகத்திற்கு சென்றவர்கள் என கூறப்படுகின்றது. இந்த விபத்து தொடர்பாக தெரியவருகையில், கொழும்பு – பம்பலப்பிட்டியில் உள்ள சகோதரி சுகவீனமடைந்த நிலையில், அவரை பார்வையிடுவதற்காக கடந்த 14ம் திகதி மாலை திருக்கோவிலில் இருந்து அவர்களுடைய காரில் கொழும்பு நோக்கிRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் புதிய வைரஸ் தொற்று குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நோரோ வைரஸ் என்ற வைரஸ் தொற்றின் பரவுகை அதிகரித்துள்ளது. கோவிட் பெருந்தொற்று ஏற்படுவதற்கு முன்னரான காலப் பகுதியில் நிலவிய அதேயளவு வீரியத்துன் இந்த வைரஸ் தொற்று பரவி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த வைரஸ் தொற்றினால வாந்திபேதி நோய் ஏற்படக்கூடிய அபாய நிலைமை காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பொதுவாக இந்த வைரஸ் தொற்று நவம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையில் நீடிக்கும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் ஆசிரியை வீடோன்றில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்றில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் மில்டன் பகுதியில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இரண்டு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஆசிரியை ஒருவர் தனது மகனுடன் வாழ்ந்து வந்த வீட்டில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டுக்குள் பிரவேசித்த இரண்டு சந்தேக நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த துப்பாக்கிச்Read More →