Reading Time: < 1 minuteகனடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர். வோகனின் ஜேன் வீதி மற்றும் ரதர்போர்ட் ஆகிய வீதிகளுக்கு இடையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சந்தேக நபரும் உயிரிழந்துள்ளார். பொலிஸாருக்கும் சந்தேக நபருக்கும் இடையில் ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டில் குறித்த சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். நபர் ஒருவர் ஆறு பேர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் ஐந்து பேர் கொல்லப்பட்டதுடன்Read More →

Reading Time: < 1 minuteகனடா செல்லும் ஆசையால் வியட்னாமில் உயிரிழந்த யாழ் கிரிதரன் உடல் நாட்டுக்கு நேற்றையதினம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக கப்பல் மூலமாக கனடா செல்ல முற்பட்டிருந்த இலங்கையர்கள் 300 பேர் வியட்நாம் அருகே படகு பழுதடைந்ததால விய்ட்நாமில் தங்க வைப்பட்டிருந்தனர். இவ்வாறு அங்கு தங்கவைக்கபப்ட்டிருந்தவர்கள். அவர்களை நாட்டுக்கு அழைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்த நிலையில், நாட்டுக்கு தாம் மீளவும் திருப்பி செல்ல போவதில்லை என தெரிவித்து இருவர் தற்கொலைக்கு முயன்ற நிலையில் அதில்Read More →

Reading Time: < 1 minuteகனேடிய இளம் மருத்துவர்கள் வெளிநாடு செல்ல மிகுந்த ஆர்வம் காட்டி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் சுகாதார பணியாளர்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், இளம் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் வெளிநாடு செல்வதற்கு நாட்டம் காட்டி வருகின்றனர். தங்களுக்கு நாட்டில் உரிய சந்தர்ப்பங்கள் கிடைக்கப் பெறுவதில்லை என இளம் மருத்துவர்கள் வருத்தம் வெளியிட்டுள்ளனர். அதிக எண்ணிக்கையிலான இளம் கனேடிய மருத்துவர்கள் நாட்டுக்கு வெளியே பயிற்சி சந்தர்ப்பங்களை எதிர்பார்ப்பதாக ஹாலிபிக்ஸ்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் மளிகைக் கடைகளில் அதிகளவில் களவுச் சம்பவங்கள் பதிவாகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. பணவீக்கம் மற்றும் ஊழியப்படை பற்றாக்குறை போன்ற ஏதுக்களினால் இவ்வாறு இவ்வாறு களவுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஒக்ரோபர் மாதம் அதற்கு முன்னைய ஆண்டு ஒக்ரோபர் மாதத்தை விடவும் உணவுப் பொருள் விலை 11 வீதமாக உயர்வடைந்துள்ளது. பணவிக்கம் காரணமாக உணவுப் பொருள் விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் அதிகளவானவர்கள் களவாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பொருளாதாரம்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் சில நிமிடங்கள் இடைவெளியில் காதலன் மற்றும் காதலியின் கார்கள் களவாடப்பட்டுள்ளன. கெவிட் நய்முட்ரா என்பவரின் வாகனம் களவாடப்பட்டுள்ளதுடன் அவரது காதலியான பாய்ஜீ சியாச்சாவின் வாகனமும் களவாடப்பட்டுள்ளது. களவாடப்பட்ட காதலின் காரைப் பயன்படுத்தி காதலியின் காரைக் களவாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஒன்றாரியோ மாகாணத்தின் லண்டன் பகுதியில் இவ்வாறு கார்கள் களவாடப்பட்டுள்ளன. முதல் கார் காணாமல் போனபோதே பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் இரண்டாவது வாகனத்தையும் கொள்ளையர்கள் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். காதலனின் காரில்Read More →

Reading Time: < 1 minuteகனேடிய நகரமொன்றில், கனடா எல்லை பாதுகாப்பு ஏஜன்சியின் வரலாற்றிலேயே முதன்முறையாக மிகப்பெரிய அளவில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ள விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கப்பல்களில் பார்சல்களை அனுப்பும்போது, அவை ஆடாமல் இருப்பதற்காக அவற்றை shipping pallets என்னும் மரம் அல்லது பிளாஸ்டிக்காலான ஸ்டாண்ட் மீது வைப்பார்கள். அந்த ஸ்டாண்டின் அடியிலுள்ள வெற்றிடங்களில் மறைத்துவைத்து போதைப்பொருளைக் கடத்தியுள்ளார்கள். இந்த சம்பவம் வான்கூவர் துறைமுகத்தில் நடந்துள்ளது. அந்த shipping palletsகளில் ஏதோ அசாதாரணமாக இருப்பதைக் கவனித்தRead More →

Reading Time: < 1 minuteபிரித்தானியாவில் Strep A பாதிப்புக்கு 19 சிறார்கள் உயிரிழந்த நிலையில், தற்போது கனடாவில் பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Strep A பாதிப்புகனடாவின் மாண்ட்ரீலில் Strep A பாதிப்புக்கு இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. Strep A பாதிப்புக்கு மாண்ட்ரீலில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ள நிலையில், சிறார்களில் ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் துரித நடவடிக்கை முன்னெடுக்குமாறு சுகாதார நிபுணர்களை பொது சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.Read More →

Reading Time: < 1 minuteஹெய்ட்டிக்கு ஆயுதங்களை அனுப்பி வைக்க உள்ளதாக கனேடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. பெருந்தொக்காயன ஆயுத வாகனங்களை கனடா இவ்வாறு அனுப்பி வைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வன்முறைகளுடன் தொடர்புடைய தனிப்பட்ட நபர்களுக்கு எதிராக கனடா தடைகளை அறிவித்துள்ளது. கனேடிய அரசாங்க பிரதிநிதிகள் மூவர் ஹெய்ட்டிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர். இந்த பிரதிநிதிகள் ஹெய்ட்டி தேசிய பொலிஸாருடன் இணைந்து செயற்படுவார்கள் எனவும், ஹெய்ட்டியின் தேவைகள் குறித்து மதிப்பீடு செய்வார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கியRead More →